Jump to content

போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர்

போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர்

— கருணாகரன் — 

“போர் முடிந்தாலும் அதனுடைய தாக்கம் தீருவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகும். அதுவரையிலும் இளைய தலைமுறையிடம் உளச் சிக்கல்களும் வன்முறையும் இருக்கும்” என்கிறார் உளநலத்துறைப் பேராசிரியர் தயா சோமசுந்தரம். 

“இதை மாற்ற வேண்டும் என்றால் சமூக மட்டத்தில் நிறைய வேலை செய்ய வேண்டும். இதற்கு பல தரப்பினருடைய பங்களிப்புகளும் அவசியம்” என்று கூறுகிறார் உளநல மருத்துவர் ஜெயராஜா. 

இதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். கஞ்சா, கசிப்பு, ஐஸ், தூள், பியர் என்று போதைக்கும் மதுவுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையை என்ன செய்வது, எப்படி மீட்பது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறோம். துயரம் நெஞ்சை அடைக்கிறது. ஆனால் இவர்களைத் தமக்கு இசைவாகப் பயன்படுத்துகின்ற ஒரு பிரமுகர் கூட்டமும் உண்டு. குறிப்பாக அரசியலிலும் வணிகத்திலும் உள்ளவர்கள். இப்பொழுதும் இரண்டுமே லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டவையாகி விட்டன அல்லவா! 

ஆனால் இந்த ஆபத்தையெல்லாம் புரிந்து கொள்வதற்கு நம்முடைய சூழலில் பொறுப்பானவர்கள் யாரும் தயாரில்லை.  

இதைக் குறித்து போருக்குப் பிந்திய சூழலில் கவனமெடுத்து வேலை செய்ய வேண்டும் என்று தயா சோமசுந்தரம் போன்றவர்கள் முயற்சித்தனர். அவர்கள் இதற்கான முன்திட்ட வரைபுகளையும் நம்முடைய அரசியற் தலைவர்கள் தொடக்கம் சமூகத்தின் பொறுப்பு மிக்க தரப்புகள் வரையிலானோரிடம் கொடுத்திருந்தனர். 

துயரமென்னவென்றால் அவற்றை எவரும் பொருட்டெனக் கருதவேயில்லை. ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் ஆர்வம் குன்றிய அந்த முதிய பேராசிரியர் திரும்பவும் அவுஸ்திரேலியாவுக்கே துயரத்தைக் காவிக் கொண்டு சென்று விட்டார் என்கின்றனர் அவருடைய ஜூனியர்கள். 

சமூகத்தைப் பற்றிய அக்கறையிருந்தால் நிச்சயமாகப் பலரும் தயா சோமசுந்தரம் சொன்னதைக்குறித்துச் சிந்தித்திருப்பார்கள். அல்லது தலைக்குள் சிந்திக்கக் கூடிய பொருள் ஏதும் இருந்திருந்தாலும் பேராசிரியர் சொன்னதில் கொஞ்சமாவது புரிந்திருக்கும். அதுதான் பலரிடத்திலும் இல்லையே. பதிலாக இந்த “தலைமுறையை படைத்தரப்புப் பாழாக்குகிறது” என்ற பழியை ஒற்றை வசனத்தில் பொத்தாம் பொதுவாக அள்ளிச் சுமத்தி விட்டு எல்லோரும் தமது பொறுப்புகளிலிருந்து கடந்து சென்று விட்டனர். 

ஆனால் பிரச்சினையோ மிகத் தீவிரமாக கொழுந்து விட்டெரியத் தொடங்கியுள்ளது. இந்தக் கொழுந்து விட்டு எரியும் தீ எல்லோரையும்தான் சுடும். நெருப்புக்கு எதுவும் விலக்கல்ல அல்லவா? அல்லது அது இவர்களை ஆட்பார்த்து ஏற்ற இறக்கத்துடன் நடந்து கொள்வதில்லையே. 

