Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவரை எவர் ஏமாத்துகின்றனர்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


எவரை எவர் ஏமாத்துகின்றனர்

வளமை போலவே
இந்த முறையும்
இந்திய அதிகாரி
அதே 13 க் கதையை
சொல்லிப் போனார்

எத்தனை முறை
சொன்னார்கள் என்று
எனக்கு ஞாபகம் இல்லை
ஆனால் முப்பது வருட
கதை இது

இத்தனை வருடமாக
இந்தியாவை ஏமாத்த
இலங்கைக்கு மட்டும் தெரியும் 
இது சிங்கள இராஜதந்திரம் 

முப்பது வருடமாய்  
ஈழத் தமிழனை ஏமாத்த
இந்தியாவுக்கும் 
இலங்கைக்கும்
மட்டும் தெரியும் 
இது இன்னும் 
ஒரு இராஜதந்திரம் 

இனி வரும் காலமும் 
இன்னும் ஒரு பொருளாதார 
ஓப்பந்தம் எழுத
இந்திய அதிகாரிகள் 
மீண்டும் வருவார்கள் 
அப்பவும் இன்னும் ஒரு முறை
நினைவூட்டுவர் 
அந்த 13 க் கதையை
சற்றும் மனம் தளராத 
விக்கிரமாதித்தன் 
கதை போலே 

 மீண்டும் வேதாளம்
13 ஐ சுமந்தபடி
முருங்கை மரத்தில்
தொங்கி நின்று

ஏளனமாய்
எம்மை பார்த்து 
சிரித்தபடி சொல்கிறது 
கையில் இப்போ 
எந்தப் பலமும் 
இல்லாத நீங்கள் 
காத்திருங்கள் காத்திருங்கள்
பொன் முட்டைகள் போடும் 
வரை காத்திருங்கள் 
என்றபடியே

மீண்டும் வேதாளம்
13 ஐ சுமந்தபடி
முருங்கை மரத்தில்
தொங்கி நிற்கும்.

பா.உதயன் ✍️

கீழ் காணும் கவிதை இன்னும் ஒரு முறை நினைவூட்ட பல மாதங்களுக்கு முன் இந்திய வெளி விவகார அமைச்சர் வந்து 13 ம் தீர்வை வலியுறுத்திய போது நான் எழுதிய கவிதை. இம் முறையும் இவர் போலவே கூறிச் சென்றிருக்கிறார் வெளி விவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வந்து. வருவதும் போவதுமாய் 13 ம் சரத்து தமிழர் தீர்வை வலியுறுத்துவதுமாய் இந்தியா ஆனால் எந்தத் தீர்வும் இலங்கை கொடுத்ததாய் இல்லை. இந்தியாவுக்கு ஏதாவதை கொடுத்து எங்களுக்கானதை கொடுக்க மறுக்கிறது இலங்கை. கொடுத்ததை பெற்றுச் சென்றிருக்கிறது இந்தியா. ஏதாவது தமிழருக்கு கொடுங்கள் என்றே சொல்லிவிட்டு 

விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் 

எந்தத் தீர்வையும் 
ஈழத் தமிழனிடம்
கேட்க்காமல் 
இந்தியா போட்ட 
பிச்சை இது 

இன்னும் கிடந்து 
இழுக்குது சேடம் 
ஆயிரம் தடவை 
இந்தியா சொல்லியும் 
இலங்கை இதுக்கு 
மசிவதாய் இல்லை

ஏதோ புலி தான் 
மறுத்தினம் என்றால் 
இப்பவும் ஏன் தான் 
மறுக்கினம் கொடுக்க 

13 ம் பெட்டியோடு வந்த 
பெரியண்ணை தலையில்  
பிறத்தாலே நின்று 
துவக்கால அடிச்சும் 
சிங்களம் சொன்னது 

இந்தத் தீவில் 
எந்தத் தீர்வும் 
எப்பவும் இல்லை என்று 
அப்பவே சொன்னது 

விக்கிரமாதித்தன் 
கதையைப் போல
சற்றும் மனம் 
தளராத இந்தியா 
சந்திக்கும் பொழுதெல்லாம் 
13 ம் கதையை 
பல தடவை சொல்லும் 

