Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் போனவர்களை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரை அழைத்தாலும் கண்டுபிடிக்கமுடியுமா என்பது சந்தேகமே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்களை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரை அழைத்தாலும் கண்டுபிடிக்கமுடியுமா என்பது சந்தேகமே!

வீரகேசரி நாளேடு

2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2007 பெப்ரவரி மாதம் வரையிலான ஐந்து மாதங்களுக்குள் 430 பேர் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் 307 பேர் கடத்தப்பட்டுள்ளனர்,1713 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேல் நீதிமன்ற நீதியரசர் மஹாநாம திலகரத்ன தெரிவித்தார். கடத்தல், காணாமல் போதல் மற்றும் படுகொலைசெய்தல் போன்ற சம்பவங்களால் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. எனது தலைமையிலான ஆணைக்குழு விசாரணைகளை திறம்பட மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் படுகொலைகளும் மட்டக்களப்பில் கடத்தல்களும் அதிகரித்துள்ளன, ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசாரை அழைத்து வந்தாலும் காணமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியுமா? என்பது சந்தேகமே என்றும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலஙந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது

2006.09.13 தொடக்கம் 2007.02.25 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் 2007 மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இறுதியறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் இறுதியறிக்கை 2007 மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. விசாரணைகளை செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போது 2006 ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்தமையினால் விசாரணைகளை ஜனவரி மாதம் முதல் ஆரம்பித்தோம்

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் 150 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு 2006 டிசம்பர் மாதம் ஜனாதிபதியிடம் இடைக்கால அறிக்கையை ஒன்றையும் சமர்ப்பித்தோம். தனிப்பட்ட விசாரணை

முறைப்பாடுகளை நான் தனிப்பட்ட முறையிலும் விசாரணை செய்தேன் இன்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள் யாரும் விசாரணையிலிருந்து விலகிசெல்லவில்லை பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் விசாரணையில் கலந்து கொண்டனர்.

காணாமல் போன 355 பேர் தொடர்பான அமெரிக்காவின் கேள்விக்கு சிறிலங்கா மழுப்பலான பதில்.

இலங்கையில் காணாமல் போன 355 பேரின் பட்டியலை சிறிலங்காவிடம் கொடுத்து விசாரணை நடத்துமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இதற்கு தற்போது சிறிலங்கா அரசாங்கம் மழுப்பலான பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் தமிழ் வடிவம்:

அமெரிக்க பிரதிச் செயலாளர் ஸ்டீபன் மான் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்தபோது காணாமல் போனதாகக் கூறப்படும் 355 பேரின் பட்டியலை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுவோர் தொடர்பாக உரிய அரச நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டது. அமெரிக்காவினால் கையளிக்கப்பட்ட பட்டியலில் ஒரே பெயர் பலமுறை இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் மாகாண வாரியாக வடக்கில் 253, மேற்கில் 78, வடமேற்கில் 7, வடமத்திய மாகாணத்தில் 6, கிழக்கில் 2, மத்திய மாகாணத்தில் 2 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அரச தலைவர் ஆணையமான மகநாம திலகரட்ன ஆணையத்தின் அறிக்கையின்படி, அந்த ஆணையத்திடம் 79 பேர்தான் முறைப்பாடு செய்துள்ளனர். அதில் 14 முறைப்பாடுகள், மகநாம திலகரட்ன ஆணையத்தின் காலவரையறைக்கு உட்படாதமையால் மொத்த முறைப்பாடுகள் 65. இந்த 65 முறைப்பாடுகளில் 42 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு விட்டன. 23 முறைப்பாடுகள் தொடர்பாக மகநாம திலகரட்ன ஆணையம் விசாரணை நடத்துகிறது.

குடியேற்றத்துறை திணைக்களத்தின் தகவலின்படி அமெரிக்காவினால் கையளிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தோரில் 5 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

வெளிநாடு சென்றோர் விவரம்:

1. முருகையா சுரேந்திரன் (அமெரிக்காவின் பட்டியலில் 54 ஆம் வரிசை எண்- 2007 ஜனவரி 9 ஆம் நாள் காணாமல் போனவர்)- 2007 ஏப்ரல் 6 ஆம் நாள் வெளிநாடு சென்றுள்ளார்.

2. சுப்பிரமணியம் சிவனேசன் (அமெ. பட்டியல் வ.எண்: 134- 2006 மே 28 ஆம் நாள் காணாமல் போனவர்)- இதே பெயரில் 2007 பெப்ரவரி 26 ஆம் நாள் வெளிநாடு சென்றுள்ளார். முன்னர் 2004 ஜூன் 12, 2005 ஒக்ரோபர் 6 ஆகிய நாட்களிலும் வெளிநாடு சென்றுள்ளார்.

3. செல்வரட்ணம் சிவநாதன் (அமெ. பட்டியல் வ.எண்: 143- 2006 மே 6 ஆம் நாள் காணாமல் போனவர்)- 2007 மே 24 இல் வெளிநாடு சென்றுள்ளார்.

