Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து விதமான உதவிகளையும் வழங்கத் தயாராகிவி்ட்ட டில்லி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து விதமான உதவிகளையும் வழங்கத் தயாராகிவி்ட்ட டில்லி! -(கலைஞன்)

[24 - June - 2007]

* ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்

புலிகளை அழிக்க இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கத் தயாரென்ற இந்தியாவின் பகிரங்க அறிவிப்பு தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல்கள், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி விலக்கக்கோரும் திராவிடர் கழகத்தின் பொதுக் குழுத் தீர்மானமென கடந்த வாரம் முழுவதும் சூடான விடயங்கள் அரங்கேறியிருந்தமையால் இலங்கையிலும் அதன் பிரதிபலிப்புகள் சில வெளிப்படுத்தப்பட்டன.

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கு இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் தாம் வழங்குவோமென இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள நிலையில் தமது உதவிகளை நியாயப்படுத்துவதற்கான சில உள்வீட்டு வேலைகளிலும் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டிலேயே பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி இந்தியாவின் நிலைப்பாட்டை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தியதுடன் விடுதலைப் புலிகளின் விமானப் படை குறித்த இந்தியாவின் ஆத்திரத்தையும் மீண்டுமொரு தடவை கொட்டித் தீர்த்திருந்தார்.

இலங்கையின் இறையாண்மை ஒருமைப்பாடு குறித்து பெரிதாக அக்கறைப்பட்ட அந்தோனி தமது நாட்டுக் குடிமக்களான தமிழக மீனவர்கள் தினமும கடலில் இலங்கைக் கடற்படையால் கொன்றழிக்கப்படுவது குறித்து மூச்சும் விடவில்லை.

கடந்த வாரத்தில் அடுத்தடுத்த இரு தினங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல்களினால் 5 மீனவர்கள் படுகாயமடைந்ததுடன் அவர்களின் மீன்பிடிப் படகொன்றும் மூழ்கடிக்கப்பட்டதுடன் பல படகுகள் சேதமாக்கவும்பட்டன.

தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கைக் கடற்படையினர் என்பதை பாதிக்கப்பட்ட மீனவர்கள் உறுதிப்படுத்திய போதும் இந்திய மத்திய அரசோ, தாயக அரசோ இலங்கை கடற்படைக்கெதிராக வாயைத் திறக்கவில்லை.

கடந்த 17 ஆம் திகதி இராமேஸ்வர மீனவர்கள் கச்சதீவுக்கருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு திடீரென படகுகளில் வந்தோர் தமிழக மீனவர்களின் படகுகள் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால், 4 மீனவர்கள் படுகாயமடைந்ததுடன் அவர்களின் படகொன்றும் மூழ்கடிக்கப்பட்டது. காயமடைந்த நிலையில் கடலில் தத்தளித்த மீனவர்களை ஏனைய படகுகளில் வந்த சக மீனவர்கள் காப்பாற்றினர்.

இத்தாக்குதலை நடத்தியவர்கள் தமிழக மீனவர்களின் 3 படகுகளையும் 12 மீனவர்களையும் கடத்திச் சென்று பின்னர் மறுநாளே விடுதலை செய்தனர். தம்மைக் கடத்திச் சென்றவர்கள் நெடுந்தீவுப் பகுதியிலேயே தடுத்து வைத்திருந்துவிட்டு விடுதலை செய்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவு இலங்கைக் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாகும். அங்கேயே கடத்திச் செல்லப்பட்ட மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், மீனவர்கள் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியதாக குற்றஞ் சாட்டிய இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் வெடி பொருட்களை கடத்தி வந்தபோதே படகு வெடித்து சிதறியிருக்கக் கூடும் எனவும் இச்சம்பவம் இந்திய கடல் பகுதியிலேயே இடம்பெற்றதாகவும் கூறியது.