இன்று தெருவுக்குத் தெரு கஞ்சா விற்பனையும் வீட்டுக்கு வீடு கஞ்சாப் பாவனையும் என்ற நிலை தோன்றியுள்ளது. அந்த அளவுக்கு பல இளைஞர்கள் மிகச் சாதாரணமாகவே போதைப் பொருட்களைப் பாவிக்கின்றனர். இது போரில் பாதிப்படைந்த இளைய தலைமுறையையும் விட மோசமானது. இதை மருத்துவர்களே எச்சரிக்கையாகக் கூறுகின்றனர். போதைப் பொருட்பாவனை உண்டாக்கிய  பாதிப்பினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் தொகை கூடிக் கொண்டிருக்கிறது. போதைப் பொருளைப் பாவித்து விட்டு வன்முறையில் (வீட்டிலும் வெளியிலும்) ஈடுபட்டோர் நீதிமன்றத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் அடைபட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிறைச்சாலையினுள்ளே உளச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடைய கதைகளைக் கேட்டால் தலை சுற்றும். நம்முடைய உள்ளம் உடைந்து கண்ணீர் பெருகும். அந்தளவுக்குப் பரிதாபமானது. குற்றவாளிகள் யார் என்று பார்த்தால் பலருடைய முகங்களிலும் காறி உமிழத் தோன்றும். அந்தளவுக்கு இந்த வலைப்பின்னலும் இதற்கான பின்னணியும் உள்ளது. இவர்களுடைய நிலைமையைக் குறித்து பெற்றோருக்குப் பெருங்கவலை. தீராக் கவலை. இதை விட முக்கியமானது, இவர்களைக் கண்டு சமூகம் இன்று அஞ்சுவதாகும். இதை நானே நேரில் பார்த்தேன். நமக்கே அனுபவங்கள் உண்டு.  

ஒரு அனுபவம்… 

ஒரு நாள் இரவு நானும் இரண்டு நண்பர்களும் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வழியில் மின்கம்பத்தின் அடியில் திரண்டிருக்கும் இருளில் மூன்று இளைஞர்கள் நிலத்தில் படுத்திருந்தனர். என்னவோ ஏதோ என்று நானும் இன்னொரு நண்பரும் அவர்களருகில் சென்று பார்க்க முயன்றோம். “நிலைமை பிழை. பிழையான ஆட்களுக்குக் கிட்டப் போக வேண்டாம்” என்று மற்ற நண்பர் தடுத்தார். “இருந்தாலும் என்ன ஏது என்று பார்க்காமல் போக முடியாதல்லவா?” என்று கேட்டேன். “எதற்காக நாம் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும்” என்றார் நண்பர். இதைக் கேட்டபோது எனக்கும் மற்ற நண்பருக்கும் குழப்பமாகவே இருந்தது. ஆனாலும் அவர்களை அப்படியே விட்டுச் செல்வது பொருத்தமாகப் படவில்லை. இந்த நிலையில் என்ன செய்வது என்று சற்றுத் தள்ளி நின்று யோசித்தோம். 

அப்பொழுது அந்த வீதியால் மேலும் இரண்டு பேர்  வந்தனர். அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்தனர். பிறகு ஏதோ சந்தேகப்பட்டதைப்போல எங்களைப் பற்றி விசாரித்தனர். அவர்கள் அந்தத் தெருவாசிகள்.  

“அந்த மின் கம்பத்துக்குக் கீழே படுத்திருப்பவர்கள் யாரென்று தெரியவில்லை. ஏன் படுத்திருக்கிறார்கள் என்றும் தெரியாது. அதைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம்” அங்கே படுத்திருந்த இளைஞர்களைக் காட்டிச் சொன்னோம். 

“ஓ.. அதுவா! அதை ஏன் கேட்கிறீங்கள். அவங்கள் கஞ்சாக் கேஸ். பொலிஸ் கூட அவங்களை ஒண்டுமே செய்ய முடியாது. நாங்கள் எதைப் பற்றியும் கதைக்கேலாது. ஏதாவது கதைக்கப்போனால் போதையில இருக்கிறவன்கள் எதையும் செய்யக் கூடும். தேவையில்லாமல் நமக்கேன் இந்த வீண் வேலை? பேசாமல் கண்டு கொள்ளாத மாதிரிப் போய் விட வேண்டியதுதான்” என்று தணிந்த குரலில் சொல்லிக்கொண்டு போனார்கள். 

“பார்த்தாயா, நான் சொன்னதில் என்ன தப்பு?” என்று தன்னுடைய தீர்க்கதரிசனத்தைப் பற்றிப் பெருமையடித்தார் நண்பர். 

