Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கத்தை புடம் போட்டாலும் தரம் குறையாது.

Featured Replies

தங்கத்தை புடம் போட்டாலும் தரம் குறையாது.

Saturday, 30 June 2007

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது முடக்கும் மகிந்தராஜபக்ஷ ஆட்சியின் மற்றுமொரு விரிவாக்கம் "தமிழ்நெற்" இணையத்தளத்தை முடக்க முயலும் அதனது செயற்பாட்டிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்காவில் இணைய இணைப்பு சேவை வழங்குணர்களூடாக இணைப்புப்பெறும் பயன்பாட்டாளர்கள் "தமிழ்நெற்" இணையத்தளத்தைப் பார்வையிட முடியாத நிலையை அது ஏற்படுத்தியுள்ளது

இந்த நடவடிக்கைக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் அனுராபிரியதர்சனயாப்பாவும், சிறிலங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகோடியர் பிரசாத் சமரசிங்கவும் கூறியிருக்கின்றனர்.

இதிலே எவ்வளவு வீதம் உண்மை இருக்கும் என்பதை அவர்கள் நாளாந்தம் வெளியிடும் அறிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இணைய இணைப்புச்சேவையை வழங்குவோர் அதனை ஒரு வர்த்தக நடவடிக்கையாகவே மேற்கொள்கின்றனர். சிறிலங்காவைப் பொறுத்தவரை இவற்றின் பங்குதாரர்களாக பெரும்பாலும் வெளிநாட்டினரே உள்ளனர்

சிறிலங்காவில் பெருமளவானோர் பார்வையிடும் அதிலும் இணைய வசதிகளைக் கொண்டிருக்கக்கூடிய வட்டத்தினரால் பார்வையிடப்படும் இணையத்தை பார்வையிடாது தடுப்பதன்மூலம் அவர்கள் வருமான இழப்பைச் சந்திக்க தன்னிச்சையாகவே முடிவெடுப்பார்கள் என எவ்வாறு கூறமுடியும்?

இவ்வாறான இணைய இணைப்பை வழங்குவோர் இப்படிக் கட்டுப்பாடுகளையும் தமது விருப்பிற்கேற்ப வடிகட்டலையும் மேற்கொண்டால் தலையில் துண்டைப்போட்டுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்படும்.

அதேவேளை மகிந்த அரசாங்கத்தின் உள்ளத்து உணர்வை, மனவிருப்பத்தை அதன் இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலியரம்புக்வெல வெளிப்படுத்தி இருக்கிறார். "தமிழ்நெற்" இணையத்தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாமல் போனமைக்கும் அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை எனக் கூறியிருக்கும் அவர் அதனைவிட மோசமான ஒன்றைக் கூறியிருக்கிறார்.

அதாவது அனுபவம் மிக்க துருவிகளின் Hackers சேவையைப் பெற்று "தமிழ்நெற்" இணையத்தளத்தையே செயலிழக்கச் செய்யப்போவதாக அவர் கூறியிருக்கிறார்.

இவ்வாறு துருவிகள் என அழைக்கப்படுவோர் இணையத்தளங்களுக்குள் புகுந்து நாசவேலை புரிபவர்கள் ஆவார்.

இவர்கள் சட்டவிரோதிகள் அதாவது சர்வதேச ரீதியாக இணையம் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் ஆவர்.

இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் மரணதண்டனைகூட விதிக்கப்படுவதுண்டு. அவ்வளவு தூரத்திற்கு துருவிகளின் செயற்பாடு சட்டவிரோதமாக கொள்ளப்படுகின்றது.

அவ்வளவு மோசமாக ஒரு சட்டவிரோதச் செயற்பாட்டைத் தூண்டுபவராக சட்டவிரோதிகளின் சேவையை பெறப்போவதாக சிறிலங்காவின் முக்கிய அமைச்சர் கெஹலியரம்புக்வெல செய்தியாளர் மாநாட்டில் கூறியிருக்கிறார்.

இதனை சிறிலங்காவில் இயங்கும் சுதந்திர ஊடக அமைப்பு "இணைய பயங்கரவாதம" என வர்ணிக்கிறது.

இன்று இணையமென்பது ஒவ்வொருவரும் தமது சொந்தக் கருத்துக்களை மற்றவர்களுக்கும் சொல்லும் வகையிலான, தகவல்களை வழங்கும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்து வருகின்றது.

இங்கு கூறப்படும் கருத்துக்களின் வலிமை செய்திகளின் பெறுமதி என்பன அவற்றைத் தெரிவிப்பவர்களின் நம்பகத் தன்மைக்கே விடப்பட்டிருக்கின்றது. அதாவது இணையத்ளதிதின் நம்பகத்தை அதனை இயக்குவோரே பேணவேண்டும் என்ற வகையில் உலகளாவிய ரீதியிலான செயற்பாட்டை அனுமதித்திருக்கிறது.

இந்தவகையில் 10 வருடங்களைத் தாண்டி நன்மதிப்பையும், நம்பகத்தையும் சர்வதேச ராஜதந்திரிகளாலும் பார்வையிடப்படுகின்ற தக்கவைத்துக்கொண்டிருக்கின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.