Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருக்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருக்கின்றது.

Written by Ravanan - Jul 04, 2007 at 04:24 PM

மகிந்த ராஜபக்ஸ பதவியேற்றதன் பின்னர் 12 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த பயணங்களின்போது ஜனாதிபதியுடன் 640 பேர் சென்றுள்ளதுடன் இந்த பயணங்களுக்கென மொத்தமாக 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருப்பதாகவும் கபீர் ஹாசிம் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகள் மற்றும் விஷேட கருத்திட்டங்கள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை என்பன மீதான விவாதத்தில் பேசும்போதே கபீர் ஹாசிம் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

தற்போதைய அரசாங்கம் இதுவரை இலங்கை வங்கியிலிருந்து மட்டும் மேலதிக பற்றாக 50 பில்லியன் ரூபாவை பெற்றுள்ளது. இவை 2 கணக்குகளின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளன. முதலாவது கணக்கின் மூலம் 27 பில்லியன் ரூபாவும் 2 ஆவது கணக்கின் ஊடாக 23 பில்லியன் ரூபாவும் மேலதிக பற்றாக பெறப்பட்டுள்ளன. இவை அரசினால் இலங்கை வங்கியிலிருந்து பெறப்பட்ட மேலதிக பற்று மாத்திரமே.

இதற்கு மேலதிகமாக மக்கள் வங்கி, ஊழியர் சேமலாப நிதியம் என்பவற்றிலிருந்தும் அரசாங்கம் பாரியளவு தொகையை எடுத்திருக்கிறது. இதேநேரம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில் அதிகபட்சமாக 35 பில்லியன் ரூபா மட்டுமே இலங்கை வங்கியிலிருந்து மேலதிகப் பற்றாக பெறப்பட்டிருந்தது. எமது ஐ.தே.க. ஆட்சி காலத்தில் அது பூச்சிய நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

எனினும், இந்த அரசாங்கம் கடந்த சொற்ப காலத்தில் மட்டும் 50 பில்லியன் ரூபாவை இலங்கை வங்கியிலிருந்து மட்டும் மேலதிக பற்றாக பெற்றுள்ளது.

இது மட்டுமல்லாது, ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தும் கடந்த வருடம் அரசாங்கம் 37 பில்லியன் ரூபாவை எடுத்துள்ளது. அமைச்சர்களுக்கு புதிய சொகுசு வாகனங்கள் வாங்குவதற்காக இத்தொகையிலிருந்து பெருமளவு செலவிடப்பட்டுள்ளது.

அரசிலுள்ள அமைச்சர்களின் பராமரிப்பு தேவைகளுக்காக மட்டும் மாதாந்தம் இலட்சக் கணக்கில் செலவிடப்படுகிறது. அமைச்சர்களுக்கு புதிய வாகனங்கள் வாங்கவென இலட்சக் கணக்கில் செலவிடப்படுகிறது. 110 அமைச்சர்கள் சொகுசாக வாழ்வதற்காக முழுநாடும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சகல இடங்களிலும் தொழிற்சங்கங்கள் வைத்திருக்கும் ஜே.வி.பி.யினர் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து அரசினால் பணம் எடுக்கப்பட்டபோது எதிர்ப்புத் தெரிவிக்காமைக்கு அவர்கள் மீது நான் குற்றஞ் சுமத்துகிறேன். இதேநேரம், மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றது. முதல் இதுவரை 12 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். இதன் போதெல்லாம் இவருடன் 640 பேர் பயணித்திருக்கின்றனர். இதன் பிரகாரம் இந்த 12 வெளிநாட்டு பயணங்களுக்காகவும் மொத்தமாக 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

ஆனால், இவ்விஜயங்களின் போது, நாட்டுக்கு பயன்தரும் எந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டதாக தெரியவில்லை. நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இப்படி நிதியை வீண் விரயமாக்கிக் கொண்டிருக்கின்றனர். மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் நகர்ப் பிரதேசங்கள் வளர்ச்சி பெறும் அதேநேரம், கிராமிய பிரதேசங்கள் மேலும் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் நிதி இடைநிறுத்தப்பட்டு சுதந்திரக் கல்வி இல்லாமல் ஆக்கப்படுகிறது.

உதாரணமாக கடந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் 51 சதவீதமான மாணவர்கள் சித்தி பெறவில்லை. கிராமிய மட்டத்திலான மாணவர்களே இதில் அதிகமானவர்கள். கிராமிய மட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் இல்லாமையே இதற்கு காரணம். அத்துடன், அரசாங்கம் பல வழிகளிலும் வரிகளை அறவிட்டு வருகிறது. அரசிடம் நிதி பற்றாக்குறை நிலவுவதே இதற்கு காரணம். வரி அறவிடுவதில் தவறில்லை. எனினும், வரிகளை அறவிட்டு அவற்றை யுத்தத்திற்கு பயன்படுத்தினால் பரவாயில்லை.

அதைவிடுத்து அவற்றை அமைச்சர்களுக்கென சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தினால் அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

sankathi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.