என்னதான் சொன்னாலும் எங்களால் அவர்களை அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை. மெல்ல அவர்களருகில் சென்று “ஏன் இந்த இருளில் படுத்திருக்கிறீங்கள். இந்தப் பக்கம் செடிகளும் பற்றைகளும் இருக்கல்லவா. ஏதாவது பாம்போ பூச்சியோ தீண்டினாலும்…” என்று மெல்லக் கதையை விட்டோம். 

“ஓ.. அப்படியா? உங்கட அக்கறைக்கு ரொம்பத் தாங்ஸ்” என்று ஒருவன் எழுந்தான். அவனால் சீராகத் தலையைத் தூக்க முடியவில்லை. “பாம்பெல்லாம் எங்களுக்குப் படம்தான் எடுக்கும். அதைப் பொல நாங்களும் பாம்புக்குப் படமெடுத்துக் காட்டுவம். நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். தேவையெண்டால் பாம்புப் படமொண்டை உங்களுக்கும் தரலாம். இப்ப நீங்க கிளம்புங்க” என்றான் மற்றவன். 

அவர்கள் சரியாகப் பேசவே முடியாமல் திக்கித் திணறினார்கள். சரியாகச் சொன்னால் தங்களையும் அவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. எங்களையும் சரியாகத் தெரியவில்லை. இன்னும் ஏதோவெல்லாம் புலம்பினார்கள். ஆனால் சண்டை சச்சரவுக்கெல்லாம் வரவில்லை. அதற்கான சுயநிலை அவர்களிடமிருக்கவில்லை. பலமும் கரைந்து விட்டது. 

அதற்கு மேல் எதையும் செய்வதற்கில்லை. நாங்கள் மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். 

ஆனாலும் பொலிசுக்கோ அவசர அம்புலன் சேவைக்கோ தொடர்பு கொண்டு இடத்தைச் சொல்லி அழைக்கலாமா என்று யோசித்தோம். அது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது என்று தெரியவில்லை. பெரும்பாலும் பொலிஸ் தரப்புக்குச் சொல்வதால் பயனென்ன என்ற கேள்வியும் நமக்கிருந்தது. 

இது நடந்து சரியாக இரண்டு வாரமிருக்கும். அந்த இளைஞர்களில் ஒருவர் தூக்க மாத்திரையை உட்கொண்டு இறந்து விட்டதாக அறிந்தோம். இதையிட்டுக் கவலைப்படவே முடிந்தது. 

இதைப்போல பல சம்பவங்களைப் பற்றி பல நண்பர்களும் துயரத்தோடு சொல்கிறார்கள். பொலிஸ் தரப்பின் அறிக்கைகளில் இளைய தலைமுறையின் இந்தச் சீரழிவுப் புள்ளி விவரங்களைப் பார்த்தீர்கள் என்றால் தூக்கமே வராது. நீதி மன்றத்தில் நடக்கும் விசாரணைகளின்போது இவர்கள் விசாரணைக் கூண்டில் நிற்க முடியாமல் வளைந்து சவண்டு கொண்டிருப்பதைப் பார்க்க உங்களுக்கே அழுகை வரும். சிலருக்குக் கடுமையான கோபமும் ஏற்படக் கூடும். ஆஸ்பத்திரியில் இவர்களுடைய கோலம் எல்லாவற்றையும் விட மோசமானது. இது கூடப் பரவாயில்லை. சிறைச்சாலைகளில் சொல்லவே வேண்டியதில்லை. அந்த நிலையிலும் உங்கள் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள், “எப்படியாவதுச ஒரு கொஞ்சச் சரக்கை (போதைப் பொருளை) வாங்கித் தருமாறு. அந்தளவுக்கு அதற்கு இவர்களுடைய உடலும் மனமும் அடிமையாகி விட்டது. 

இந்த நிலையில் இவர்களை என்ன செய்வது? 

நம்முடைய பலியாடுகளாக இவர்களைக் கை விடப்போகிறோமா? 

