Jump to content

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - நிபுணர்கள் விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - நிபுணர்கள் விளக்கம்

  • பரணிதரன்
  • பிபிசி தமிழ்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
சிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் தணியத் தொடங்கிய வேளையில், அதற்கு எதிரான தடுப்பூசி இயக்கம் அனைத்து நாடுகளாலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் கைவிடப்பட்ட அல்லது கண்டு காணப்படாத நிலையில் இருப்பவர்களாக சிறப்புக் குழந்தைகள் உள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்பட வல்லரசு நாடுகளில் கொரோனா முதல் அலை தீவிரமானபோது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்போது கொரோனா தாக்கத்தின் வாய்ப்புகளை அதிகம் கொண்டிருந்தவர்களாக மாற்றுத்திறனாளிகளும் சிறப்புக் குழந்தைகளும் இருந்தனர். முதல் அலை முடிந்து இரண்டாவது அலை தனது தாக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியபோதுதான் இந்த சமூகத்தினரையும் உள்ளடக்கிய தடுப்பூசி திட்டத்தை சில நாடுகள் அறிவித்தன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டங்கள் ஒருபுறமிருக்க, சிறப்பு குழந்தைகளின் பெற்றோரில் ஒரு பிரிவினர் தடுப்பூசி போடுவதால் தங்களுடைய குழந்தைக்கு நரம்பியல் ரீதியிலான தாக்கம் அல்லது பாதிப்பு நேரலாம் என்று அஞ்சி முக்கிய தடுப்பூசிகளை போடுவதை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது 1990களில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கையால் எழுந்த அச்சமாக தொடங்கி இன்றளவும் மக்கள் மனங்களில் நீங்காத சந்தேகமாக வேரூன்றியிருக்கிறது.

 

சில தினங்களுக்கு முன்பு கூட அமெரிக்காவின் மிஸ்ஸூரி மாகாணத்தின் வெப்ஸ்டெர் குரோவ்ஸ், நெதர்லாந்தின் ஹேக் பகுதியில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பேரணியை சிலர் முன்னெடுத்த நடவடிக்கை சர்ச்சையாகியது.

ட்யூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் ஜே. ஸ்மித் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில், அமெரிக்காவில் 2006ஆம் ஆண்டில் ஒரு சதவீதமாக இருந்த தடுப்பூசியை பெற விரும்பாதோரின் சதவீதம், அடுத்த ஆண்டு இரண்டு சதவீதமாக உயர்ந்ததாக குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் இப்போதும் தடுப்பூசி மூலம் தவிர்க்கக் கூடிய நோய் பாதிப்பால் சிறார்கள் இறப்பதை காண முடிவதாக கூறும் அவர், 2008ஆம் ஆண்டில் மின்னிசோட்டா மாகாணத்தில் ஹீமோஃபிலஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி தொற்றால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டதில் ஒருவர் இறந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த பாதிப்பு 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு பதிவானதாக பேராசிரியர் மைக்கேல் ஜே ஸ்மித் குறிப்பிடுகிறார்.

பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த அந்த சிறார்களுக்கு உரிய தடுப்பூசியை போட அவர்களின் பெற்றோர் தவிர்த்ததே காரணம் என்பது, பிந்தைய விசாரணையில் தெரிய வந்தது.

தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, சின்னம்மை போன்றவை தடுப்பூசி மூலம் தவிர்க்கப்படக்கூடிய நோய்கள். எந்த அளவுக்கு ஒரு பெரும் சமூகமாக இந்த வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறதோ அந்த அளவுக்கு அங்கு வாழும் சிறார்கள் இந்த வைரஸில் இருந்து தப்பிப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்து.

சிறார்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், பல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் பிறந்தவுடன் வளர்ச்சிக்குறைபாடு பிரச்னைகளை சந்திக்கும்போது, தடுப்பூசி போட்டால் அவர்களுக்கு ஆட்டிசம் என்ற மன வளக்குறைபாடு ஏற்படலாம் அல்லது தீவிரமாகலாம் மற்றும் மூளை சிந்தனை திறன் பாதிக்கப்படலாம் எனக் கருதி தடுப்பூசி போடுவதை தவிர்ப்பதை காண முடிகிறது.

