Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தோலிக்க மக்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல்  21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தாவிடின் வீதிக்கிறங்கி போராடுவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம்.

கத்தோலிக்க மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது.  குற்றவாளிகளை சட்டத்தில் முன்னிலைப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொது மக்கள்  அச்சமின்றிய வகையில் வாழும் சூழலை ஏற்படுத்துவது ஜனாதிபதி கோத்தாபய ராஜக்ஷவின்  எதிர்பார்ப்பாகும். இதற்காகவே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.

கடந்த காலத்தை காட்டிலும் தற்போது தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  பொலிஸ் சேவையை ஒழுக்கமான முறையில் செயற்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு தற்போது 491 பொலிஸ் நிலையங்கள்  நாடு தழுவிய ரீதியில் காணப்படுகின்றன.

மேலதிகமாக 197 பொலிஸ் நிலையங்களை  ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை  அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம்  பல வழிமுறைகளில் நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ள போதைப்பொருள் பாவனையினை  இல்லாதொழிக்க பாடசாலை மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த ஒரு பாடசாலையில் சேவையாற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படும்.

ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம் வசம் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம் என்பதை பாடசாலை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.  இலங்கைக்குள் போதைப்பொருள்  கொண்டுவருவதை தடுக்க கடற்படையினர் விசேட திட்டங்களை தற்போது   முன்னெடுத்துள்ளார்கள்.

கேள்வி - ஏப்ரல் 21  ஆம் திகதிக்கு  பின்னர்  கத்தோலிக்க மக்கள் வீதிக்கிறங்கி போராடுவதாக குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு  ?

பதில் - போராட்டங்களில் ஈடுபடும் உரிமை அனைத்து தரப்பினருக்கும் உண்டு.  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் சார்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடும் கருத்துக்களை உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்த விசாரணை அறிக்கை, ஜனாதிபதி விசாரணை அறிக்கை, பாராளுமன்ற தெரிவு குழுவின் விசாரணை அறிக்கை ஆகிய அறிக்கைகள் சட்டமாதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து  சட்டமாதிபர் உரிய நவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஆகவே விசாரணை அறிக்கைகள் மீதும், முன்னெடுப்பட்டுள்ள விசாரணைகள் மீதும் கத்தோலிக்க மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

கத்தோலிக்க மக்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு எத்தனை கொட்டைப்பாக்கு என்கிறார் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர. நல்லவேளை இறந்தவர்கள் மோட்ஷம் சேர்ந்துவிட்டார்கள் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று சொல்லாமல் விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.