Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லசந்தவின் படுகொலை குறித்து சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் விசாரணை செய்ய தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லசந்தவின் படுகொலை குறித்து சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் விசாரணை செய்ய தீர்மானம்

Published on 2021-09-29 14:13:23

 
 

(நா.தனுஜா)

 

 

சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவி, அதனூடாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் 3 முன்னணி அமைப்புக்கள் ஒன்றிணைந்து, அப்படுகொலை வழக்குகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவும் அதனுடன் தொடர்புடைய அரசாங்கங்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்காகவும் 'மக்கள் தீர்ப்பாயமொன்றை' நிறுவியிருக்கின்றன.

அதன்படி வரையறுக்கப்படாத சுதந்திர ஊடகம்  (Free Press Unlimited), எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு (Committee to Protect Journalists) ஆகிய மூன்று சர்வதேச அமைப்புக்கள் இணைந்து 'ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்' என்ற கட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றன.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவைதொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதுடன் அவர்களுடைய கதைகளைக் கேட்டறிந்து பதிவுசெய்தல் ஆகியவற்றின் ஊடாக குற்றமிழைத்த அரசாங்கங்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையிலேயே இந்த மக்கள் தீர்ப்பாயத்தின் செயற்பாடுகள் அமையும்.  

அதன்பிரகாரம் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் முதலில் ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, மிக்குவேல் ஏஞ்சல் லோபேஸ் வெலஸ்கோ மற்றும் நபீல் அல்-ஷர்பாஜி ஆகியோரின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்குத் தவறியமைக்காக இலங்கை, மெக்சிகோ மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள்மீது குற்றஞ்சுமத்தியிருப்பதுடன் இதுபற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளன.

மேற்படி சம்பவங்கள் தொடர்பான முதற்கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெறவிருப்பதுடன், மனித உரிமைகள் குறித்த பிரபல வழக்கறிஞரான அல்முடெனா பெர்னாபேயூ இந்த முதற்கட்ட வழக்கு விசாரணைகளை வழிநடத்துவார்.

அதேவேளை இதன்போது ஊடக சுதந்திரம் தொடர்பான சட்டவல்லுனர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவின் உறுப்பினரான பாரோனெஸ் ஹெலெனா கென்னடி விசேட உரையொன்றையும் நிகழ்த்துவார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மேற்படி மூன்று அமைப்புக்களும், 'உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து 1400 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அவற்றில் 10 இல் 8 வழக்குகளில் கொலையாளிகள் எவ்வித தண்டனைகளுமின்றி சுதந்திரமாக இருக்கின்றார்கள். ஊடகவியலாளர்களுக்கு எதிரான மீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படாமையானது, கருத்துச்சுதந்திரத்தைப் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது' என்று சுட்டிக்காட்டியுள்ளன.

லசந்தவின் படுகொலை குறித்து சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் விசாரணை செய்ய தீர்மானம் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.