Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சு.க வை ஜனநாயகப்படுத்தவும் அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தனிக் குழு: மங்கள சமரவீர.

Featured Replies

சு.க வை ஜனநாயகப்படுத்தவும் அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தனிக் குழு: மங்கள சமரவீர.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஜனநாயகப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தனிக் குழு உருவாக்கியுள்ளோம் என்றும் இது அரசியல் கட்சி அல்ல- சுதந்திரக் கட்சியில் உள்ள "அழுத்த" குழு என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:

எமது புதிய பிரிவானது ஒரு அரசியல் கட்சி அல்ல. அரசாங்கத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உருவாக்கப்பட்ட ஒரு அழுத்தக் குழு. கட்சியை இந்தக் குழு ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் செல்லும். தற்போதைய அராஜக நிலையிலிருந்து மீட்டு பழைய நிலைக்கு கட்சியை கொண்டு செல்லும்.

கட்சியை ஜனநாயகப்படுத்துவதற்கான எமது முயற்சிக்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய கட்டமைப்பின் மீது 90 விழுக்காடு பேர் அதிருப்தியாகத்தான் உள்ளனர். தங்களது நிலைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்கள் அமைதி காத்து வருகின்றனர். மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி அரசாங்க உறுப்பினர்கள் கூட எமக்குச் சாதகமான பதிலையே தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்று அதிகார அமைப்பை மாற்றுவதற்கும் புதிய அரசாங்கத்தை நாம் அமைப்பதற்குமான சாத்தியங்கள் உள்ளன. நல்லவேளையாக அது முழு சர்வாதிகார அமைப்பாக இல்லை. தற்போது நடப்பது காவல்துறையின் அரசாங்கம்தான் என்பதை சொல்வதற்கு நான் அச்சப்படவில்லை. அழிப்பாதைக்கு அரசாங்கம் செல்வதைத் தடுக்கத்தான் சுதந்திரக் கட்சியில் இத்தகைய குழுவை நாம் உருவாக்கி உள்ளோம். ஜனநாயக மரபுகளை மதிக்கும் தன்மைக்கு சுதந்திரக் கட்சி முதலில் திரும்ப வேண்டும். அரசாங்கத்தின் போக்கு மாறாதுபோனால் அடுத்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குள் நிறையவே நடந்துவிடும்.

நாங்கள் இன்னமும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாகவே இருக்கிறோம். இந்தக் கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டோம். ஆனால் சுதந்திரக் கட்சியின் மையமான கொள்கைகளிலிருந்து கட்சி இப்போது விலகிச் சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் அடிப்படைக் கொள்கைகளை நோக்கி கட்சியைத் திருப்புவதற்கு குழுவை அமைத்திருக்கிறோம்.

ஐக்கிய தேசியக் கட்சி. ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எல்.எஸ்.எஸ்.பி. மற்றும் கொம்யூனிஸ்ட் கட்சிகளுடன் விவாதிக்க நாம் தயாராக இருக்கிறோம். சிறிலங்காவின் மேம்பாட்டுக்கான கொள்கை அறிக்கையை நாம் வெளியிடுவோம்.

இத்தகைய செயற்பாட்டின் மூலமாக இராஜபக்ச அரசாங்கத்தை மாற்றமுடியும். இந்த அரசாங்கம் அழிவுப்பாதையிலிருந்து மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கம் மாற்றிக்கொள்ளாது போனால் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் மக்கள் சக்திகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை மாற்றுவர்.

நான் அதிகாரத்தை விரும்புகிறேன். அதிகாரத்தைப் பெறுவதற்காக போராடியிருக்கிறேன். அதிகாரத்துக்காக அதிகாரத்தைப் பெறவில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்தைப் பெற வேண்டும். நான் அமைச்சராக இருந்தபோது என்னால் முடிந்தளவு சிறப்பாகச் செய்திருக்கிறேன். அதிகாரம் ஏதுமில்லாமல் எதுவுமே செய்ய முடியாது.

தமிழர்களை விடுதிகளிலிருந்து வெளியேற்றி வவுனியாவுக்கு அனுப்பியது, மாவட்ட சபைகள் திட்டத்தின் மூலமாக இனப்பிரச்சனைக்கு தீர்வு எனும் காலாவதியான திட்டம், நாட்டின் மனித உரிமைகள் நிலை சீர்குலைந்து கடத்தல்களும் படுகொலைகளும் நாளாந்தம் அதிகரித்து வருதல் ஆகியவற்றினால் நான் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தேன். இதுவே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த இதர கட்சிகளுடன் கூட்டுச் சேர தள்ளியது.

இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற ரணில் என்னை பயன்படுத்தலாம். நான் அவரை பயன்படுத்தலாம். இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தால் தற்போதைய அராஜக அரசாங்கத்திடமிருந்து விடுபட முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். அரசியலில் புள்ளிகளைப் பெறுவதற்காக அவமானங்களை இழைத்து ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டிருக்கிறோம். ஆனால் தற்போது நடந்திருப்பது என்ன? நாடு கீழ்நோக்கிச் சரிந்து போய் கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதை நிறுத்திக் கொள்ள இதுவே நோம். வேறுபாடுகலை விட்டுக் கொடுத்துவிட முடியும். சாதகமான இருதரப்பும் ஒப்புக்கொள்ளக் கூடிய பகுதிகளில் இயங்கலாம். கடந்த கால அனைத்தையும் மறந்து நாட்டை வளப்படுத்த ஒன்றிணைய வேண்டும்.

கடந்த 4 மாத காலமாக என்னுடன் நின்றமைக்காக இன்னல்களைச் சந்தித்த சிறிபதியும் ரிரானும் மகிந்தவைச் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். நிபந்தனை அல்ல. ஆனால் மகிந்தவோ, நீங்கள் முதலில் அமைச்சராகுங்கள். அதன் பிறகு அனைத்தும் சரியாகிவிடும் என்றார். கடுமையான அதிருப்தியை இது ஏற்படுத்தியது. இதனை ஒரு அச்சுறுத்தலாக கருதினேன். அதாவது நான் அமைச்சராகாவிட்டால் அவர்கள் மீதான பிரச்சனையும் சரியாகாது என்பதுதான் மகிந்தவின் போக்கு. அதுவேதான் நடந்ததும்கூட.

எமது கூட்டு முயற்சியால் அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பது மட்டுமல்ல- மகிந்த இந்த ஒருமுறைதான் அரச தலைவராகவும் இருக்க முடியும்.

என்னை கட்சியிலிருந்து வெளியேற்றி எதிர்வரும் தேர்தல்களிலும் போட்டியிட முடியாமல் தடுக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது ராஜபக்ச குடும்பத்தின் சொத்து அல்ல. அடுத்த தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது மக்களின் கட்சியாக மாறும். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் கூட்டணி சார்பில் நிற்பேன். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய மாட்டேன்.

ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து எனது தந்தை மகனம சமரவீர பணம் பெற்றுக் கொண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தைக் கவிழ்த்தார் என்றும் அதேபோல்தான் ராஜபக்ச அரசாங்கத்தைக் கவிழ்க்க வேறு ஒரு சில சக்திகளுக்காக கவிழ்க்க நான் முயற்சிப்பதாகவும் கூறப்படுவது குறித்து ஆச்சரியப்படுகிறேன். என் தந்தையார் வீட்டு அபிவிருத்தி அமைச்சராக இருந்தும் கொழும்பில் தனக்கென சொந்தமாக வீடு வைத்திருக்கவில்லை. அவர் இறக்கும்போது அவரது வங்கிக் கணக்கில் ரூ90தான் இருந்தது. என்னுடைய தந்தையாரின் தந்தை தெனியயவில் நிலப்பிரபுவாக இருந்தபோதும் அப்படியான ஒரு வாழ்க்கைதான் வாழ்ந்தார். அந்த நிலங்களை எல்லாம் அரசியலுக்காக நான் விற்றுவிட்டேன். பண்டாரநாயக்க மற்றும் சேனநாயக்க பரம்பரைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

நான் ஒரு பகுத்தறிவுவாதி. சோதிடங்களின் மீது நம்பிக்கை இல்லை. நான் முதன் முதலில் அரசியலுக்கு வரும்போது சோதிடம் மற்றும் நல்ல நேரங்களில் நம்பிக்கையில்லாமல் இருந்தேன். வெளிப்படையாகச் சொல்வதானால் 19ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நல்ல நேரங்களின் மீது மரியாதை வைத்திருக்கிறேன். ஏன் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது கூட நல்ல நேரத்தில்- சரியாக 11.58. அதற்கு அப்பால் சோதிடங்களின் அடிப்படையில் என்னுடைய முடிவுகள் இருக்காது.

தேர்தலுகுப் பின்னர் எனக்கு அமைச்சு பதவி தர மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை. ஜனவரி 29ஆம் நாள் அமைச்சரவை மாற்றத்தின் போது துறைமுக அச்சு இல்லாமல் வெளிவிவகார அமைச்சை மட்டும் ஏற்குமாறு பசில் ராஜபக்ச மற்றும் லலித் வீரதுங்க என்னை வலியுறுத்தினர். வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்து நாட்டுக்கு சேவை செய்யும் அதே நேரத்தில் என்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்காக துறைமுக அமைச்சும் தேவை என்றேன். இதுதான் நடந்தது. ஆனால் தொடக்கத்திலிருந்தே அவர்கள் துறைமுக அமைச்சு மீது விருப்பம் கொண்டிருந்தனர் என்றார் மங்கள சமரவீர.

-Puthinam-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.