எங்கிருந்து வலுவடைந்தது இந்த சந்தேகம்?

1998ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வேக்ஃபில்ட் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் தமது குழுவினருடன் இணைந்து நடத்திய ஆய்வு, லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. வளர்ச்சிக் குறைபாடு, இரைப்பைக் குடல் பிரச்னைகளை எதிர்கொண்ட 12 சிறார்களில் 9 பேர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்களாக இருப்பதாக அந்த ஆய்வாளர்கள் குழு கண்டறிந்தது.

அவர்களின் அறிக்கைப்படி, "12 சிறார்களும் எம்எம்ஆர் (மீசில்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு மாதத்துக்குள்ளாக அவர்களின் வளர்ச்சியில் வித்தியாசமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. எம்எம்ஆர் தடுப்பூசியில் உள்ள தட்டம்மை வைரஸ் இரைப்பை பகுதி வழியாக சென்று பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அங்கிருந்து புரதங்கள் ரத்தம் வழியாக மூளைக்குச் சென்று ஆட்டிசத்தை தோற்றுவிக்கிறது," என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை, தொலைத்தொடர்பு, மற்றும் இணையதளங்களின் அறிமுகம் அதிகம் இல்லாத காலத்திலேயே உலக அளவில் வேகமாக பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இது மருத்துவ உலகில் விவாதத்தையும் தூண்டியது.

13 வகை வைரஸ்கள் பற்றி ஆய்வு

இந்த எம்எம்ஆர் தடுப்பூசிக்கும் தட்டம்மைக்கும் ஆட்டிசத்துக்கும் இடையிலான சாத்தியமிகு தொடர்பை ஆராய உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் முற்பட்டனர். கெர்பெர் என்ற அமெரிக்க குழந்தைகள் ஊட்டச்சத்துணவு தயாரிப்பு நிறுவனமும் குழந்தைகளிடையே பரவும் தொற்று நோய் பற்றிய ஆராய்ச்சியை விரிவாக மேற்கொண்ட அமெரிக்க மருத்துவருமான பால் ஏ. ஓஃபிட்டும் 13 வகை தொற்று நோய் ஆய்வை மேற்கொண்டனர். கடைசியில் எம்எம்ஆர் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

இது ஒருபுறமிருக்க, பிரிட்டனில் 1988 முதல் 1999ஆம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் எம்எம்ஆர் தடுப்பூசி போடும் விகிதத்தில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், அந்த காலகட்டத்தில்தான் அங்கு ஆட்டிசம் குறைபாடு பாதித்த சிறார்கள் பிறப்பது அதிகமானது.

ஆட்டிசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2007ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் எம்எம்ஆர் தடுப்பூசி தொடர்பான ஆய்வு விவகாரம் தொடர்புடைய விசாரணைக்காக ஆஜராக வந்த வேக்ஃபீல்டுக்கு துணையாக நின்ற அவருடைய ஆதரவாளர்கள்

இதே காலகட்டத்தில் எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்றும் போட்டுக் கொள்ளாத சிறார்களுக்கும் ஆட்டிசம் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களின் நிலை தொடர்பான ஆய்வுகள் ஒப்பிடப்பட்டன.

1991 முதல் 1998ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் பிறந்த 5,37,303 டென்மார்க் சிறார்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களில் 82 சதவீதம் பேர் எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக் கொண்டது தெரிய வந்தது. இதில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 4,40,655 பேரில் 608 பேருக்கு மட்டுமே ஆட்டிசம் குறைபாடு இருந்தது தெரிய வந்தது. தடுப்பூசி போடாத 96,648 பேரில் 130 பேருக்கு மட்டுமே ஆட்டிசம் குறைபாடு கண்டறியப்பட்டது.

