Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

 

சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 
நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டு காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் அபரிமிதமானது. அசாதாரணமானது. முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது.

2010-ம் ஆண்டில் கட்சி தொடங்கியபோதும் மக்களுக்கான களத்தில் நின்று மக்களுக்கானவர்கள் என நிரூபித்துவிட்டே, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக களம்கண்டது நாம் தமிழர் கட்சி. பாலியல் சிறுபான்மையினரான திருநங்கையைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது. வாக்கு அரசியலுக்காக வேலை செய்திடாது, நாளைய தலைமுறையினருக்கான மாற்று அரசியலை முன்வைத்து சமூகக்கடமை ஆற்றியது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கி பாலியல் பேதம் முறித்து நின்றது.

முன்மாதிரியான அரசியலை முன்வைத்து, முற்போக்கை முழுவதுமாக கடைபிடித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை கட்டியெழுப்புகிற நாம் தமிழர் கட்சியின் அடுத்தக் கட்டப்பாய்ச்சலாக, அதிகாரத்தை அடையும் பெரும்போரில் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலை சமரசமின்றி எதிர்கொண்டு தனித்து சமர்க்களம் புகுகிறது நாம் தமிழர் கட்சி.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனூடே வாக்குகளைப் பெற்று ஜனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழக்கம்போல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது.

வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிட இருக்கிறோம். அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம். இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம். புரட்சி எப்போதும் வெல்லும், நாம் தமிழர் ஆட்சி அதனைச் சொல்லும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/02080628/2406791/Tamil-News-TN-Assembly-Election-2021-Naam-Thamizhar.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் வேட்பாளர்கள் இன்று அறிமுகம்.. சீமான் எந்த தொகுதியில் போட்டி?

The-inaugural-meeting-of-the-234-candidates-of-the-Naam-Tamilar-Party-will-be-held-in-Chennai-this-evening-

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று 234 தொகுதிகளின் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசுகிறார். கடந்த முறை கடலூர் தொகுதியில் சீமான் போட்டியிட்ட நிலையில், தற்போது அவர் எந்த தொகுதியில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

image

 

வழக்கம்போல இத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் வேலைகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. 234 தொகுதிகளின் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டது. இவர்களில் 117 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

http://www.puthiyathalaimurai.com/newsview/95342/A-23-year-old-man-has-been-arrested-in-Pokso-for-sexually-harassing-an-8-year-old-girl.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்... அதிரடியாக அறிவிக்கும் 'நாம் தமிழர்' சீமான்!

234 candidates on the same platform ... 'Naam Tamilar' Seeman announces

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இன்னும் சில கட்சிகளில் கூட்டணி  தொகுதிப் பங்கீட்டில் இழுபறி என்பது நீடித்தே வருகிறது. இந்த நிலையில் வரும்  சட்டமன்ற தேர்தலையும் தனித்து எதிர்கொள்கிறது 'நாம் தமிழர் கட்சி'. ஏற்கனவே இதற்கான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

 

கடந்த 2019  நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆண் வேட்பாளர்களுக்கு இணையாக பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பில் களமிறக்கப்பட்டனர். இந்த தேர்தலிலும் மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி  50 சதவீதத்திற்கும் மேலான வேட்பாளர்களை அறிவிதித்திருந்தது. இந்நிலையில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்த இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றனர். இத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட இருக்கும் நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை பொதுக்கூட்டத்தில் தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு ஆவணமும் பொதுக்கூட்டத்தில் வெளியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/234-candidates-same-platform-naam-tamilar-seeman-announces

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.