Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வாய்ப்பு கிட்டியுள்ள மில்கா டி சில்வாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கிரிஸ்புரோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வாய்ப்பு கிட்டியுள்ள மில்கா டி சில்வாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கிரிஸ்புரோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வாய்ப்பு கிட்டியுள்ள மில்கா டி சில்வாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கிரிஸ்புரோ

 

இலங்கையின் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பளர்களான கிரிஸ்புரோ குழுமம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ள வீராங்கனை மில்கா டி சில்வாவிற்கு தமது அனலான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான உடற்தகுதியை அவர் அடைந்துள்ளதால், சர்வதேச ஜிம்னாஸ்டிக் மாநாட்டினால் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தும். இதனால், ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது இலங்கை ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக மில்கா டி சில்வா உள்ளார். 18 வயதான மில்கா ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் மற்றும் இலங்கையின் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்கிற்கு அழைத்துச் செல்லும் Crysbro NOCSL Next Champ புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொள்பவராகவும் அவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மில்கா தனது ஆரம்பக் கல்வியை பிலியந்தலை சோமவீரா சந்திரசிரி கல்லூரியிலும் மற்றும் கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியிலும் பெற்றார். அவர் முன்னாள் தேசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியனான ரஞ்சனா தரங்கவின் கீழ் அடிப்படை பயிற்சிகளைப் பெற்றார். சிறு வயதிலிருந்தே சர்வதேச வெற்றிகள் மற்றும் திறமைகளுக்கான பரிசுகளை வென்ற அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினால் வழங்கப்படுமட் ஒலிம்பிக் ஒத்துழைப்பு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் 2019ல் ஜப்பானுக்குச் சென்ற மில்கா, ஜப்பானில் இருந்து தனது பயிற்சியைத் தொடர்ந்தார்.

மில்கா தனது 8 வயதில் இலங்கை ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார் மற்றும் 2011 முதல் 2014 வரை தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றார். அவர் 2016ஆம் ஆண்டில் பொதுநலவாய ஜூனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் பங்குகொண்டு 6வது இடத்தைப் பிடித்தார், மேலும் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பை வென்றார் மற்றும் இந்தோனேசியாவில் நடைபெற்ற 2018 ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் ஆசியாவின் முதல் 8 இடங்களைப் பெற்ற வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். ஜிம்னாஸ்டிக்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற முதல் இலங்கை விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் மில்கா டி சில்வா பெற்றார். 2018 இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் தனது தனிப்பட்ட திறன்களையும் வளர்த்துக் கொண்டார்.

மில்கா டி சில்வாவின் சாதனைகள் குறித்து கருத்து தெரிவித்த கிரிஸ்புரோவின் சிரேஷ்ட முகாமையாளர் அமோரிஸ் செல்லார், “இது எனது எதிர்பார்ப்பு. அவரது திறமைகளைப் பற்றி உற்சாகமாக, நாங்கள் அவரைCrysbro NOCSL Next Champ திட்டத்தில் இணைத்துக்கொள்ள முடிந்தது, இது இலங்கையின் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் மட்டத்துக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு அவர் ஏற்கனவே தனது திறமைகளை காட்டியுள்ளார். புலமைப்பரிசில் திட்டமானது விளையாட்டு வீரரின் தொழில் குறிக்கோள்கள், பயன்படுத்தப்படும் உத்திகள் மற்றும் அவரது முழு வளர்ச்சிக்கும் ஆதரவை வழங்குகிறது. இந்த புலமைப்பரிசில் திட்டம் விளையாட்டு வீரர்களின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படுவதுடன் அதற்காக வீரர்கள் செய்யும் செலவுகளும் திருப்பிச் செலுத்தப்படும், ”என தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தேசிய அளவில் திறமையான 130 பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி, ஊட்டச்சத்து, மருந்து, போக்குவரத்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நிதியுதவிகள் செய்யப்படுகிறது. ‘Next Champ’ திட்டத்தின் முதல் கட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரர்களை மதிப்பீடு செய்து அறிமுகப்படுத்துவதோடு, அவர்களுக்கு புதிய பயிற்சி உத்திகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அனைத்து கிரிஸ்புரோ சமூக பொறுப்புணர்வு மிக்க முயற்சிகளும் கிராமப்புற குழந்தைகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன, மேலும் ‘Next Champ’ திட்டம் கிராமப்புற குழந்தைகளின் விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லவும் செயல்பட்டு வருகிறது.

இலங்கையில் விளையாட்டு நடவடிக்கைகளில் முதன்மையான சங்கமாக விளங்கும் இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி, இலங்கையில் சர்வதேச போட்டிகளை ஒருங்கிணைப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படுகிறது. இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டியும் இலங்கை விளையாட்டு வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதற்கு தேவையான செயல்திறன் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.