முதலில் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறிய இலங்கைக் கடற்படை பின்னர் வெடிபொருள் கடத்தி வரப்படுகையிலேயே படகு வெடித்துச் சிதறியதாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிட்டது.

இலங்கைக் கடற்படையின் தகவலை இந்து நாளிதழ் எவ்வித தேடலுமின்றி ஆதாரங்களின்றி அப்படியே முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு தமிழக மீனவர்கள் வெடிபொருள் கடத்துகையிலேயே படகு வெடித்தது என தமது நாட்டு மீனவர்களையே குற்றம் சாட்டியது.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் விதமாகவே `இந்து' நாளிதழ் வெளியிட்ட வெளியிட்டு வரும் செய்திகள் அமைந்திருக்கின்றன.

தமிழக மீனவர்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அடுத்த நாளே மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். இத்தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கைக் கடற்படையினர் என்பதனை மீனவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஆனால், இதை மறுத்த இலங்கைக் கடற்படை தமது சீருடையை ஒத்த சீருடைகளை அணிந்து வந்த கடற்புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தது.

ஆனால், இவ்விரு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும் மத்திய அரசோ, தமிழக அரசோ எதுவித எதிர்ப்புணர்வுகளையும் வெளியிடவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையிலும் தமிழக மீனவர் பிரச்சினையிலும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி மௌனவிரதமிருந்து வருவது போல் தெரிகிறது.

கருணாநிதிக்கு இப்போது ஜனாதிபதித் தேர்தலும் கனிமொழிக்கு அமைச்சர் பதவியும் தான் தலையாய பிரச்சினையாகவுள்ளது.

இலங்கைக் கடற்படை கூறியது போல் தமிழக மீனவர் படகுகள் மீது புலிகள் தாக்குதல் நடத்துவதற்கான எவ்வித சந்தர்ப்பங்களுமில்லை. தமிழக மீனவர் படகுகள் மீதான வெடிகுண்டுத் தாக்குதல் கச்சதீவை அண்மித்த கடல் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. இப்பகுதி 24 மணிநேரமும் இலங்கைக் கடற்படையினர் கண்காணிப்புக்குள் இருக்கும். அவ்வாறான நிலையில் தமிழக மீனவர்களைத் தாக்க வேண்டுமென்பதற்காக புலிகள் தமது நேரத்தை செலவிட்டிருக்கமாட்டார்கள்.

சிலவேளைகளில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்களோ என ஆராய்ந்தால் அதற்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் தமிழ் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு இலங்கை கடற்படை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பாஸ் நடைமுறை, நேரக்கட்டுப்பாடு, கடலில் மீன்பிடிக்கும் தூரம் , படகுகளில் பொருத்தப்படும் இயந்திரங்களின் எண்ணிக்கை , அதன் வலு சோதனைகள் என சகலருக்கும் இலங்கைக் கடற்படை கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் எவ்வாறு தமிழ் மீனவர்கள் வெடிகுண்டுகளுடன் கடலுக்குள் செல்லமுடியும்?

இலங்கையரசும் இலங்கைக் கடற்படையும் தமிழக மீனவர்கள் மீது இனி மேல் எந்தவித தாக்குதல்களையும நடத்தாது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தமிழகத்தில் வைத்து முதலமைச்சர் கருணாநிதிக்கும் தமிழக மீனவர்களுக்கும் உறுதி தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது நடந்த இரு தாக்குதல்களும் இலங்கை கடற்படையினர்தான் நடத்தியதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் நாராயணனும் முதலமைச்சரும் கண்டும் காணாமலுமுள்ளனர்.

தமது நாட்டு மீனவர்களை கொன்றொழிக்கும் இலங்கைக் கடற்படையை ஆரத்தழுவி ஆசீர்வதிக்கும் இந்தியா, தனது மக்களைப் பாதுகாப்பதற்காக விமானப் படைப்பலம் பெற்றிருக்கும் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கத் துடித்துவருவதுதான் வியப்புக்குரியது.

