Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-26

எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா!

""போர் நடக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வும் இருக்கும். கடத்தலும் காணாமற்போகடித்தலும் தின மும் நடைபெறும். அதை விசாரிக்கச் சங்கங்களும் இருக் கும்.

""எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா.

""இரண்டையும் ஒரு நிறுவனமே கையாளும் அதிசய மும் இங்குதான் நிகழ்கின்றது.''

பூமிப் பந்தில் இலங்கைத்தீவின் உண்மையான நிலை வரத்தை யதார்த்த சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அற்புதமான வசனங்கள் இவை.

லண்டனிலிருந்தவாறு ஈழப் போராட்டத்தின் உண் மைச் சொரூபத்தை, ஊடறுத்துச் செல்லும் கூர்விழி யோடும் தீர்க்கமான பார்வையோடும், நுண்ணிய நோக் கோடும், சுய பிரக்ஞையோடும், தனக்கேயுரிய தனித்துவத் தோடும் ஆராய்ந்து, ஆழமான கட்டுரைகள் மூலம், அர்த்தம் நிறைந்த சொல்லாடல்களோடு தமிழுல கத்துக்குப் படைத்து வரும் இதயச்சந்திரனின் பொன் எழுத்து வாசகங்கள் இவை.

புலம் பெயர்ந்த தேசத்தில் இருந்தபடி தமிழர் தேசத் தின் புலர்வுக்காக விடியலுக்காக வீறுகொண்டு போரா டும் ஒரு சில மூத்த "எழுத்துச் சமராடி'களில் இவர் குறிப் பிடத்தக்கவர். தன் மண்ணின் மீட்சிக்காக ஆயுதம் கொண்டு போராடிய முன்னாள் போராளி இன்று பேனா கொண்டு சமராடுகின்றார்.

""எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா'' ஒரு வசனத்தில் இலங்கைத் தீவைப் படம் பிடித்துக் காட்டும் அர்த்தங்கள் ஆயிரம் பொதிந்த வாச கங்கள் இவை.

ஒரு வகையில் வஞ்சப் புகழ்ச்சி அல்லது உயர்வு நவிழ்ச்சி அணி இது. "அற்புதமான பூமி ஸ்ரீலங்கா' என்பது "அவலப் பூமி ஸ்ரீலங்கா' என்றிருந்தால் இன்னும் பொருத் தமாக இருந்திருக்குமோ.....?

யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு பெரும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முரண் பாடு இங்குதான் அரங்கேறுகின்றது.

ஜனநாயக ஆட்சி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு சர்வாதிகார நிர்வாகம் இங்குதான் கோலோச்சுகின்றது.

தணிக்கையே இல்லை என்று அறிவித்துக் கொண்டு ஆயுத முனையில் அச்சுறுத்தல் தணிக்கை இங்குதான் கட்டவிழ்கின்றது.

காருண்ய மகான் புத்தபகவான் பாதம் பதித்து சீலம் போதித்த புண்ணிய பூமி இதுவென, பௌத்தம் பெருமை பேசும் திவ்விய தீவு இலங்கை. இங்குதான் பௌத்த சீலத்தின் பெயரால் அதற்கு முற்றிலும் மாறான பேரினவாதக் கொடூரமும் மேலாண்மைத் திமிரும் உருக்கொண்டு செருக்கோடு அரசாட்சி புரிகின்றன.

தலைநகரிலிருந்து தமிழர்களை இரவோடு இரவாகப் பலவந்தமாக வெளியேற்றும் கொடூரம் ஒருபுறம் மும் முரமாக முன்னெடுக்கப்படும். அரசுத் தலைமை அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கும். பின்னர் அதற்கு எதிர்ப்பு சர்வதேச மட்டத்தில் கிளம்பியதும் அச் செயலுக் காக அரசே வருத்தம் தெரிவிக்கும். அந்தக் கொடூர நட வடிக்கை குறித்து விசாரணை நடக்கும் என்று அரசே அறிவிக்கும். அதேசமயம் அரசின் மற்றைய அங்கம் அந் தக் கொடூரத்தை நியாயப்படுத்தும். அக்கொடூரத்துக்காக வருத்தம் தெரிவிக்கப்பட்டதை அரசின் பிறிதொரு அங்கம் கடுமையாக விமர்சிக்கும்.

இப்படி முரண்பாடுகளின் சங்கமம் ஓர் ஆட்சியில் என் பது இந்த நாட்டில்தான் சாத்தியம்.

எதிர்மறை முரண்பாடுகளின் கருத்தியல் மோதலைத் தான் இப்போது இலங்கையில் சில படுகொலைகள் சம் பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தொடர் பாக சர்வதேச பிரமுகர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவும் கிளப்பியிருக்கின்றது.

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சர்வதேச தொண் டர் நிறுவனத்தின் பதினேழு பணியாளர்கள் தொடர்பான விடயத்தில் குற்றச்சாட்டுக் கரம் அரசுப்படைகள் மீதே நீளு கின்றது. இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு வும் அப்படித்தான் கூறியது.

இப்போது இந்தக் கொலைகள் தொடர்பான விசா ரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது புலன் விசாரணையை முன்னெடுப்பதற்கான சட்ட விவகாரங் களை அரசின் சட்டப்பிரிவான சட்டமா அதிபர் திணைக்களத் திடமே ஒப்படைத்திருக்கின்றது. இதையே அந்த விசாரணை யைக் கண்காணிக்கும் சர்வதேசப் பிரமுகர்கள் குழு ஆட்சேபித்திருக்கிறது.

அரசுப் படைகள் மீதான குற்றச்சாட்டை, அரசின் சட் டப்பிரிவான சட்டமா அதிபர் திணைக்களம் விசாரிப்பது பொருத்தமற்றது. இலங்கை அரசின் சட்டமா அதிபர் திணைக்களம், தான் தொடர்பான விசாரணையைத் தானே விசாரணை செய்வது போன்ற நிலையாகும் இதுவென சர்வதேசப் பிரமுகர்கள் குறைகூறியிருக்கின்றார்கள்.

ஆக, குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பே குற்றத்தைப் புல னாய்வு செய்யும் முரண்பாடு இந்த நாட்டில்தான் நிகழ முடியும்.

சர்வதேசத்தில் புகழ் பெற்ற முக்கிய பிரமுகர்கள் கொண்ட பதினொரு பேர் குழுவின் கண்காணிப்பின் முன்னாலேயே, இவ்வாறு குற்றம் சுமத்தப்படும் தரப்பே குற்றப்புலனாய் வில் ஈடுபடும் முரண்பாடு அரங்கேறும்போது, "எதிர்மறை களின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா!' என்ற வாசகத்தில் என்ன தவறு இருக்க முடியும்?

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.