Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`மகனுக்கு 18 வயது ஆனதும் தந்தையின் கடமை முடிந்து விடாது!' - ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`மகனுக்கு 18 வயது ஆனதும் தந்தையின் கடமை முடிந்து விடாது!' - ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம்

Court (Representational Image)

Court (Representational Image)

சம்பந்தப்பட்ட பெண் சம்பாதிக்கும் பணம், இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. இதனால் மகனின் படிப்புச் செலவுக்குப் பணம் இருப்பதில்லை. இரண்டு குழந்தைகளும் அம்மாவுடன் வசிக்கின்றனர்.

கணவன், மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு பெரும்பாலான நேரங்களில் அம்மாவிடமே வழங்கப்படுகிறது. இதுபோன்ற விவாகரத்துகளில் விவாகரத்து பெறும் பெண்ணுக்கு குடும்ப நல நீதிமன்றங்கள் சொற்ப அளவு மட்டுமே ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிடுகின்றன. அந்தப் பெண்ணின் பொறுப்பில் இருக்கும் அத்தம்பதியின் குழந்தைகளின் எதிர்காலத்தையோ, அவர்களின் படிப்பையோ கவனத்தில் கொள்வதில்லை. அப்படி ஒரு விவாகரத்து வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 1997-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.

Divorce
 
Divorce

கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011-ம் ஆண்டு பிரிந்து விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். இவ்வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் 18 வயதை அடையும் வரையிலும், மகள் வேலைக்குச் செல்லும் வரை அல்லது திருமணமாகும் வரையிலும் இருவருக்கும் பராமரிப்புச் செலவு கொடுக்கக் கணவருக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இரண்டு குழந்தைகளும் பெரியவர்களாகி விட்டதால் அவர்களுக்குப் பராமரிப்பு செலவு அதிகமாகிறது என்றும், எனவே ஜீவனாம்சத் தொகையை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரியும் கோர்ட்டில் அப்பெண் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள விசாரணை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

 

இம்மனுவை விசாரித்த நீதிபதி, ``சொற்ப பராமரிப்புச் செலவைக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண், மகன், மகள் எனத் தன் இரு பிள்ளைகளின் ஒட்டுமொத்த சுமையைச் சுமக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தற்போது வாழ்வதற்கான செலவு கடுமையாக அதிகரித்துவிட்டது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மகனுக்கு 18 வயதாகிவிட்டாலும், அவனது முழுச் செலவையும் அவன் அம்மாதான் ஏற்றுக்கொண்டுள்ளார். மகனுக்கு 18 வயதாகிவிட்டாலும் அவன் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை. இன்னும் படித்துக்கொண்டுதான் இருக்கிறான். மகனுக்கு அவன் அப்பா பராமரிப்புச் செலவைக் கொடுக்கவில்லை என்ற உண்மையை குடும்ப நல நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட பெண் சம்பாதிக்கும் பணம், இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. இதனால் மகனின் படிப்புச் செலவுக்குப் பணம் இருப்பதில்லை. இரண்டு குழந்தைகளும் அம்மாவுடன் வசிக்கின்றனர். எனவே, உடனடி நிவாரணமாகக் குழந்தைகளின் தந்தை மாதம் ரூ.15,000 பராமரிப்புச் செலவு கொடுக்க வேண்டும். அவர்களைப் பட்டினியாகப் போட முடியாது.

Court - Representational Image
 
Court - Representational Image

மகன் 18 வயதைக் கடந்துவிட்டால் தந்தையின் கடமை முடிந்துவிடாது. மகனின் படிப்பு மற்றும் இதர செலவை தாய் ஏற்க வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. இவ்வழக்கில் தம்பதியின் மகனுக்கு 18 வயதாகிவிட்டாலும் அவனது படிப்பு இன்னும் முடியவில்லை. 12-ம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளான். இனி மேற்கொண்டு படிக்க ஆகும் அனைத்துச் செலவையும் தாய்தான் ஏற்க வேண்டியிருக்கிறது. மகனுக்கு 18 வயதாகி விட்டதால் அவனது தந்தை கொடுக்கும் பராமரிப்புச் செலவை நிறுத்திவிட்டார். இதனால் குழந்தைகளின் செலவை அவர்களின் தாய் தனது வருமானத்தில் செலவு செய்து வருகிறார். இதை கோர்ட் பார்த்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டிருக்காது. மகனுக்கு வேலை கிடைக்கும் வரை அல்லது படிப்பு முடியும் வரை மாதம் ரூ.15,000 பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும்" என்று நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் உத்தரவிட்டார்.

குழந்தைகளின் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் மாதம் ரூ.1.67 லட்சம் சம்பளம் பெறுகிறார்.

 

https://www.vikatan.com/social-affairs/judiciary/fathers-obligation-wont-end-for-just-son-attains-age-of-18-says-delhi-high-court

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.