இதன் பிறகு 1999 முதல் 2010ஆம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் டென்மார்க்கில் பிறந்த 6,57,461 சிறார்களிடம் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு போடப்பட்ட எம்எம்ஆர் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர். உலக அளவில் நடத்தப்பட்ட பிற ஆய்வுகளிலும் இதே முடிவுகளே வெளி வந்தன.

சர்ச்சை மருத்துவருக்கு தடை

ஆட்டிசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எம்எம்ஆர் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் தொடர்புடையதாக எழுதிய ஆய்வறிக்கை நிரூபணமாகாத தரவு எனக்கூறி மருத்துவ பணியில் இருந்து 2010ல் விலக்கப்பட்ட தீர்ப்பை பெற்றுக் கொண்டு வெளியே வரும் ஆண்ட்ரூ வேக்ஃபீல்டு

இதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டில் லேன்செட் சஞ்சிகை, 1998இல் பிரிட்டிஷ் பொது மருத்துவ கவுன்சில் ஆய்வுத்தரவுகள் அடிப்படையிலான ஆய்வுக்குறிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து,பிரிட்டன் மருத்துவ பதிவேட்டில் இருந்து ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உள்நோக்கத்துடன் போலியான தகவல்களை ஆய்வில் புகுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு பிரிட்டனில் அவர் மருத்துவ பணியை தொடர தடை விதிக்கப்பட்டது.

எம்எம்ஆர் தடுப்பூசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக அளவில் ஆய்வறிக்கைகள் துணைநின்றாலும், அவற்றை ஒரு பிரிவு பெற்றோர் இன்னும் ஏற்காதவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டு முதல் இன்றளவும் சிலர் தட்டம்மை பாதிப்பை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். அவர்கள் 'தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்' என்கிறது அமெரிக்க நோய் கட்டுப்பாட்டுத்துறை.

இதுபோலவே அமெரிக்கா, ஐரோப்பாவில் போடப்படும் திமரோசல் தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பூசிகள் மீதும் மக்களில் ஒரு பிரிவினர் அச்சம் கொண்டவர்களாக உள்ளனர். குழந்தை பிறந்தது முதல் அதற்கு டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டசிஸ், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா போன்ற நோய்களுக்கான தடுப்பூசி போடப்படுகிறது.

இது தவிர வேறு சில இன்ஃபுளுவென்சா நோய்களுக்கும் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், இவ்வளவு தடுப்பூசிகளை போடும் அளவுக்கு தங்களுடைய பிள்ளைகளுக்கு தாங்கும் திறன் இருக்காது என்று சில பெற்றோர் நம்புவதும் தடுப்பூசியை அவர்கள் தவிர்க்க காரணம் என்கிறது மருத்துவ உலகம்.

ஒருபுறம் வைரஸ் தடுப்பூசிக்கு எதிரான தவறான தகவல்களை மருத்துவ உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வு மூலம் பொய்யானவை என நிரூபித்திருந்தாலும் 1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் வேகமாக பரவிய அந்த தகவல்கள், இன்றளவும் ஆணி வேராக பல பெற்றோரின் மனங்களில் ஊன்றி தங்களின் சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தவிர்க்கச் செய்து வருகிறது. இது குறித்த முழுமையான பின்னணியை அறியவே வரலாறில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கினோம்.

இந்தியாவில் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

சிறார்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இனி, இந்த தடுப்பூசி போடும் வழக்கத்தை தவிர்ப்பது சரிதானா என்பது குறித்து பல்வேறு தரப்பு மருத்துவர்கள், பெற்றோர் சமூகம் மற்றும் சிறப்புக்குழந்தைகளுக்கான சேவையில் ஈடுபட்டுள்ள நிபுணர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

டெல்லியில் புகழ்பெற்ற அரசு மருத்துவமனையாக விளங்கும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மன நல மருத்துவ பிரிவின் தலைமை மருத்துவரும் பேராசிரியருமான ஸ்மிதா தேஷ் பாண்டே, "கொரோனா வைரஸ் உள்பட எந்தவொரு வைரஸ் நோயிலிருந்தும் பாதுகாக்க அரசு அறிவுறுத்தும் தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகளால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை நிரூபிக்க இதுநாள் வரை அறிவியல்பூர்வ தரவுகள் கிடையாது," என்கிறார்.

