Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில ஞாபகங்கள் -10

Featured Replies

வேதவனம் ஒழுங்கை பருத்தித்துறையில் இருந்தது. இருந்தும் என்ன?  பருத்தித்துறை நகரத்தில் இறங்கி வேதவனம் ஒழுங்கைக்கு போகிற வழியை யாரிடமாவது  விசாரித்தால்  அவர்கள் விழி பிதுங்குவார்கள். அப்படி ஒரு ஒழுங்கை இங்கே இல்லை என்று வேண்டுமானால் சத்தியம் கூட செய்வார்கள். அந்தளவுக்குத்தான் அது பிரபலமானது.  கல்லடி ஒழுங்கை என்றும் சங்கக்கடைக்கு முன்னால் இருக்கிற ஒழுங்கை என்றும் அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்றபடி சொல்வதுண்டு.  தபால்காரன் மாத்திரம் வாங்குகிற சம்பளத்திற்கு நாணயமாக  சரியான பெயரை மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருந்தார். அவரின் கடமை விசுவாசத்தால்  கடிதங்கள் எந்த பொல்லாப்பும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தது.

அப்பேர்ப்பட்ட வீதியில் இடப்பக்கத்தில் மூன்றாவதாக எங்கள் வீடு இருந்தது. ஐந்தாவதாக சீதாராம் வீடு  இருந்தது. சீதாராமும் நானும் ஒரே வயதுக்காரர். வேறு வேறு பாடசாலையில் படித்துகொண்டிருந்தோம். தானும் தன்பாடும் என இருந்த சீதாராம் எந்த குழப்படிக்கும் போகாத நல்ல பிள்ளை.  சீதாராமுக்கு கண்ணன் என்பது வீட்டுப்பெயர். போதாக்குறைக்கு  ரேமன் என்ற இன்னுமொரு புது  பெயரும் வந்து சேர்ந்தது. அதற்கு பிறகு ஆள் ஊரில் இல்லை.  அது இயக்க பெயர். அலாப்பினாலும் சண்டைக்கு வராத ஒரு ஆள் குறைந்து போனதில் கூட விளையாடிய பலருக்கு கவலை. இன்னும் சிலருக்கு பெரிய ஆச்சரியம்.

இயக்கத்துக்கு போன பிறகு சீதாராம் பல வருடங்களாக ஊருக்கு வந்ததில்லை. பெரும்பாலான நாட்கள்  இந்தியாவும் இயக்க வேலையுமென கழிந்து  போயிற்று. இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி மற்றைய எல்லா இயக்கத்தையும் வீட்டுக்கு அனுப்பிய பிறகு யாழ்பாண வீதிகளிலும் பஜிரோக்கள் ஓடியது. அப்படி ஓடிய பஜிரோ ஒன்றில் பானு முன் சீட்டில் இருந்தார். மஞ்சளுக்கும்  வெள்ளைக்கும் இடையில் ஒர் நிறத்தில்  சாரதி இருக்கையில் ஒருவர்  இருந்தார். அவரை  ரேமன் என்று சொன்னார்கள்.  அந்த காலத்தில் மீண்டும் ஒரு முறை ஒழுங்கைக்கு  வந்து போனதாக அறிந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்கும் வந்து எல்லோர் சுக துக்கங்களையும் விசாரித்து போயிருந்தான். சின்ன வயதில குண்டு விளையாடுகிற போது என்னோடு சண்டை போட்டதை பற்றி சொல்லி இப்போது நான் என்ன செய்கிறேன் என கேட்டறிந்ததாக  அம்மா சொன்னார்.  எனக்கு சந்திக்க வாய்ப்பு  கிட்ட வில்லை.

சேவல் கூவ அன்றைய பொழுதும் தப்பாமல் விடிந்தது.  இரத்தனப்பாவின் ஆடுகள் இலைகுழைகளை தேடி கூட்டமாக நடைபோட்டன. போகிற வழியில் ஆடொன்று எங்கள் படலையை தலையால் தள்ள  குட்டி ஆடு  உள்ளே நுளைந்தது. முற்றத்தில் மல்லிகை மரமொன்று இருந்தாக வேண்டும் என்ற அம்மாவின் கனவையும்  சேர்த்தே  அது கவ்வியது.  படலையின் கொழுக்கியை போடமறந்தவருக்கு அர்ச்சனை பாடியபடி அம்மா ஆட்டுகுட்டியை வெளியே துரத்தினபடி இருந்தார். அதுவும் எல்லா சாகசங்களையும் செய்து உள்ளேயே சுத்தித்சுத்தி ஓடியது.

அப்போதுதான் அந்த  ஓவென்ற அழுகுரல்  குட்டி ஒழுங்கையை நிறைத்தது. அவரவர் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார்கள். அது சீதாராம் வீடாக இருந்தது. சினைப்பர் தாக்குதலில் சீதாராம் இறந்த செய்தியை காவிய இரண்டு இளைஞர்கள் வந்திருந்தார்கள்.  கோபத்திற்கும் துக்கத்துக்கும் இடையில் ஏதேனும் ஒரு வடிவம் இருப்பின் அது அவர்கள் முகத்தில் தெரிந்தது.  அவர்கள் என்னதான் செய்வது? ஒரு கோழையை போல அழவும் முடியாது . பிள்ளையை இழந்து கத்துகிற குடும்பத்தின் வலியில் கலக்காமல் கல்லாகவும் இருக்க முடியாது.  அந்த   சங்கடம் அவர்கள் அசைவில்  தெரிந்தது.

சின்ன வயது முதல் மரணம் எல்லோரையும் கலங்க வைத்தது. சிலர் இராணுவம் பாடையில் போவர் என திட்டினார்கள். சிலர் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துகொள்வார் என ஆறுதல் சொன்னார்கள்.  இப்படியாக அன்றைய  பகல்பொழுது இருண்டே கிடந்தது.

பின்னர் வந்த நாளொன்றில் வீதியின் தலைப்பில் பெயர் பலகை ஒன்றிருந்தது. அது ரேமன் வீதி என்று சொன்னது.
எங்கள் ஊரின் எல்லா வீதிகளுக்கும் சொல்ல  ஒரு பெயரும் கனத்த நினைவுகளை சுமந்த சில கதைகளும்  அதைக் காவி பல ஆயிரம் மைல்கள் தாண்டி வாழ்கிற  மனிதர் கூட்டமும்  இருப்பர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.