Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாயவே போதும்!

Featured Replies

ஈழநாதம் நாளேட்டில் 02.07.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்

கோத்தபாயவே போதும்!

வடக்கு-கிழக்கில் மீண்டும் போர்நிறுத்தக் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கப் போவதாக இலங்கைப் போர் நிறுத்தக்; கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளமை தமிழ் மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும், பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது. அத்தோடு இத்தீர்மானமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின் மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் போர்நிறுத்தம் என்றால் என்ன? என்ற கேள்வியையும் கேட்கவைத்துள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதானதாக இல்லை என ஒன்றிற்குப் பலதடவை ஏற்கனவே அறிவிப்புச் செய்துள்ளது. அத்தோடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு எப்பகுதியிலும் எவ்வேளையிலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் உண்டு எனவும் எந்த உடன்பாடும் அதனைக் கட்டுப்படுத்தப் போவதில்லை எனவும் அது கூறியும் வருகின்றது.

இதற்கு ஏற்ற விதத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிகள் அனைத்தும்ஃ அரசாங்கத்தால் அர்த்தமற்றவை ஆக்கப்பட்டன. முதலில் விடுதலைப் புலிகளின் வடக்கு-கிழக்கிற்கான போக்குவரத்துத் தடுக்கப்பட்டது. அடுத்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பணி முடக்கப்பட்டது.

இதன்பின்னர் ஏ-9 பாதை மூடப்பட்டது. பெரும் மனித அவலம் ஏற்பட்டபோதும் ஏ-9 பாதையைத் திறக்க அரசாங்கம் இணங்கவில்லை. இதேசமயம் வடக்கிலும், கிழக்கிலும் பாரிய படை நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டது. இலட்சக்கணக்கான மக்கள் அகதிகள் ஆயினர். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல படுகொலைகள் அரசினாலும் துணை இராணுவக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்டன.

துணை இராணுவக் குழுக்களின்-ஒட்டுக்குழுக்களின்- நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு சர்வதேசத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கூட அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டன. அது மாத்திரமின்றி அரசாங்கம் ஆட்கடத்தல், மனித உரிமை மீறல்கள் எனப் பல்வேறு குற்றச்செயல்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது.

இவற்றைவிட கிழக்கு மாகாணத்தில் யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி என ஏற்றுக் கொள்ளப்பட்ட பகுதிகள் மீது பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை ஆக்கிரமித்துள்ளது. இத்தகைய படை நடவடிக்கைகள் தற்பொழுதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இத்தகையதொரு நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்;த்தை நடத்திவிட்டு மீண்டும் போர்நிறுத்தப் பணிகளை மேற்கொள்ளக் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளமையே ஆச்சரியத்தையும், சந்தேகங்களையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதாவது கண்காணிப்புக்குழு போர் நிறுத்தம் என எதைக் கருதுகின்றது? போர் நிறுத்த உடன்பாடு என்பது அமுலில் உள்ளதா? அவ்வாறு உள்ளதானால் இதுவரை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அவ் உடன்பாட்டிற்கு உட்பட்டதா? என்பதே இன்று தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகமாகும்.

ஏனெனில், சிறிலங்கா அரசின் இதுவரையிலான நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்திலேயே போர் நிறுத்தக் கண்காணிப்பு என்பதை மேற்கொள்ளமுடியும். அவ்வாறு இல்லாதுவிடில் அது சாத்தியமற்ற தொன்றாகிவிடும் அதாவது போர் நிறுத்தம் என்பதை எதன் அடிப்படையில் கண்காணிப்பது? என்பதே கேள்விக்குரிய விடயமாகிவிடும்.

இதில் யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகள் பலவற்றையும் சிறிலங்கா அரசாங்கம் புறக்கணித்தமை போகட்டும.; யுத்த நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையான விடயமாக அமைந்த விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கையில் போர்நிறுத்த உடன்பாடும் கண்காணிப்பு என்பதும் எவ்வாறு சாத்தியப்பாடானதாகும்?

பேச்சிற்கு எடுத்துக் கொண்டால் யுத்தநிறுத்த உடன்பாட்;;;;டின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் கட்டு;ப்பாட்டுப் பிரதேசம் என ஏற்றுக் கொள்ளப்பட்டு தற்பொழுது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இராணுவம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் யுத்த நிறுத்த மீறலாகக் கொள்ளத்தக்கவையா? அன்றி விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் வலிந்து தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறலாகக் கொள்ளத்தக்கவையா?

தற்போதைய நிலையைப் பார்க்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் புலிகள் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டால் அதனை யுத்த நிறுத்த மீறல் எனப்பதிவு செய்து கொள்ளும் போல் தெரிகின்றது. அவ்வாறு இல்லாவிடில் சிறிலங்கா அரசுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு அதனால் வரமுடிந்திருக்காது அத்தோடு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் இருப்பிற்கும் அது தேவையாக உள்ளது. இல்லாதுவிடில் மகிந்த தேவையில்லை கோத்தபாயவே கண்காணிப்புக் குழுவை வெளியேற்றி விடக்கூடும்.

நன்றி: ஈழநாதம்

நன்றி-தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.