"ஒருவேளை சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் தடுப்பூசி போடுவதை தவிர்ப்பவர்களாக இருந்தால், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஆபத்தான தாக்கத்தை எளிதாக எதிர்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.

"மற்ற சாதாரண குழந்தைகளை விட சிறப்புக் குழந்தைகளுக்குத்தான் வைரஸ் பாதிப்புகளில் இருந்து மேலதிக பாதுகாப்பு தேவை. அதில் சமரசத்துக்கே இடம் தரக்கூடாது," என்று அவர் வலியுறுத்தினார்.

"மன நலன் அல்லது நரம்பியல் குறைபாடுகளுடன் கூடிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் சிறார்கள், கொரோனா தடுப்பூசியை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அத்தகையோரின் பெற்றோர் முதலில் தங்களுக்கும், பிறகு தங்களுடைய பிள்ளைகளுக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்," என்று அறிவுறுத்துகிறார் ஸ்மிதா தேஷ்பாண்டே.

ஆட்டிசம்

பட மூலாதாரம்,PRAVEEN SUMAN

 
படக்குறிப்பு,

டாக்டர் பிரவீண் சுமன், சர் கங்காராம் மருத்துவமனை - டெல்லி

இதே கருத்தை மற்றொரு பிரபல மருத்துவமனையான சர் கங்காராம் மருத்துவமனையின் சிறார் வளர்ச்சி மையத்தின் இயக்குநரான டாக்டர் பிரவீண் சுமன் வலியுறுத்தினார். இவர் தலைமை வகிக்கும் மையத்தில் தினமும் கற்றல் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான சிறப்புக் குழந்தைகள் மற்றும் சிறாருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

"சிறப்புச் சிறார்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக தடுப்பூசி போடுகிறோமோ அந்த அளவுக்கு அவர்களை அந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நாம் காக்கிறோம்," என்கிறார் இவர்.

சிறப்புச்சிறார்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் நோய்வாய்ப்பாட்டால், அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய கூடுதல் தேவை, அவர்களின் பெற்றோருக்கோ பாதுகாவலருக்கோ ஏற்படும். கொரோனா வைரஸ் தடுப்பூசியை கூட இயன்றவரை விரைவாக அவர்கள் போட்டுக் கொள்ளவே நாங்கள் வலியுறுத்துகிறோம். வைரஸ் தடுப்பூசி போடும்போது, சிறப்பு சிறார்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை தரப்படுவது அவசியம்," என்றும் அவர் வற்புறுத்துகிறார்.

ஏற்கெனவே உடல் நல பிரச்னையில் உள்ள சிறாருக்கு, குறிப்பிட்ட ஒரு நோய்க்கான தடுப்பூசி போட்டால் அது அவரை பாதிக்குமா என கேட்டதற்கு, "எங்களிடம் உள்ள ஆய்வுத் தரவுகளின்படி அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறுவேன்," என்கிறார் பிரவீண் சுமன்.

சிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் எதை தேர்வு செய்ய வேண்டும் என சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆட்டிசத்துக்கான சிகிச்சை வழங்கும் ஸ்வாபிமான் அறக்கட்டளை இயக்குநர் பார்த்திபனிடம் பேசினோம்.

