Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இழுவைப் படகு யாழ். குருநகர் மீனவர் படகு மீது மோதியதோடு படகில் இருந்தோர் மீதும் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் .குருநகர் பகுதியில் இருந்து நேற்றையதினம் இரவு 12 மணியளவில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற நிலையில், இந்திய மீனவர் படகால் மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம், இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை  கக்கடதீவு கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கக்கடதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் படகு இலங்கை மீன்பிடி  படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாக குருநகர் மீனவர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய மீனவர்களி ன்  குறித்த அத்துமீறல் சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம்  கண்டனம்  வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி  சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

20211005_110608.jpg

 

20211005_110338.jpg

 

 

 

 

 

20211005_105600.jpg

 

இந்திய இழுவை  படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்றொழில்  அமைச்சு மட்டத்தில் முறையிட்டுள்ளோம். இந்திய மீனவர்களின்  எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சனையானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

 

20211005_105456.jpg

 

 
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்திய இழுவைப் படகு மீனவர்கள்... குருநகர் மீனவர்கள் மீது தாக்குதல்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி  சேதப்படுத்திய தோடு படகில் இருந்த  குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று  12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை  கக்கடதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர்  இலங்கை மீன்பிடி  படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை செயதுள்ளார்கள்

எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது குறிப்பாக அத்துமீறிய  இந்திய மீனவர்கள் எமது படகினை  சேதப்படுத்தியதோடு மாத்திரமல்லாது படகில் இருந்த மீனவர்களின் உயிரைக் காப்பாற்றாது கடலுக்குள் தள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த போதிலும் இலங்கை மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம்  கண்டனம்  வெளியிட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி  சங்கத்தின் தலைவர்யூலியன் சகாயராஜா  இவ்வாறு தெரிவித்துள்ளார். ”

இந்திய இழுவை  படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்தொழில்  அமைச்சு மட்டத்தில்  முறையிட்டுள்ளோம் இந்திய மீனவர்களின்  எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும் இந்த பிரச்சனையானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1243066

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.