Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைந்து செயற்பட புதிய கட்டமைப்பு அவசியமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைந்து செயற்பட புதிய கட்டமைப்பு அவசியமில்லை

July 8, 2021

ITAK இணைந்து செயற்பட புதிய கட்டமைப்பு அவசியமில்லை; தமிழரசுக் கட்சி முடிவு

 

தமிழ் கட்சிகள் இணைந்து அரசியல் ரீதியாகச் செயற்படுவதற்கு புதிய கட்டமைப்பு எதையும் உருவாக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டதாக அறிய வந்தது.

இந்தத் தீர்மானத்தினால் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் ரெலோவின் தற்போதைய முயற்சி முளையிலேயே கருகும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அவதானிகள் கருத்துக் கூறுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் இரண்டரை மணி நேரம் இக்கூட்டம் நடை பெற்றது. கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், கலையரசன், பதில் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் பங்கு பற்றினர். கட்சியின் இரு சிரேஷ்ட துணைத் தலைவர்களான செல்வராசா, சி.வீ.கே.சிவஞானம் மற்றும் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தின் ஆரம்பத்தில் புதிய அரசமைப்பு முயற்சி, கூட்டமைப்புடனான பேச்சுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு போன்றவற்றை ஒட்டி நீண்ட ஒரு மணி நேர விளக்கம் ஒன்றை அளித்தார் கூட்ட மைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். மாகாண சபைத் தேர்தலை நடத்து மாறு கூட்டமைப்பு வலிமையான வற்புறுத்தலை விடுக்காமல் இருப்பது, தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தெளிவு படுத்தப்படாமல் இருப்பது ஆகியவை பற்றியும் பிரஸ்தாபிக்கப் பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவை இன்று கூட்டி இது குறித்து ஆராய்ந்த பின்னர், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி அறிவிப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.

இதே சமயம், தமிழ்த் தேசியத் தரப்புகளை ஒன்றிணைக்கும் முகமாக ரெலோவின் தரப்பினால் முன்னெடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பிரதிபலிப்பு பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப் பட்டடது. ஏற்கனவே இத்தகைய முயற்சி ஒன்று ஆண்டு முற்பகுதியில் எடுக்கப் பட்ட போது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழு அது குறித்து ஆராய்ந்து முடிவு செய்திருந்தது. அந்த முடிவில் மாறாத நிலைப் பாட்டை கட்சி பேண வேண்டும் என்று நேற்றுத் தீர்மானிக்கப் பட்டது.

நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் மூன்று தமிழ்க் கட்சிகளும் (கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி) தேவையான சமயங்களில் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரை ஒட்டிய பொது விண்ணப்பம், மகாவலி அபிவிருத்தியின் பெயரில் காணி அபகரிப்பு முயற்சியை எதிர்ப்பது போன்ற பொது விடயங்கள் யாவற்றிலும் மூன்று கட்சிகளும் ஒன்று பட்டு செயற் படுகின்றன.

எனவே தனியான கட்டமைப்பு ரீதியான செயற் பாட்டுக்கோ முயற்சிக்கோ தேவை யில்லை. இந்தக் கட்சிகள் பலவும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து போனவை தான். அவை விரும்பினால் திரும்பி வந்து சேரலாம். வாசல் திறந்தே உள்ளது. அப்படி இருக்கையில் புதிய அமைப்பு முயற்சி ஏதும் தேவையில்லை என்பதே தமிழரசு மத்திய குழு ஏற்கனவே எடுத்த முடிவு. அதையே கட்சி பின்பற்ற வேண்டும். மாறிப் போகக் கூடாது.

பிரச்சினை களையும் தேவை களையும் ஒட்டி அவற்றைக் கையாள் வதற்காக அவ்வப் போது தமிழ்த் தரப்புகள் சேர்ந்தும், ஒன்றித்தும் பயணிக்க முடியும். அதற்குத் தடை ஏதும் கிடையாது. எனவே தனியான கட்டமைப்பு உருவாக்க முயற்சி ஏதும் தேவையாக இல்லை. அத்தகைய எத்தனங்களில் தமிழரசுக் கட்சி பங்கு பற்ற வேண்டிய அவசியமும் இல்லை” என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

 

https://www.ilakku.org/no-newconfiguration-required-work-together/

 

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானேஇ சம்பந்தரiயும் சுமத்திரனையும் காய் வெட்ட மாவை எடுத்த முயற்சியை சம்பந்தர் முளையிலேயே கிள்ளி விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் கூட்டமைப்புக்குள்ளேயே முதலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்: சுரேஷ்

(ஆர்.ராம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலேயே தான் முதலில் ஒருங்கிணைந்து செயற்படுவது குறித்து ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதுவே ரெலோவின் முதற்கடமையாகவுள்ளதாக, மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் கிடையாது. நாம் அவ்விதமான முயற்சிகளை முன்னெடுத்தும் இருக்கின்றோம்.

