Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும்.2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர்.இந்நிலையில் இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன.

ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாக அனுஷ்டடிக்கப்படும். அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம்.இதேவேளை, அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு சிவில் சமூக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதன்படி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, பல்சமயங்களின் ஒன்றியம்-மட்டக்களப்பு, முதியோர் சம்மேளனம்-மட்டக்களப்பு, வெண்மயில் அமைப்பு-மட்டக்களப்பு, அமெரிக்கன் மிஷன்-மட்டக்களப்பு, சடோ லங்கா நிறுவனம்-மட்டக்களப்பு, அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம், தமிழர் நலன் காப்பகம்-மட்டக்களப்பு, சிவகுரு ஆதீனம்-யாழ்ப்பாணம், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு-மட்டக்களப்பு, புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு-திருகோணமலை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, உலக தமிழர் மாணவர் ஒன்றியம், இராவண சேனை-திருகோணமலை, வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளன.(15)

 

http://www.samakalam.com/எதிர்வரும்-திங்கட்கிழம-6/

 

 

தமிழ் தேசிய துக்க தினத்திற்கு யாழ் பல்கலை ஆதரவு!

 

ஓய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் மறைவையோட்டி எதிர்வரும் திங்கட்கிழமையை (5) தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்கியுள்ளது. FB_IMG_1617436659028.jpgIMG_20210403_132959.jpg

 

https://newuthayan.com/தமிழ்-தேசிய-துக்க-தினத்த/

 

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை துக்க தினமாக அனுஷ்டிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

 
D-4-696x348.jpg
 7 Views

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு அவர்களின் இறுதி அஞ்சலி நாளான திங்கட்கிழமை துக்க தினமாக அனுஷ்டிக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

1185ac4e-4a6e-4b5a-84d4-e67e19da517d-233

f30b36ef-b010-44be-9441-9befe64ec52e-225

(யாழ்.தர்மினி)

 

https://www.ilakku.org/?p=46335

  • கருத்துக்கள உறவுகள்

றிஷாட் பதியுதீன் மக்களிடம் அவசர கோரிக்கை

றிஷாட் பதியுதீன் மக்களிடம் அவசர கோரிக்கை

 

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று (2) யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.

ஓய்வு நிலை ஆயரின் பூதவுடலுக்கு நேற்று மாலை 2.45 மணி முதல் மக்கள் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் (3) பல ஆயிரக்கணக்கான மக்கள் இன மதம் இன்றி ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகினிற்னர்.

மேலும் முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்களும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் ஆயரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் ,அரச அதிகாரிகள் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் உற்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை மாலை 3 மணியளவில் ஆயிரின் பூதவுடல் மன்னார் ஆர் இல்லத்தில் இருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதே வேளை முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

எதிர் வரும் திங்கட்கிழமை அன்று மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயரின் இறுதி நல்லடக்கம் இடம் பெற உள்ளது.

அன்றைய தினத்தை மாவட்டத்தில் உள்ள மக்கள் மரியாதையின் நிமித்தம் தமிழ் முஸ்ஸீம் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு எதிர் வரும் திங்கட்கிழமையை (5) துக்க தினமாக அனுஸ்ரிக்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி எமது துயரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

எனவே முஸ்ஸீம் சமூகமும் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
 

-மன்னார் நிருபர் லெம்பட்-

http://tamil.adaderana.lk/news.php?nid=142217

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.