இதில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விசயங்கள் உண்டு. ஒன்று, ஏற்கனவே போதைப் பொருள் பழக்கத்துக்குட்பட்டவர்களின் நிலை. அதனால் சமூகத்துக்கு உண்டாகும் பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல். வாள் வெட்டு, அடி தடி வன்முறை, கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கள்ள மண் ஏற்றுதல், கள்ள மரம் வெட்டுதல், குழுச்சண்டைகள் என சட்டவிரோத, சமூக விரோதச் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவது. இதோடு இவர்களுடைய உடல், உள நிலையின் பாதிப்பு. மட்டுமல்ல தொடர்ந்தும் போதைப் பொருட்களை வாங்குவதற்காக கொள்ளை, களவு போன்றவற்றில் ஈடுபடுவதோடு, வீட்டிலும் இவர்கள் பெற்றோரையோ குடும்பத்தினரையோ பாடாய்ப்படுத்துகிறார்கள். ஆகவே இவர்களைச் சுற்றியிருப்போர் தொடக்கம் இவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் வரையில் இவர்களால் பெரிய துன்பத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ், நீதிமன்றம், மருத்துத்துறை, சிறைச்சாலைப் பிரிவு போன்ற தரப்புகளுக்கும் இவர்கள் பெரும் சவாலே. மொத்தத்தில் இவர்களால் எல்லோருக்குமே பெரிய நெருக்கடியே. 

இரண்டாவது, இந்தப் பழக்கத்துக்குட்படாத இளையவர்களாக இருக்கும் தங்களுடைய பிள்ளைகளும் இவர்களைக் கண்டு அல்லது இவர்களுடன் எப்படியோ தொடர்புகள் ஏற்பட்டு பாழாகி விடுவார்களோ என்ற பெற்றோரின் அச்சம். இந்தக் கவலை பெரும்பாலான பெற்றோரிடம் இன்று உருவாகியுள்ளது. 

மூன்றாவது, இவர்களால் உருவாகிய இன்னொரு அச்சமே இன்று பெண் பிள்ளைகளை பெற்றோர் கண்ணும் கருத்துமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று உருவாகியுள்ள பொல்லாத சூழல். மின் வெளிச்சமோ ஆள் நடமாட்டங்களோ குறைந்திருந்த காலத்திற் கூட ஓரளவு பாதுகாப்பாகத் தனி வழியே பெண்கள் சென்ற காலம் இன்றில்லை. வீட்டில் கூட பெண் பிள்ளைகளைத் தனியாக விட்டுச் செல்ல முடியாது என்ற அளவுக்கு பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இதையிட்ட கவலை பெற்றோரிடம் கூடியிருப்பதைக் காண்கிறோம். 

ஒரு பக்கத்தில் பெண்களுடைய சுதந்திரத்தைப் பற்றிய உரையாடல்களும் அதற்கான நல்முனைப்பும் வளர்ச்சியடைந்து வருகிறது. மறுபுறத்தில் அதற்கெதிரான போக்கும் வளர்ச்சியடைந்துள்ளது. 

நான்காவது, இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள வன்முறைச் சூழலாகும். அத்துடன் சட்டவிரோதச் செயற்பாடுகள் பெருகிச் செல்வது. 

ஐந்தாவது ஒரு தலைமுறையே கெட்டு விடும் அபாயத்தில் இருப்பது. 

இப்படிப் பல அபாய நிலைகள் இன்று உருவாகியுள்ளன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் யுத்தத்திற்குப் பிந்திய சூழலைக் கருத்திற் கொண்டு ஆற்றியிருக்க வேண்டிய பணிகளைச் செய்யாமல் விட்டதேயாகும்.  

ஒன்று உளஆற்றுப்படுத்துகை. இரண்டாவது இளைய தலைமுறைக்குப் பொருத்தமான புதிய தொழில் முயற்சிகள் மற்றும் அதற்கான கற்கைச் சூழல். மூன்றாவது குடும்பத்தின் நிலையை உயர்த்துவதில் கொண்டிருக்க வேண்டிய அக்கறைகள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வந்த பணம் உண்டாக்கிய பொறுப்பின்மைகளைப் பற்றிய எச்சரிக்கையூட்டல்களின் போதாமை. சமூகச் செயற்பாடுகளை அரசியற் தரப்பினர் மேற்கொள்ளாமல் விட்டது. சமூக நிலை பற்றிய ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறியமை என பல காரணங்கள் உண்டு. 

இப்பொழுது கூட இதொன்றும் கெட்டு விடவில்லை. இன்றிலிருந்தே இந்த அபாய நிலையை மாற்றுவதற்குப் பல தளங்களிலும் வேலை செய்ய முடியும். அப்படி வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் உள்ளிருந்து கொல்லும் இந்தப் பொல்லாத போதை என்ற பகை. அதில் இல்லாது போகும் பொன் நகையும் மென் நகையும்.  

 

https://arangamnews.com/?p=6078

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.