இன்று நேற்று அல்ல, விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அவ்விதமான முயற்சிகளை முன்னெடுத்திருந்தோம். அதேபோன்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு செயற்படுத்த விளைந்தபோதும் கூட ஏனைய தரப்புக்களையும் அழைத்துச் செல்லவே விளைந்தோம்.

suresh.jpg

அவ்வாறான நிலையில் மிக அண்மையில் ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து பொது வேலைத்திட்டமொன்றையும் முன்னெடுப்பதற்கு முயற்சிகளை எடுத்திருந்தோம். முதற்கட்டமாக, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை அனைத்து தமிழ்க்கட்சிகளும் இணைந்து வழங்குவது என்பது இலக்காக இருந்தது.

அதற்குரிய பேச்சுக்களும் முன்னெடுக்கப்பட்டபோதும், தமிழரசுக்கட்சி அதனை குழப்பியது. கூட்டமைப்பு தனியாக யோசனையை  முன்வைத்தது.  அதேநேரம், ரெலோவும் கட்சிகளின் ஒருங்கிணைவையும் விமர்சித்து, புதிய கூட்டு உருவாகுவதாக குறிப்பிட்டு அதற்கு எதிராக தீர்மானத்தினையும் நிறைவேற்றியது.

அவ்விதமான நிலையில் தற்போது ரெலோ ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றது. நாம், கடந்த கால விடயங்களை மறந்து அதில் பங்கேற்றிருந்தோம். ஆனால் தற்போது தமிழரசுக்கட்சியே மீண்டும் குழப்பும் வகையில் அதன் அரசியல் பீடத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஆகவே, இந்த விடயத்தில்  முதலில்  ரெலோ தான் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ஒருமித்த நிலைப்பாடொன்றை மேற்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு ரெலோ இதயசுத்தியுடன் செயற்படுமாகவிருந்தால் கூட்டமைப்பில் அதற்குரிய நடவடிக்களை முன்னெடுப்பதே அதன் முதற்கடமையாகின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/109178

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கட்சிகளும் கூட்டுக்களும் கட்டமைப்பை மாற்ற வேண்டியதில்லை: பொதுத்தளத்தில் பணியாற்றவே அழைப்பு - ரெலோ

(ஆர்.ராம்)

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுத்தளமொன்றில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதையே இலக்காக கொண்டு ஒருங்கிணைக்கும் பணியை ரெலோ முன்னெடுத்துள்ளதே தவிர,  எந்தவொரு அரசியல் கட்சிகளினதும், கூட்டுக்களினதும் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ரெலோ தெரிவித்துள்ளது.

ரெலோவின் முயற்சியில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி ஆகிய தரப்புக்கள் பொதுத்தளத்தில் பணியாற்றுவது பற்றி பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் கொழும்பில் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக பலத்த விமர்சனங்களும், எதிர்மறையான நிலைப்பாடுகளும் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

surenthiran.jpg

இந்த நிலையில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த ரெலோ அடுத்த கட்டமாக எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன என்பது அத்தரப்புக்கள் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள், செயற்பாடுகள் மூலமாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

அவ்வாறான நிலையில் தான் ரெலோ பொதுப்பிரச்சினைகள் தொடர்பில் பொதுத்தளமொன்றில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவதென்றும் பிரதான விடயங்களான வடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைத்தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டக்கூடிய விடயங்களில் இணைந்து செல்வதென்றும் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள அரசியல் தரப்புக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது.

இந்தச் செயற்பாடானது புதிய கூட்டொன்றை முன்னெடுப்பது என்று கருதுவது தவறானதாகும். எந்தவொரு அரசியல் கட்சியும், கூட்டுக்களும் தமது கட்டமைப்புக்களை மாற்ற வேண்டியதில்லை. அக்கட்சிகளும், கூட்டுக்களும் இணைந்து செல்லக்கூடிய விடயங்களில் இணைந்து செயற்பட முடியும் என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது.

குறிப்பாக, தமிழரசுக்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் சந்தேகங்களின்றி சரியான புரிதலைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதேநேரம், கடந்த காலத்தில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையின்போது ஆயுத விடுதலை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தே பேச்சுக்களின் ஈடுபட்டன. திம்புக் கோட்பாட்டை உருவாக்கியிருந்தன.

அண்மைய காலங்களில் கூட கொள்கை அளவில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அங்கீகரிப்பதை மறுதலித்திருந்த தரப்புக்கள் அவர் தலைமையில் நடைபெறும் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளன.

ஆகவே, தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களின் விடயங்களை கையாள்வதற்கு வலுவானதொரு தரப்பாக தமிழ்த் தேசியத்தரப்புக்கள் இருக்க வேண்டும் என்பதே ரெலோவின் நிலைப்பாடே தவிரவும் அதற்கு அப்பால் எவ்விதமான தனிப்பட்ட அரசியல் நலன்களும் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/109179

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.