Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸாவுக்குள் முடக்கப்பட்டு விட்ட ஹமாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

-அ.ரஜீவன்-

மேற்குலகில் பெரிய நிம்மதிப் பெருமூச்சு காணப்படுகின்றது. ஹமாஸ் காஸாவிற்குள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதே அதற்குக் காரணம்.

பாலஸ்தீனத்திற்கான புதிய அரசாங்கத்தை (மிதவாதியான) சமாதானத்தை விரும்பும் ஜனாதிபதி மமூட் அப்பாஸ் மேற்குக்கரையில் அமைத்துள்ளார்.

எனினும், பாலஸ்தீனியர்கள் இதனை ஏற்கவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. ஹமாஸ் அரசாங்கம் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது என்பது முக்கியமானது. மமூட் அப்பாஸினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவர் (சலாம் பயாட்) தேர்தலில் 2% வாக்குகளைப் பெற்றார். பாலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸிற்கும் பிரதமருக்கும் இஸ்ரேலின் ஆதரவுள்ளமை இரகசியமானதொன்றல்ல.

ஜனவரி 2006 இல் ஹமாஸ் அமைப்பு தேர்தலில் போட்டியிடுவது எனத் தீர்மானித்த தருணத்திலிருந்து காஸா ஹமாஸிற்கும் பதாஹ்விற்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் மையமாக விளங்கி வருகின்றது.

ஹமாஸ் ஜனவரி 2006 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. பதாஹ் அமைப்பினை மக்கள் தோற்கடித்தமைக்கான பல காரணங்கள் உள்ளன. பாலஸ்தீனியர்கள் பதாஹ் அரசியல்வாதிகளை சுயநலம் மிக்கவர்களாக ஊழல் நிறைந்தவர்களாக அதிகார ஆசை பிடித்தவர்களாக காண்கின்றனர்.

மேலும் யசீர் அரபாத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சிகள் இஸ்ரேலின் நான்கு தசாப்த கால ஆக்கிரமிப்பினை உறுதிப்படுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் பாலஸ்தீனியர்கள் கருதுகின்றனர். அவர்களின் இந்த அச்சத்திற்குக் காரணங்களுண்டு. வெள்ளை மாளிகையில் அரபாத்தும் யிட்சாக் ரபினும் கைகுலுக்கிய போது காணப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமான யூத குடியேற்றவாசிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் தற்போது காணப்படுகின்றனர். மேற்குக்கரையை இஸ்ரேல் தனித்தனியாக முற்றுகையிட்டுப் பிரித்துள்ளதுடன் கிழக்கு ஜெருசலேத்தில் யூதக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. காஸாவை திறந்தவெளி சிறைச்சாலையாக்கியுள்ளது.

பாலஸ்தீன மக்கள் ஹமாஸிற்குக் கடந்த வருடம் ஆதரவு வழங்கியதற்கு அதன் கோஷங்களோ அவர்கள் இஸ்லாமிய தேசத்தில் வாழ விரும்புவதோ இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் மேற்கொள்வதோ காரணமல்ல.

ஹமாஸ், பதாஹ் போன்று ஊழலில் சிக்காததாக அலட்சியமற்றதாக காணப்படாததும் இஸ்ரேலின் நோக்கங்களுக்கும் அடிபணியாததுமே பாலஸ்தீன மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள காரணம். பாலஸ்தீன அதிகார சபை இஸ்ரேலின் சார்பில் தனது மக்களை நிர்வகிக்கும் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொண்டது. வெறுமனே பொலிஸாக செயற்பட்டது.

ஹமாஸ் இதற்கான மாற்றீடை வழங்கியது. அமெரிக்காவும் மேற்குலகும் ஹமாஸை பூதாகரமாக சித்தரித்து வருகின்றன. பாலஸ்தீனியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ள அரசியல், சமாதான நடைமுறைகளை ஹமாஸ் நிராகரித்ததற்கான காரணம் திரபுபடுத்தப்பட்டுள்ளது.

ஹமாஸ் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பினால் பதாஹ் இஸ்ரேல் இதனை விட மோசமான செயலில் ஈடுபட்டுள்ளன என பதிலளிக்க வேண்டி வரும். இஸ்ரேலிய பாலஸ்தீனிய மோதலில் புனிதர்கள் எவருமில்லை.

மேற்குலகின் ஹமாஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டை கபட நாடகமாக பாலஸ்தீனியர்கள் கருதுகின்றன்ர. கடந்த வருட தேர்தலுக்குப் பின்னர் ஹமாஸ் அரசாங்கத்திற்கான உதவியை மேற்குலகம் நிறுத்தியுள்ளது.

ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுக்கின்றது. முன்னர் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை அது பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

ஹமாஸை மேற்குலகம் வெறுப்பதற்கு அதன் இஸ்லாமிய கொள்கைகள் காரணமல்ல, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஒடுக்குமுறையை ஹமாஸ் எதிர்ப்பதே காரணம்.

இரண்டு தேசங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான சமாதானம் ஏற்படுவதற்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவிற்கு வருவதும் பிரதேச அடிப்படையிலான பாலஸ்தீன தேசம் உருவாவதும் அவசியம்.

எனினும், இது நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பதாஹ் அமைப்பின் தலைவர்கள் அனைத்தையும் மறந்து தமக்குக் கிடைத்த அதிகாரத்தை அனுபவிப்பதில் மாத்திரம் அக்கறையாகவுள்ளனர்.

இதற்கு மாறாக இரண்டு தேசங்களை அடிப்படையாகக் கொண்ட சமாதானத்திற்கான அடிப்படை நடவடிக்கைகளை ஹமாஸ் அமைப்பே முன்னெடுக்கின்றது. மமூட் அப்பாஸின் மிதவாதத்தை ஏற்றுக் கொள்வது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு துணைபோவதாக அமைகின்றது.

நீண்ட கால அடிப்படையில் இருதேச தீர்வுகள் சாத்தியமில்லாமல் போகலாம். பதாஹ் பாலஸ்தீன தேசத்திற்கான நிலங்கள் துண்டாடப்படுவதை தடுத்து நிறுத்த முடியாமல் அதற்கான விருப்பமில்லாததாக காணப்படுகின்றது.

மேற்குலகம் பாலஸ்தீன ஜனாதிபதியை ஆதரிப்பதற்கும் ஹமாஸை அரசாங்கத்தை அவர் கலைத்ததை நியாயப்படுத்துவதற்கும் இதுவே காரணமாகவுள்ளது. இஸ்ரேலிய பிரதமரை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி, பாலஸ்தீன ஜனாதிபதியும் பிரதமரும் பாலஸ்தீன மக்களை வேறு திசைக்கு அழைத்துச் செல்லக் கூடிய வகையில் பலப்படுத்தப்படுவார்கள் என புஷ் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான பொதுவான தந்திரோபாயத்தை இஸ்ரேலிய பிரதமருடன் இணைந்து உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நாடுகளும் ஹமாஸ் அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதை வரவேற்றுள்ளன.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் நேரடி உதவியை ஆரம்பிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளன.

http://www.thinakkural.com/news/2007/6/24/...s_page29762.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.