Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச அழுத்தப் பொறிக்குள் மெல்ல மெல்ல வீழும் கொழும்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-25

சர்வதேச அழுத்தப் பொறிக்குள் மெல்ல மெல்ல வீழும் கொழும்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங் கையின் "கீர்த்தி' கொடிகட்டிப் பறப்பது குறித்து இப்பத்தி யில் ஏற்கனவே சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டிருந்தோம். அக் கீர்த்தி மென்மேலும் பரவி வருவதை தற்போதைய செய்தி கள் உறுதிப்படுத்துகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸிலில், இலங்கை குறித்து விசேட கவனம் எடுக்க வேண்டும் எனப் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி ஆராயும் அளவுக்கு நிலைமை உயர்ந்து(?) சென்றிருக்கின்றது.

மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ. நாவின் கீழ்நிலை செயலாளர் நாயகம் கடந்த வெள்ளியன்று ஐ. நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, நெருக்கடிகள் நிறைந்த மோசமான நாடு என சூடான், லெபனான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகியவற்றுடன் வரிசைப்படுத்தி இலங்கையைத் தனியாகக் குறிப்பிட்டு விளக்கியிருக்கின்றார்.

மனிதப் பேரவலத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு அத்தியா வசிய மனிதாபிமானத் தொண்டு உதவிகளை மேற்கொள் ளும் சேவைப் பணியாளர்கள் பலர் படுகொலையுண்டமை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத கொழும் பின் "பெருமை' ஐ. நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இலங் கைத் தீவின் மகத்துவத்தை எடுத்துரைத்திருக்கின்றது.

அதேசமயம், இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர் பான டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைமைகளான நோர்வே, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இன்றும் நாளையும் ஒஸ்லோவில் கூடி, இலங்கை நிலைவரம் குறித்து ஆராய விருக்கின்றன. அப்போது இலங்கையின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் விடயம் குறித்தே சிறப்பாகக் கவனிக்கப்படும் என இப் போது அறிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு உதவி வழங்குவது மற்றும் இலங்கையில் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பது போன்ற விடயங் களைப் பின்தள்ளிவிட்டு, மனித உரிமைகள் இலங்கையில் மோசமாக மீறப்படுகின்றமை குறித்து ஆராயும் நிலைக்கு அவை தள்ளப்பட்டிருக்கின்றன.

ஆக, உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை களின் பணி உதவி வழங்குவதல்ல, உதவி பெறும் நாட்டில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுதல் குறித்து கரிசனை எடுத்தலே என்ற நிலைக்கு அவற்றைத் தள்ளியிருக்கின் றது கொழும்பு நிர்வாகம்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சு மூலம் நியாய மான தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அரசியல் பற்றுறுதியோ, தீர்க்க தரிசனமான பார்வையோ, உறுதியான கொள்கைத் திடசங்கற்பமோ, விட்டுக் கொடுக்கும் உளப்பூர்வமான மனப் பாங்கோ, நீதிமுறையான தாராளப்போக்கோ இல்லாமல், சிந்தனை வரட்சியிலும், பௌத்த சிங்கள மேலாண்மை வாத ஆதிக்கத்தின் பிடியிலும் பேரினவாதத்தின் திமிர்ச் செருக்கிலும் சிக்கிக்கிடக்கும் கொழும்பு அரசுத் தலைமை, குறுகிய சிந்தனைப் போக்கிலிருந்து வெளிப்படமுடியாத தனது செயற்றிறன் காரணமாக, வலுவான சர்வதேச சமூகத் தின் அழுத்த வலைக்குள் தன்னைத்தானே மெல்ல மெல்ல சிக்கவைக்கும் முட்டாள்தனத்தை ஆரவாரமாகத் தொடர் கின்றது.

இதன் வெளிப்பாடே சர்வதேச அரங்கில் இப்போது பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கின்றது.

இலங்கை முன்னெப்போதுமில்லாதவாறு சர்வதேசத் தின் கடும் நெருக்குவாரத்தை தற்சமயம் எதிர்கொள்ள ஆரம் பித்திருக்கின்றது.

அதன் ஓர் அங்கமாகவே கடந்த வெள்ளியன்று ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை கடுந்தொனியில் விமர்சிக் கப்பட்டமையைக் கொள்ள வேண்டும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். என்றுமில்லாதவாறு முதன்முறை யாக அன்றைய தினம்தான் இலங்கை ஏனைய அங்கத்துவ நாடுகளின் அதிருப்திக்கும், கடும் விமர்சனத்துக்கும் உள் ளாகியிருக்கின்றது.

""போர்க் குற்றங்களுக்கு இலங்கை உடந்தையாகவுள் ளது. மனிதாபிமானத் தொண்டுப் பணியாளர்கள் கொல் லப்படுகின்றார்கள். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் இங்கு மறுக்கப்படுகின்றன.'' என்றெல்லாம் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் இலங்கை குறித்து விமர்சிக்கப்பட்டி ருக்கின்றது.

தனது பொறுப்பற்ற மோசமான செயற்போக்குக் காரண மாக ஏற்கனவே சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கள் காப்பகம், ஆசிய மனித உரிமைகள் மையம் போன்ற சர்வதேச அமைப்புகளின் கடும் கண்டனங்களுக்கும், குற் றச்சாட்டுகளுக்கும் இலக்கான இலங்கை, இப்போது சர்வ தேச நாடுகளின் சீற்றத்துக்கும் எரிச்சலுக்கும் நேரடியாக இலக்காகத் தொடங்கியிருக்கின்றது.

இலங்கைக்கு எதிரான கருத்தியல் நிலைப்பாட்டை பல் வேறு நாடுகளும் தனித்தனியாக வெளிப்படுத்தும் நிலைமை மாறி, சர்வதேச அமைப்புகளின் மட்டத்தில் அவை ஒன்றுபட்டு வலிமையாகப் பிரதிபலிக்கும் நிலைமை தோன்றிவருகின்றது.

இது ஆழ்ந்து ஊன்றி கவனிக்கப்படவேண்டிய அம்சம்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச சிந்தனைப் போக்கு, கொழும்பு அரசை சர்வதேச அழுத்தப் பொறிக்குள் மாட்டவைக்கும் கருத்தியல் நிலைப்பாடாகத் தீவிரமடைந்து உரு மாறி வருவதைக் கவனிக்காமல் அல்லது அது குறித்து சிரத்தையே கொள்ளாமல் உதாசீனமாகச் செயற்படும் கொழும்பு அரசு, இந்தப் பொறுப்பற்ற போக்கின் மோசமான விளைவுகளை விரைவில் எதிர்கொள்ள நேரிடும் என்பது நிச்சயம்.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.