இலங்கை கடற்படையால் தினமும் தமிழக மீனவர்கள் சாகடிக்கப்படுவதை தட்டிக்கேட்காத இந்தியா, தமது நாட்டுக்கு எந்தவித தொந்தரவையும் கொடுக்காத புலிகளை அழித்தொழிக்க முனைகின்றது.

புலிகளுக்கெதிரான போருக்கு இலங்கையரசுக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயாரென இந்தியா பகிரங்கமாக அறிவித்துவிட்டது. ஆனால், இலங்கையரசு சமாதான முயற்சிகள் தொடர்பில் எவ்வித முனைப்பும் காட்டாமலிருக்கையில் தான் ஆயுத உதவிகளை வழங்கினால் அது உலகின் கண்டனத்துக்குள்ளாகும் என்பதால் சில உள்வீட்டு வேலைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.

`நீங்கள் தமிழரின் பிரச்சினைக்கு எந்தவித தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காத நிலையில் நாம் உங்களுக்கு இராணுவ உதவிகளை செய்தால் அது உலகின் கண்டனத்துக்குள்ளாகும். எனவே, உலகை ஏமாற்றவும் எமது உதவியை நியாயப்படுத்தும் வகையிலும் தமிழர் பிரச்சினைக்கு ஏதாவது உப்புச் சப்பற்ற தீர்வுத்திட்டமொன்றை கால தாமதம் செய்யாது முன் வையுங்கள். அதன் பின்னர் நாம் பார்த்துக் கொள்கிறோம்' என்றவாறான செய்தியொன்றை இலங்கையரசுக்கு இந்திய உயர்மட்டம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதிபலிப்பே தற்போது இலங்கையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவை செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் சந்தித்த ஜனாதிபதி தீர்வுத் திட்டத்தை துரிதமாக தயார்படுத்துமாறு பணித்துள்ளார்.

அத்துடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் அடுத்த 6 வாரங்களுக்குள் திட்ட வரைவு சர்வகட்சி குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூரில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை இனப்பிரச்சினை விவாகாரத்தில் கொழும்பு நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென கூறியுள்ளார்.

தமிழரின் நியாய பூர்வ அபிலாஷைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் ஆனால், அந்த நியாயபூர்வ அபிலாஷைகளுக்காக இரு தசாப்தங்களுக்கு மேலாக போராடும் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாதெனவும் கூறியுள்ளார். அவ்வாறெனில் எப்படி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

இதற்கிடையில் தமிழகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற தி.மு.க. தோழமைக் கட்சிகளில் ஒன்றான திராவிடர் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை பதவி விலக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத் தமிழருக்கு மட்டுமின்றி தமிழகத் தமிழருக்கே துரோகமிழைக்கும் நாராயணன் பதவி விலக வேண்டுமென்பது பலராலும் ஆதரிக்கப்படும் விடயமாகவேயுள்ளது.

ஆனால், துணை ஜனாதிபதி பதவிக்கும் அமைச்சர் பதவிக்கும் அங்கலாய்த்துத் திரியும் தமிழக முதலமைச்சரும் அவரது கட்சியினரும் தற்போதைய சூழ்நிலையில் நாராயணன் விடயத்தில் மூச்சைக்கூட விடமாட்டார்கள்.

எனவே, தமிழகத்தை ஆட்சி புரியும் கட்சிகள் திருந்தும் வரை தமிழக மீனவர்களும் ஈழத்தமிழர்களும் கொல்லப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

நன்றி - தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது குடும்பநலனில் மட்டும் தீவிர அக்கறைகாட்டும் சாதாரணக் குடும்பத் தலைவர்களது சிந்தனையுடனேயே திரு கருணாநிதி அவர்கள் வாழ்ந்துள்ளதாகவே பதிவுகள் உள்ளன. இவர் திமுக என்ற அரசியல் நிறுவனத்தின் மூலம் தனது குடும்பத்தை நன்றாக வாழ வைத்துள்ளார்.

