Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் இடம்பெற்ற படுகொலை- உயிரிழந்தவரின் தாயார் விடுத்துள்ள வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் இடம்பெற்ற படுகொலை- உயிரிழந்தவரின் தாயார் விடுத்துள்ள வேண்டுகோள்!

 

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் படுகொலைக்கு நீதிவேண்டும் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளளார்.

கடந்த மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையிலேயே இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது குறித்த சந்தேக நபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையான, உயிரிழந்தவரின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எனது மகனுக்கு என்ன நடந்தது எதனால் பிரச்சினை வந்தது என்பதுடன் எனது பிள்ளைக்கு நீதி கிடைக்கவேண்டும் அதுமட்டும் தான் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

https://www.meenagam.com/வியாழேந்திரனின்-வீட்டி-2/

 

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘அடித்து கொன்று சுட்டுப் போட்டான்கள்’: தாய் கதறல்

image_c7673ef899.jpg

கனகராசா சரவணன்

எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு  சுட்டுப் போட்டான்கள் இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும்  படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார் கதறியழுதார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவர் மேற்கொண்ட துப்பாகி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலின் வழக்கு விசாரணை இன்று (01) நடைபெற்றது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில்  இன்று வெள்ளிக்கிழமை (01) எடுக்கப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா.. சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர். 

ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போது மட்டக்களப்பு பொலிஸார் பாக்க மாட்டினம் இதனை சிஜடி யிடம் கொடுக்குமாறு நீதவான் தெரிவிக்கின்றார். ஆனால், அதற்கு பொலிஸார் ஒரு பதிலும் கொடுக்கின்றார்கள் இல்லை. இந்த ஓட்டோ காரன்தான் எனது பிள்ளையை கொலைக்கு கொடுத்தவன் அவனுக்கு  எல்லாம் தெரியும் அவனை பிடிக்கவேண்டும். 

எனது மகன் படுகொலை செய்யப்படு இன்று 100 நாட்கள் கடந்துள்ளதாகவும் 8 ஆவது தடவையாக வழக்கு தவணை போகின்றது பொலிஸார் ஒன்றும் தெரிவிக்கவில்லை எறாவூர் பொலிசார் தலைமையில் விசாரணை இடம்பெறுகின்றது .

அவர்கள் பணக்கார் அரசியல்வாதி நாங்கள் ஏழைகள் என்பதால் எதுவும் நடக்கவில்லை இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா எனது மகனின் படுகொலைக்கு நீதிவேண்டும் என படுகொலை செய்யப்பட்வரின் தாயாரான மகாலிங்கம் சின்னப்பிள்ளை கண்ணீர்மல்க தெரிவித்தார். 

இதேவேளை கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/அடித்து-கொன்று-சுட்டுப்-போட்டான்கள்-தாய்-கதறல்/73-282056

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாயாருக்கு நீதி  கிடைக்க  யாரும் உதவ மாட்டார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.