Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மகிந்த ராஜபக்ச எனும் ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்திய அல்ஜசீரா"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மகிந்த ராஜபக்ச எனும் ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்திய அல்ஜசீரா"

[திங்கட்கிழமை, 25 யூன் 2007, 16:49 ஈழம்] [செ.விசுவநாதன்]

சிறிலங்கா அரச தலைவராக உள்ள மகிந்த ராஜபக்சவை நேர்காணல் செய்ததன் மூலம் ஒரு இனவாத யுத்த விரும்பியை அல்ஜசீரா தொலைக்காட்சி அம்லப்படுத்தியுள்ளதாக "நான்காம் உலகத்தின் அனைத்துலகக் குழு" இணையத்தளத்தின் செய்தி ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் அல்ஜசீரா தொலைக்காட்சி நேர்காணல் குறித்து எழுதப்பட்ட அந்த ஆய்வு:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த மாதம் மத்திய கிழக்கிற்கு சென்றிருந்த போது, அல்ஜசீராவிற்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தை பாதுகாத்தார். இந்த பேட்டி, அதன் பண்பற்ற தன்மை, அகந்தை மற்றும் ஒத்திசைவின்மைக்காகவே கவனிக்கத் தக்கதாகும்.

இலங்கையின் உள்நாட்டு ஊடகங்களில் எதுவும், அரசுக்குச் சொந்தமான பத்திரிகைகளும் கூட, இந்த பேட்டியை மீள்பிரசுரம் செய்யவில்லை அல்லது அதன் உள்ளடக்கத்தைப் பற்றி கருத்துக் கூறவில்லை. நாட்டின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொய்கள் அம்பலத்திற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய திகைப்பூட்டும் அமைதியானது கொழும்பில் உள்ள அரசியல் மற்றும் ஊடக நிறுவனத்தின் ஆழமான தளர்வற்ற நிலைமையை பிரதிபலிக்கின்றது.

படுகொலைகள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் உட்பட பாதுகாப்புப் படையினரால் ஜனநாயக உரிமைகள் துஷப்பிரயோகம் செய்யப்படுகின்றமை மிகவும் வெளிப்படையானதாகும். இதனால் அனைத்துலக ரீதியிலும் மற்றும் உள்நாட்டிலும் ராஜபக்ச அரசாங்கம் எதிர்கொண்டுள்ள வளர்ச்சிகண்டுவரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அல்ஜசீராவின் "101 ஈஸ்ட்" நிகழ்ச்சியின் டைமூர் நாபில் நிச்சயமாக ஒரு பகைமை உணர்வு கொண்ட ஊடகவியலாளர் அல்ல. அவர் 2005 நவம்பரில் ராஜபக்ச தேர்வு செய்யப்பட்டு சில வாரங்களுக்குள் புலிகள் யுத்தத்தை மீண்டும் தொடங்கியதாக குற்றஞ்சாட்டியவாறே ஆரம்பித்தார். பின்னர் நாபில் ராஜபக்சவிடம் கேள்விகளை தொடுத்தார்: "புலிகள் மீண்டும் தாக்குதலை தொடங்க தீர்மானித்தது ஏன்?" முற்றிலும் சௌகரியமாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதிலளித்தார்: "நான் பலவீனமானவன் என்றும், நான் தோற்றுவிடுவேன் என்றும், அது ஒரு தனியான அரசை நிறுவுவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும் என்றும் அவர்கள் (புலிகள்) நினைத்திருக்கக் கூடும்."

ராஜபக்ச தன்னை தொடர்ந்தும் சமாதான விரும்பியாக காட்டிக்கொள்ள முயற்சித்த போதிலும், நாபிலின் குறைபாடுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூட, ஒன்றன் பின் ஒன்றாக முரண்பாடுகளில் தானே சிக்கிக்கொண்டுள்ளதை அவர் உடனடியாக உணர்ந்துகொண்டார். புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பற்றி கேட்ட போது அரச தலைவர் பிரகடனப்படுத்தியதாவது: "நாங்கள் எப்பொழுதும் பேச்சுக்களுக்கு தயார். எப்பொழுதும், இன்றும் கூட. மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.