"ஆட்டிசம் அல்லது பிற குறைபாடுடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், பாதிப்பு அளவு கடுமையாகவே இருக்கக் கூடும். கொரோனாவின் முதல் அலையிலேயே சிறப்புச் சிறார்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். அவர்களை மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை தருவது நடைமுறையில் பல சிக்கலான சூழல்களை உருவாக்கும். அதிலும் அறிகுறி இல்லாமல் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுடன் சேர்த்து அவர்களைப் பராமரிப்பவர்களும் பல பிரச்னைகளை சந்தித்தனர். இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்தும் வைரஸில் இருந்து சிறப்புச் சிறார்களை காக்க அவர்களையும் முன்னுரிமை தரப்படுவோர் வரிசையில் சேர்த்து தடுப்பூசி போட ஊக்குவிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

ஆட்டிசம்

பட மூலாதாரம்,PARTHIBAN

 
படக்குறிப்பு,

பார்த்திபன், இயக்குநர் - ஸ்வாபிமான் அறக்கட்டளை

தடுப்பூசி போட பெற்றோர் தரப்பில் தயக்கம் காட்டப்படுகிறதா என்று கேட்டதற்கு, "இதற்கு முன்பு மக்கள் எப்படி இருந்தார்கள் என தெரியாது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் பரவல், தடுப்பூசி போட்டால் மட்டுமே பாதிப்பு தணியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. தடுப்பூசி போட்டால் மட்டுமே தீர்வு என்ற நம்பிக்கையை கொண்டவர்களாக பெற்றோர் மாறி விட்டனர். வெளிநாடுகளில் உள்ள நிலைமை வேறு. இந்தியாவில் தடுப்பூசி ஒழுக்கம் என்பது மரபு வழியாக உள்ளது," என்றார் பார்த்திபன்.

ஆட்டிசம், சிறப்புக்குறைபாடு போன்ற பிரச்னைகளைக் கடந்து,குழந்தை பிறந்தவுடன் பல்வேறு பருவங்களில் போட வேண்டிய வழக்கமான வைரஸ் தடுப்பூசியை போட்டால் ஆட்டிசம் போன்ற பாதிப்பு நேரலாம் என சிலர் கூறி தடுப்பூசி போட தயங்குகிறார்களே என்று கேட்டோம்.

"அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் போல வருடந்தோறும் இன்ஃபுளுவென்சா உள்ளிட்ட பிற காய்ச்சல், உடல் உபாதைகளுக்கு தடுப்பூசி போடும் வழக்கம் இந்தியாவில் கிடையாது. ஆனால், தங்களுடைய பிள்ளைக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளதை உறுதிப்படுத்திய பிறகு, ஹெபடைடிஸ் தடுப்பூசி போட சில பெற்றோர் தயக்கம் காட்டுவதை பார்க்க முடிகிறது. சிலர் ஆட்டிசம் பாதித்த குழந்தைக்கு எம்எம்ஆர் தடுப்பூசி போட்டால் அதற்கு பேச்சு வராமல் போகலாம் என தயங்குவார்கள். அதே சமயம், டெட்டனஸ், போலியோ போன்ற அத்தியாவசிய கட்டாய தடுப்பூசிகளை பெற்றோர் கட்டாயம் போட வேண்டும். ஆட்டிசம் குழந்தைக்கு பேச்சு தடங்கல் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் அதற்குரிய சிகிச்சையை தொடங்கி முன்னேற்றம் கண்டதும் எம்எம்ஆர் தடுப்பூசியை சில கால இடைவெளி விட்டுப் போடலாம்," என்கிறார் பார்த்திபன்.

கவலை தரும் சில வகை தடுப்பு மருந்துகள்

ஆட்டிசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெற்றோர் காட்டும் தயக்கமும், தடுப்பூசியை இடைவெளி விட்டு போடுவதும் சரிதானா என்று ஸ்பார்க் குழந்தைகள் நல சிகிச்சை மையம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கொலம்பியா பசிஃபிக் சமூகங்கள் என்ற அமைப்பின் ஆலோசகருமான டாக்டர் கார்தியாயினியிடம் பேசினோம். இவர் சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகள் மற்றும் வயோதிகர்கள் நலனுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.