4. சிவராஜா சபேசன் (அமெ. பட்டியல் வ.எண் 323- 2007 ஜனவரி 28 ஆம் நாள் காணாமல் போனவர்)- 2007 ஏப்ரல் 10 ஆம் நாள் கடவுச்சீட்டு பெற்றுள்ளார்.

5. இராஜசிங்கம் சுரேஸ் (அமெ. பட்டியல் வ.எண்: 334 - 2007 ஜனவரி 11 ஆம் நாள் காணாமல் போனவர்)- 2007 பெப்ரவரி 27 ஆம் நாள் வெளிநாடு சென்றுள்ளார்.

அமெரிக்காவின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பேர் உயிருடன் இருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1. சான் ஜோர்ஜ் (அமெ. பட்டியல் வ.எண்: 36) கடத்தப்பட்ட இந்நபர் 2006 நவம்பர் 2 ஆம் நாள் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2. மாரிமுத்து சிவமணி (அமெ. பட்டியல் வ.எண்: 44) 2006 நவம்பர் 1 ஆம் நாள் வீடு திரும்பியுள்ளார்.

3. யோகராசா மதனராசா (அமெ. பட்டியல் வ.எண்: 78) வீடு திரும்பியுள்ளார்.

4. கனகசபை ஸ்டீபன் (அமெ. பட்டியல் வ.எண்:79) வீடு திரும்பியுள்ளார்.

5. நடேசன் வேலாயுதன் (அமெ. பட்டியல் வ.எண்: 84) நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்- மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார்.

6. சிங்கநாயகம் மரி பரிமளா (அமெ. பட்டியல் வ.எண்: 197)- 2006 ஜனவரி 1 இல் யாழ். காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

7. தில்லையம்பலம் சசிகரன் (அமெ. பட்டியல் வ.எண்: 198)- 2006 ஜனவரி 1 இல் யாழ். காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

8. கந்தையா சிவன்கோவில் (அமெ. பட்டியல் வ.எண்: 207) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

9. ராஜேஸ்வரம் இலங்கேசுவரன் (அமெ. பட்டியல் வ.எண்: 280) 2006 டிசம்பர் 26 இல் வீடு திரும்பியுள்ளார்.

10. செல்லையா சுரேந்திரன் (அமெ. பட்டியல் வ.எண்: 326) 2007 பெப்ரவரி 14 ஆம் நாள் வீடு திரும்பினார்.

மேலும் யாழ். சுழிபுரம் மற்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த நவரட்ணம் கருணைதாசன் (அமெ. பட்டியல் வ.எண்: 184), சரவணபவானந்தன் ஹரிகரன் (அமெ. பட்டியல் வ.எண்: 230) ஆகியோர் தங்களது வீடுகளிலிருந்து கடத்தப்பட்ட பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இருவரது உடல்களும் மீட்கப்பட்ட என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். நீதிமன்றத்துக்கும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் இது தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பட்டியலில் உள்ள 200 பேர் தொடர்பாக இராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் பட்டியலில் உள்ள (வ.எண்ள:249) அழகரட்ணம் அருள்கண்ணா என்பவர் மட்டுமே இராணுவத்தினரால் 2006 நவம்பர் 28 ஆம் நாள் கைது செய்யப்பட்டு அதே நாளில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை பருத்தித்துறை நீதிமன்றில் எதிர்வரும் ஜூலை 16 ஆம் நாள் நடைபெற உள்ளது.

அமெரிக்காவினால் கையளிக்கப்பட்ட பட்டியலில் பெரும்பகுதியானோர் வடபகுதியைச் சேர்ந்தவர். அவர்கள் "விடுவிக்கப்படாத" பகுதிகளுக்குள் நுழைந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. கண்டுபிடிக்கப்படாத 180 பேர் குறித்து "விடுவிக்கப்படாத" பகுதிக்குள் இயங்குவதால செஞ்சிலுவைச் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது.

ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் இந்த மாத முற்பகுதியில் அரச தலைவர் மகிந்த ராஜபச்கவிடம் இது தொடர்பான அறிக்கையை கையளிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறை மீது முன்பு ஒரு காலத்தில் மதிப்பு இருந்தது. ஆனால் ரவிராஜ் படுகொலைக்குப் பின்னர், அது மேல கொண்டிருந்த மரியாதை போய்விட்டது. சென்ற கார்த்திகை மாதம் 10ம் திகதி மாமனிதர் ரவிராஜ் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டார். ஆனால் வருகின்ற 10ம் திகதியோடு 9 மாதங்கள் பூர்த்தியாகின்றன.

இது வரைக்கும் அது தன் விசாரணை முடிவினை வெளியிடவில்லை.

சிறிலங்காவின் ஆணைக்குழுக்கள் போன்று இதுவும் ஒரு ஏமாற்று வேலையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.