Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளாத்திக்குள சமரில் ஒரு பற்றாலியன் படையினர் இழப்பு: சண்டே ரைம்ஸ்.

Featured Replies

விளாத்திக்குள சமரில் ஒரு பற்றாலியன் படையினர் இழப்பு: சண்டே ரைம்ஸ்.

வவுனியா - மன்னர் எல்லையில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் கடந்த 02.06.07 இல் இடம்பெற்ற சமரில் படையினர் கொல்லப்பட்டு, காயமடைந்தது, காணாமற் போனோர் என ஏறத்தாழ ஒரு பற்றாலியன் படையினரை இழந்துள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

சண்டே ரைம்சில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுப் பத்தியின் முக்கிய பகுதிகள்:

ஓமந்தை நுழைவுப் பாதைக்கு மேற்காக முன்னகர்வுகள் மூலம் படையினர் தமது முன்னணி நிலைகளை முன்னகர்த்தியிருந்தனர். இந்த பகுதிகளில் மேலதிக பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு ஜூன் 2 ஆம் நாள் காலை இராணுவத்தின் 56 ஆவது படையணியும் (4 பற்றாலியன்கள்) 57 ஆவது படையணியும் (7 பற்றாலியன்கள்) கல்மடுவுக்கு வடக்கு மற்றும் வடக்கு மேற்காக விளாத்திக்குளம் பகுதியில் படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன.

இதன் போது கடும் மோதல்கள் இடம்பெற்றன. அதன் பின்னர் அதே தினம் இரவு 8.00 மணியளவில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை தொடுத்தனர். விடுதலைப் புலிகளின் சில குழுவினர் படையினருடன் மிக நெருக்கமாக நின்று சமர் புரிந்துள்ளனர். இந்த உக்கிர சமர் சுமார் 7 மணித்தியாலம் வரை நீடித்தது.

அதனைத் தொடர்ந்து படையினர் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். பின்னர் விடுதலைப் புலிகள் 130 மி.மீ பீரங்கித் தாக்குதலை தொடுத்தனர். அதில் ஒரு எறிகணை படையினரின் பம்பைமடுவுக்கு தென் கிழக்காக உள்ள எறிகணைக்களஞ்சியம் மீது வீழ்ந்ததினால் 800-க்கும் மேற்பட்ட 130 மி.மீ எறிகணைகள் வெடித்துச் சிதறின. அது பெரும் வெடியோசைகளையும், தீப்பிழம்புகளையும் உருவாக்கின.

இந்த சமரின் போது விடுதலைப் புலிகள் படையினரின் முன்னரங்கத்திற்குள் ஊடுருவ முற்பட்டனர். சமர் பல நாட்கள் நீடித்தது. அந்த பகுதிக்கு மீண்டும் முன்னகர முயன்ற படையினர் கடும் எதிர்ப்பை சந்தித்தனர்.

தமது இழப்புக்கள் தொடர்பாக படையினர் மௌனமாக உள்ளனர். உயர் படைத்தரப்பு வட்டார தகவல்களின் படி 5 அதிகாரிகளும் 67 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். இரு அதிகாரிகளும் 24 படையினரும் காணாமல் போயுள்ளனர். 20 அதிகாரிகளும், 298 படையினரும் காயமடைந்துள்ளனர்.

இந்த சமரில் 800 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இது மிக அதிகமான தரவு. ஏனெனில் அண்மைய மாதங்களில் கொல்லப்பட்டுள்ள மற்றும் காயமடைந்துள்ள விடுதலைப் புலிகள் தொடர்பாக படைத்தரப்பால் கூறப்படும் புள்ளி விபரங்கள் படை உயரதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்த சமரின் போது காயப்பட்டவர்களை எற்றச் சென்ற பவள் கவச வாகனம் - 1, ஜீப் - 1, ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன இழக்கப்பட்டதுடன், 152 மி.மீ பீரங்கி ஒன்றும் சேதமடைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

சிறிலங்காவில் 2 வருடங்களில் 10,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தப்பியோட்டம்.

கடந்த 2005 ஆண்டு ஐனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது:

படையினர் தமது படைவலுவினை 50,000 பேரினால் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இராணுவத்திற்கு 25,000 பேரும், கடற்படைக்கு 15,000 பேரும், வான்படைக்கு 10,000 பேரும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவும் தமது படைக்கு ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளை தமது சொந்த இணைப்புக் குழுவினூடாக மேற்பார்வை செய்ய உள்ளது.

இராணுவத்தின் தரவுகளின் படி 100,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த பலம் காகிதத்தில் இருந்தாலும் பிரித்தானியாவின் இராணுவத்தின் தொகையை விட அதிகம். இருந்த போதும் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக இராணுவத்தினரின் பதிவேடுகள் கூறுகின்றன.

சிலர் தொடர்ச்சியான பொது மன்னிப்புக்களின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த ஜனவரி 20 ஆம் நாள் முதல் பெப்ரவரி 12 ஆம் நாள் வரை இறுதியான பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன் போது 3,979 பேர் மீண்டும் சேவைக்கு திரும்பியிருந்தனர்.

இதனுடன் சமர்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரின் வெற்றிடங்களும் உள்ளன. படையினரின் பலத்தை அதிகரிப்பதில் அதிகாரிகள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ளன.

சாதாரணமாக ஒரு பற்றாலியன் 855 பேரைக்கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆனால் சிறிலங்காப் படையில் உள்ள சில பற்றாலியன்கள் 400 - 500 துருப்புக்களை கொண்டாகவே உள்ளது. எனவே நலிவடைந்த பற்றாலியன்களை இணைத்து உரிய எண்ணிக்கை கொண்ட பற்றாலியன்களை உருவாக்கினால் தான் முழுமையான பலனை அடைய முடியும் என சிலர் கருதுகின்றனர்.

எனினும் மற்றவர்களின் கருத்து வேறாக உள்ளது. அதவது நலிவடைந்த பற்றாலியன்களை அவ்வாறே பேணவேண்டும் அப்போது தான் அவர்கள் சரியாக இயங்க முடியும். முக்கியமாக படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு விரைவான பதவி உயர்வுகளுக்கான வாசலை திறந்துவிடும்.

தற்போது நடைபெறும் படைச்சேர்ப்பு முடிந்ததும் இராணுவத் தளபதியின் பதவி நிலை லெப். ஜெனரல் தரத்தில் இருந்து நான்கு நட்சத்திர ஜெனரல் தரத்திற்கு உயர்ந்து விடும். இதே போன்ற பதவி உயர்வுகள் கடற்படை மற்றும் வான்படையிலும் ஏற்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.