"சில வகை துணைக்கூறுகள் சேர்க்கப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள், நிச்சயமாக சிறப்புக்கவனம் தேவைப்படும் சிறாருக்கு கவலை தரக்கூடியவைதான். அத்தகைய தடுப்பு மருந்தை எடுத்த பிறகு வளர்ச்சி மைல்கல்லின் பல தூரத்தை எட்டிய பல குழந்தைகள், பின்தங்கிய நிலைக்கு வந்ததை பார்த்திருக்கிறோம்," என்கிறார் இவர்.

"குறிப்பிட்ட ஒரு வெளிப்புரதத்தால் ஒருவரது உடல் எதிர்ப்புத்திறன் கட்டுப்படுத்தப்படுவதை எதிர்த்து செயலாற்றுவதே தற்போதைய தடுப்பு மருந்துகளின் நோக்கம். தனியாக இயங்கி வந்த எதிர்ப்பு ஆற்றலை தாக்கிய வைரஸுக்கு, உள்செலுத்தப்படும் மருந்து எதிர்வினையாற்றி அதற்கே உரிய வகையில் செயலாற்றுகிறது."

அந்த வகையில் இந்தியா போன்ற நாட்டில் சில வகை நோய்களை ஒழிக்க, நமக்கு நிச்சயமாக தடுப்பு மருந்துகள் அவசியம். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின்போது, வயோதிகர்களின் உயிரிழப்பு விகிதம் குறைந்தது. அவர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி மருந்தே இதற்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களையே கொரோனா தாக்கியிருக்கிறது.

சிறார்கள் அதிக அளவில் கொரோனா அறிகுறிகளை வெளிப்படுத்தாவிட்டாலும், பலர் கடுமையான காய்ச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகளை எதிர்கொண்டனர். சிறப்புக்கவனம் தேவைப்படும் பெரியவர்கள், சமூக இடைவெளி போன்ற அம்சங்களை கடைப்பிடிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள். எனவே, அத்தகையோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை தர வேண்டும்," என்று டாக்டர் கார்தியாயினி வலியுறுத்தினார்.

சிறப்புச்சிறார்களைப் பொருத்தவரை சரியான உணவு முறை, உள்ளூரிலேயே கிடைக்கும் தானியங்கள் அடங்கிய சீரான ஊட்டச்சத்து, பருவகால காய்கறிகள் மூலம் அவர்களின் உடல் எதிர்ப்புத்திறனை பெருக்கலாம். அவர்களுக்கு பாக்கெட் நொறுக்குத்தீனிகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் உணர்வுப்பூர்வமாக கைகொடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்கிறார் இவர்.

கொரோனா வைரஸில் இருந்து சிறப்புச் சிறார்களை தடுப்பு மருந்துகள் மூலம் முழுமையாக காக்க முடியுமா என கேட்டதற்கு, "வெளிப்படையாக சொல்வதென்றால் சிறார்களை கொரோனாவில் இருந்து தடுப்பூசி மருந்துகள் காக்கும் என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இந்த பெருந்தொற்றில் இருந்து ஒன்றை அறிகிறோம். சிறார்கள் இயல்பானவர்களோ சிறப்புக் கவனம் தேவைப்படுபவர்களோ யாராக இருந்தாலும், அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தை கொரோனா இல்லாத சூழலாக மாற்றினால், நிச்சயமாக அவர்கள் காக்கப்படுவார்கள். அதை உறுதிப்படுத்த வேண்டியது பெரியவர்கள் மட்டுமே. இப்போதைய சூழலில் சிறார்களின் உடல் எதிர்ப்புத்திறனை சரியான உணவுமுறை, தூக்கம், சூரிய வெளிச்சத்தில் உடலை காட்டுவது, மூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக இருப்பது போன்ற முறைகளை கடைப்பிடித்தாலே போதும், சிறார்களைக் காக்கலாம்," என்று கூறினார் டாக்டர் கார்தியாயினி.

வெளிநாடுகளில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள்

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக அளவில் தெற்காசிய நாடுகளில் வாழும் மக்கள் தடுப்பூசிகள் மீது எப்போதுமே அதிக நம்பிக்கையை கொண்டிருப்பார்கள்.