இனி இவர் மூலம் ஏதும் நன்மை கிடைக்குமென அதிகம் எதிர்பார்க்க முடியாது. இலங்கை விவகாரத்தில் ஈடுபட்டால் இவரது குடும்பத்திற்கு ஏதும் கிடைக்குமாயின் இவர் தலையிட வாய்ப்புண்டு. ஆனால் இவர் ஈடுபாடுகாட்டாமல் இருந்தால் இவரது குடும்ப நலன்களுக்கு வாய்ப்புகள் பல கிடைக்கினறன. இதை நாராயணன் நன்குணர்ந்து ஆவன செய்கிறார் போலும்.

- தனது ஆட்சி அதிகாரத்துக்கே டெல்லியை இறைஞ்சும் தமிழ்நாடு பெரிதாக ஏதும் செய்யாது விடினும் ஈழத்தமிழின மற்றும் தமிழகக் கடற்றொழிலாளிகளின் அழிவுக்கும் துணை போவதுதான் சோகம்.

- டெல்லியின் கொள்கைத் தீர்மானம் தெளிவாகிவிட்டது. நாராயணன் மாறினால் வேறொருவர் வந்து இதைத்தான் செய்வார். இலங்கையை எரிப்பதான தீர்மானம் வட இந்தியர்களுக்கு இதிகாச காலம் தொட்டே தொடரும் நடைமுறை.

- எதையும் எதிர்கொண்டு நீதியும் நேர்மையுமான தீர்வினை நிலைநாட்டி புதிய வரலாற்றை ஈழத் தமிழினம் இந்த நூற்றாண்டில் பதியும்.

??????????

கடலூரில் கைதான 6 இலங்கை மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பு

[24 - June - 2007] [Font Size - A - A - A]

கடலூரில் பிடிபட்ட இலங்கை மீனவர்கள் ஆறு பேரும் இலங்கை கடற்படையினரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடலூர் கடல் பகுதியில் ஏப்ரல் 1 ஆம் திகதி இலங்கை மீன்பிடி படகு தத்தளித்துக் கொண்டு இருந்தது. அந்தப் படகை தேவனாம்பட்டினம் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

படகில் இருந்த இலங்கை மீனவர்கள் ஆறு பேரையும் கடவுச்சீட்டு இல்லாமல் இந்திய எல்லைக்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்து சிறையிலடைத்தனர். இது குறித்து ஆட்சியர் ஆர்.டி.ஓ.ஆகியோர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடந்தது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் காற்றின் திசை மாறியதால் வழி தெரியாமல் இலங்கை மீனவர்கள் ஆறு பேரும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாகக் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, சிறையிலிருந்த இலங்கை மீனவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இலங்கை மீனவர்களை இலங்கை தூதரக அதிகாரி மெகிர்ராஜிடம் ஆட்சியர் ராஜேந்திர 8ரத்னு கடந்த 1 ஆம் திகதி ஒப்படைத்தார். பழுதடைந்த இலங்கை மீனவர்களின் படகு சரி செய்யப்பட்ட பின் 5 ஆம் திகதிக்குள் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து , மீனவர்கள் ஆறு பேரும் கடலூரிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். சில நாட்களில் படகும் சீர் செய்யப்பட்டது. ஆனால், இலங்கை கடற்படை அதிகாரிகள் சரியான தகவல் தெரிவிக்காததால் கடலூரில் தங்கியுள்ள மீனவர்களை இலங்கைக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது. இலங்கை தூதரக அதிகாரி மெகிர்ராஜ் கூறுகையில்;

மீனவர்களை இன்று 24 ஆம் திகதி அனுப்புமாறு இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு மீனவர்களும் இந்திய கடற்படை அதிகாரிகளால் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் இன்றைய தினம் ஒப்படைக்கப்படுவர் என்றார்.

http://www.thinakkural.com/news/2007/6/24/...s_page29737.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.