Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூதூர், சம்பூர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்துக்கு எதிராக நேற்று உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 30 7:03:23 EEST 2007

மூதூர், சம்பூர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்துக்கு எதிராக நேற்று உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

மூதூர், சம்பூர் பகுதியை உயர் பாது காப்பு வலயமாக வர்த்தமானி மூலம் பிர கடனப்படுத்தி, அங்கிருந்த மக்களை மீளக் குடியமர விடாது தடுத்தமைக்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக் கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஒரு மனுவை மாற்றுக் கொள்கைகளுக் கான மையம் மற்றும் பாக்கியசோதி சரவண முத்து ஆகிய தரப்பினரும் மற்றைய மனுவை மூதூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர வைக்கப்பட்டுள்ள அப்பிரதேச வாசிகள் நால்வர் சேர்ந்தும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களில் பாதுகாப்பு அமைச் சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலா ளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கடற்படைத் தள பதி, விமானப் படைத் தளபதி, பொலிஸ்மா அதிபர், மூதூர் பகுதியின் தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மற் றும் முதலீட்டுச் சபை ஆகிய தரப்புகளும் சட்டமா அதிபரும் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நான்குபேர் சேர்ந்து தாக்கல் செய்துள்ள மனுவில் மூதூர் கட்டைபறிச்சானைச் சேர்ந்த நற்சிங்கம் சுந்தரலிங்கம், தோப்பூர், பள்ளியன் குடியிருப்பைச் சேர்ந்த பொன்னையா இரத் தினசிங்கம், மூதூரைச் சேர்ந்த இராமுப் பிள்ளை நடராஜா, சேனையூர், கட்டைபறிச் சானைச் சேர்ந்த செல்லப்பா கோபாலகிருஷ் ணன் ஆகியோரின் பெயர்கள் எதிர்மனு தாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தங்களின் பூர்வீக சொத்துகள் மற்றும் வாழிடங்களுக்குத் தங்களைச் செல்லவிடா மல் தடுக்கும் மேற்படி எதிர்மனுதாரர்க ளின் செயற்பாடு, தங்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றது என்றும்

அந்த அத்துமீறலுக்கு எதிராக உயர்நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்றும்

தங்களின் பூர்வீக இல்லங்களில் தாங் கள் கைவிட்டு வந்த பெறுமதியான பெரு மளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டு, திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப் பட்டிருப்பதைத் தாங்கள் அறிவார்கள் என் றும்

மனுதாரர்கள் தங்கள் மனுக்களில் தெரிவித்திருக்கின்றனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் தனது மனுவுடன் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர் பான ஐ. நாவின் வழிகாட்டல் விதிமுறை களையும், இடம்பெயர்ந்த மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர் பான சர்வதேச பட்டயத்தையும் ஆதார ஆவணங்களாக இணைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்களை சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுமந்திரன், கனகேஸ்வரன் ஆகியோரின் வழிப் படுத்தலின் கீழ் சட்டத்தரணி மோகன் பாலேந் திரா தாக்கல் செய்திருக்கின்றார். (சி)

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.