2019ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த லாபநோக்கமற்ற ஆய்வு அமைப்பான வெல்கம் குளோபல் மானிட்டர், "இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 10ல் 8 பேர் தடுப்பூசி போடுவதை விரும்புபவராக உள்ளனர். அதுவே மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் 59 சதவீதம் பேராக உள்ளனர்," என்று தமது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

ஒரு காலத்தில் போலியோ நோயால் இந்தியா பாதிப்பை எதிர்கொண்டபோது, தமது 16 ஆண்டுகால இடைவிடாத போலியோ நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் தடுப்பு மருந்தை செலுத்தி அந்த நோயை அறவே இல்லாமல் இந்தியா ஒழித்துக் காண்பித்தது.

ஆனால், அந்த உறுதிப்பாட்டை குலைக்கும் வகையில் தற்போது உலகின் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு எதிரான பிரசாரத்தை இயக்கமாக முன்னெடுக்க சிலர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.

தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நெதர்லாந்தின் ஹேக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தடுப்பூசிக்கு எதிரான பெற்றோர் இயக்கத்தினர்

"என்னுடல் என்னுரிமை", "அனார்கி ஃபார் ஃப்ரீடம்" போன்ற பல தளங்கள், தடுப்பூசிக்கு எதிரான எண்ணத்தை வலுப்படுத்த அவற்றின் பக்கங்களை பின்தொடருவோரை ஊக்குவிக்கின்றன. இத்தகைய தளங்களை வழிநடத்துபவர்கள், தங்களை "ஆன்ட்டி வேக்சர்ஸ்' (தடுப்பூசிக்கு எதிரானவர்கள்) என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

இந்த தடுப்பூசி திட்டத்தை உலக வல்லரசுகள், பெரு மருந்தக நிறுவனங்களின் பணம் கறக்கும் கூட்டுச்சதி என பிரிவினர் சமூக ஊடகங்களில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதுபோன்ற எதிர்மறை ஊக்குவிப்பாளர்களின் தகவல்களை புறந்தள்ளி விட்டு தடுப்பூசிக்கு ஆதரவான இயக்கத்தில் மக்களை சேர பல நாடுகளிலும் வெவ்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் முழு தடுப்பூசி போட்டுக் கொண்ட குடியிருப்புவாசிக்கு 1 மில்லியன் பரிசுத்தொகை லாட்டரி மூலம் வழங்கப்படும் என்று அங்குள்ள ஆளுநர் அறிவித்துள்ளார்.

சுறுசுறுப்பிலும் விடாமுயற்சியிலும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஜப்பானில் கடந்த 5ஆம் தேதி நிலவரப்படி அதன் மக்கள்தொகையில் 12.65 சதவீதம் பேர் மட்டுமே கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களை போட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் இப்போதும் சில மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டு விட்டு இரண்டாவது தடுப்பூசி எப்போது கிடைக்கும் என காத்திருக்கும் நிலையில்தான் பலரும் உள்ளனர்.

தற்போது இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும், வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வகை கொரோனா திரிபுகள் பல நாடுகளில் தோன்றுகின்றன.

இந்தியாவில் இரு தவணை கொரோனா தடுப்பூசி மருந்து டோஸ்கள் போட அறிவுறுத்தும் மத்திய, மாநில அரசுகளிடம், "புதிய வகை கொரோனா திரிபுகளை இந்த தடுப்பூசிகள் காக்குமா?", "இந்த தடுப்பூசிகளின் ஆயுள் எவ்வளவு நாளைக்கு இருக்கும்?, மீண்டும் அடுத்த ஆண்டு தடுப்பூசி போடும் நிலை வருமா?" என்று கேள்வி எழுப்பினால், அவையும் பதிலுக்காக சர்வதேச ஆய்வுகளின் முடிவுகளையே எதிர்பார்த்துக் காத்திருப்பதை பார்க்க முடிகிறது.

https://www.bbc.com/tamil/india-57770037

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.