Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கச்சதீவுப் பகுதியில் தமிழக மீனவரின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவுப் பகுதியில் தமிழக மீனவரின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும்

[25 - June - 2007]

* தானம் கொடுத்ததை திருப்பிக் கேட்க வேண்டாம்

கச்சதீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவது என்பது முடிவில்லாத சோகத் தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இலங்கையில் இனக் கலவரம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிய காலகட்டத்தில் தொடங்கி, இதுவரை 200 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கச்சத் தீவுப் பகுதிக்கு அருகே மீன் பிடிக்கச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கோடிக்கணக்கான ரூபா மதிப்புள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. அந்தப் படகுகளில் தமிழக மீனவர்கள் உயிரைப் பணயம் வைத்து, பிடித்து வைத்திருந்த மீன்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் 40 மீனவர்கள் இந்தக் குறிப்பிட்ட பகுதியில் காணாமல் போய், அவர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் அவர்களது குடும்பங்கள் கண்கலங்கி நிற்கின்றன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி தமிழக மீனவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அச்சத்தை ஊட்டியுள்ள கச்சதீவு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாக்கு நீரிணையில் இலங்கைக் கடல் எல்லைக்குள் தற்போது அமைந்துள்ளது. 1974 க்கு முன்பு கச்சத் தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது. ஒருகாலத்தில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் சொத்தாக அந்தத் தீவு திகழ்ந்தது. மனிதர்கள் வசிக்காத அந்தத் தீவில் 200 ஆண்டுகளாக நீலம் தயாரிக்கப் பயன்படும் அவுரி பயிரிடப்பட்டு வந்தது.

தங்கச்சிமடம் ஆய்வு பதிவேடுகளில் கச்சத் தீவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் இலங்கையரும், இந்தியரும் கலந்துகொள்ளும் கச்சத் தீவுத் திருவிழா மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

1974 ஆம் ஆண்டு இலங்கையும் இந்தியாவும் கச்சத் தீவு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. அந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியக் கடற்பகுதியில் இருந்த கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது. இதனால் அப்பகுதியில் இலங்கையின் கடல் எல்லை 1.35 கிலோ மீற்றர் தூரத்துக்கு முன்னேறி விரிவடைந்தது.

இந்த ஒப்பந்தத்தின் 4 மற்றும் 5 ஆவது ஷரத்துகள் முக்கியமானவை.

இந்த ஷரத்துகளின்படி இரு நாட்டு மீனவர்களும் இரு நாட்டுக் கடல் பகுதிகளிலும் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கலாம். கச்சத் தீவில் உள்ள புனித அந்தோனியாரை வழிபட இரு நாட்டவர்களும் பாஸ்போர்ட், விசா போன்ற பயண ஆவணங்கள் எதுவும் இன்றி, தங்குதடையின்றி சென்றுவரலாம்.

இந்த ஷரத்துகளின்படி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியிலும் இலங்கை மீனவர்கள் இந்திய கடற் பகுதியிலும் பாரம்பரியமாக மீன்களைப் பிடித்து வந்தனர்.

கச்சத் தீவுக்குச் சென்றுவர தமிழக மீனவர்கள் பெற்றிருந்த உரிமைகள் 1974 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டன. ஆனால், 1976 இல் உருவான இன்னொரு ஒப்பந்தம் காரணமாக அந்த உரிமைகளைப் பெறுவதில் தடை ஏற்பட்டது.

நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்தது. அந்த நேரத்தில் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. எனினும், தமிழக - இலங்கை மீனவர்கள் தொடர்ந்து பரஸ்பர நல்லுறவுடன் கச்சதீவைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், 1983 ஜூலையில் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்துக்குப் பிறகு இந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது.விடுதலைப் புலிகள் போன்ற போராளிகளையும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றைத் தடுப்பதற்காகவும், இந்திய - இலங்கை கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். இந்திய மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் சென்றால், இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் சுடத் தொடங்கினர்.

மீனவர்களைப் போல சிலர் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகவும், படகுகளில் எரிபொருட்களையும், இதர பொருட்களையும் புலிகளுக்காகக் கடத்துவதாகவும் இலங்கைக் கடற்படையினர் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

இராமேஸ்வரத்திலிருந்து 24 கி.மீற்றர் தொலைவில் உள்ள கச்சத் தீவைச் சுற்றிய கடற்பகுதி பாறைகள் நிறைந்தது. இப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க இயலாது. கச்சத் தீவைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளில்தான் மீனவர்கள் மீன்களைப் பிடிக்க முடியும்.

இலங்கை இனக் கலவரத்துக்குப் பிறகு, கச்சத்தீவுத் திருவிழா அடியோடு நின்றுபோனது. சர்வதேச ஒருமைப்பாட்டுக்குச் சின்னமாகத் திகழ்ந்த இவ்விழாவை வழக்கம்போல நடத்தவேண்டும் என இருநாட்டு மீனவர்களும் நீண்டகாலமாகக் கோரி வருகின்றனர்.

கச்சத் தீவை மீட்கக் கோரி எத்தனையோ கட்சிகள் போராட்டங்களை நடத்தியுள்ளன. இராமேஸ்வரத்திலும் சென்னையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும்தான் அவை போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கச்சத் தீவை மீட்போம் என முதலில் எம்.ஜி.ஆர்.ம், பிறகு ஜெயலலிதாவும் சூளுரைத்தனர். சென்னை கோட்டையில் சுதந்திர தின விழாவின்போது தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசும்போது இந்த சூளுரையை அவர்கள் விடுத்தனர். பிற்காலத்தில் கச்சதீவை குத்தகைக்காவது மத்திய அரசு பெற்று, தமிழக மீனவர்களுக்கு அளிக்கவேண்டும் என ஜெயலலிதா யோசனை தெரிவித்திருந்தார்.

கச்சத் தீவை இலங்கைக்கு, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் சேர்ந்து கருணாநிதி தாரைவார்த்துவிட்டதாக அ.தி.மு.க. தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகிறது. தமது கடுமையான எதிர்பார்ப்பையும் மீறி இலங்கைக்குக் கச்சதீவு கொடுக்கப்பட்டது என்பது கருணாநிதியின் பதில் வாதம்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர் தொடங்கியபோது இலங்கைக் கடற்படை கச்சத் தீவில் கண்காணிப்புக் கோபுரங்களை அமைத்திருந்தது. கச்சத் தீவை இராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்கிற ஒப்பந்த விதியை இலங்கைக்கு இந்திய அரசு சுட்டிக் காட்டியபிறகு, அந்தக் கண்காணிப்புக் கோபுரங்கள் அகற்றப்பட்டன.

தானம் கொடுத்ததை திருப்பிக் கேட்கவேண்டாம். அதேநேரத்தில் அந்தப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு காலம் காலமாக இருந்து வந்த உரிமைகளை நிலைநிறுத்த, விலை மதிப்புமிக்க மனித உயிர்களைக் காப்பாற்ற மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவே ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைக் குரல்.

-தினமணி-

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.