இழுத்து வந்து வேதாளத்தை 
தலையில் சுமக்கும் 
கதையைப்போலே 

இதுக்கு மேலாய் 
கொடுப்போம் என்று 
இந்தியாவை மடக்கும் 
இலங்கை இராஜதந்திரம் 

இப்ப இன்னும் 
கடினம் கொஞ்சம் 
இந்தியா நினைச்சது போல் 
இந்து சமுத்திரம் இல்லை 

இனி வரும் காலம் 
சீனா காலமாம் 
இலங்கை இப்போ 
இவன் பக்கம் சாயல் 

இந்தியா நினைப்பது 
போல எதுகும் இல்லை 
எல்லா பக்கமும் 
றகன் வந்து குந்துது 

இத்தனை ஆண்டாய் 
கடத்திய இலங்கை 
அவிபிருத்தி ஒன்றே 
காணும் தமிழனுக்கு என்று 
ஆளுக்கு ஒரு 
அமைச்சு கொடுத்து 
அதிகாரப் பகிர்வை 
அடக்கியே வைத்தது 

ஆன இன்றும் கூட 
இதுகும் இல்லை 
அதுகும் இல்லை 
எதுகும் நடந்ததாய் 
இல்லை 

இன்னும் ஒரு முறை 
இந்தியா வரும் 
அப்பவும் அந்த 
13க் கதை வரும் 
இப்பவும் ஒன்றும் 
தெரியாது போல 
சீனா பார்வையோட 
சிங்கம் உறுமும்.

பா.உதயன் ✍️


“You have to learn the rules of the game. And then you have to play better than anyone else.”

― Albert Einstein

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2021 at 16:03, uthayakumar said:


எவரை எவர் ஏமாத்துகின்றனர்

வளமை போலவே
இந்த முறையும்
இந்திய அதிகாரி
அதே 13 க் கதையை
சொல்லிப் போனார்

எத்தனை முறை
சொன்னார்கள் என்று
எனக்கு ஞாபகம் இல்லை
ஆனால் முப்பது வருட
கதை இது

இத்தனை வருடமாக
இந்தியாவை ஏமாத்த
இலங்கைக்கு மட்டும் தெரியும் 
இது சிங்கள இராஜதந்திரம் 

முப்பது வருடமாய்  
ஈழத் தமிழனை ஏமாத்த
இந்தியாவுக்கும் 
இலங்கைக்கும்
மட்டும் தெரியும் 
இது இன்னும் 
ஒரு இராஜதந்திரம் 

இனி வரும் காலமும் 
இன்னும் ஒரு பொருளாதார 
ஓப்பந்தம் எழுத
இந்திய அதிகாரிகள் 
மீண்டும் வருவார்கள் 
அப்பவும் இன்னும் ஒரு முறை
நினைவூட்டுவர் 
அந்த 13 க் கதையை
சற்றும் மனம் தளராத 
விக்கிரமாதித்தன் 
கதை போலே 

 மீண்டும் வேதாளம்
13 ஐ சுமந்தபடி
முருங்கை மரத்தில்
தொங்கி நின்று

ஏளனமாய்
எம்மை பார்த்து 
சிரித்தபடி சொல்கிறது 
கையில் இப்போ 
எந்தப் பலமும் 
இல்லாத நீங்கள் 
காத்திருங்கள் காத்திருங்கள்
பொன் முட்டைகள் போடும் 
வரை காத்திருங்கள் 
என்றபடியே

மீண்டும் வேதாளம்
13 ஐ சுமந்தபடி
முருங்கை மரத்தில்
தொங்கி நிற்கும்.

பா.உதயன் ✍️

கீழ் காணும் கவிதை இன்னும் ஒரு முறை நினைவூட்ட பல மாதங்களுக்கு முன் இந்திய வெளி விவகார அமைச்சர் வந்து 13 ம் தீர்வை வலியுறுத்திய போது நான் எழுதிய கவிதை. இம் முறையும் இவர் போலவே கூறிச் சென்றிருக்கிறார் வெளி விவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வந்து. வருவதும் போவதுமாய் 13 ம் சரத்து தமிழர் தீர்வை வலியுறுத்துவதுமாய் இந்தியா ஆனால் எந்தத் தீர்வும் இலங்கை கொடுத்ததாய் இல்லை. இந்தியாவுக்கு ஏதாவதை கொடுத்து எங்களுக்கானதை கொடுக்க மறுக்கிறது இலங்கை. கொடுத்ததை பெற்றுச் சென்றிருக்கிறது இந்தியா. ஏதாவது தமிழருக்கு கொடுங்கள் என்றே சொல்லிவிட்டு 

விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் 

எந்தத் தீர்வையும் 
ஈழத் தமிழனிடம்
கேட்க்காமல் 
இந்தியா போட்ட 
பிச்சை இது 

இன்னும் கிடந்து 
இழுக்குது சேடம் 
ஆயிரம் தடவை 
இந்தியா சொல்லியும் 
இலங்கை இதுக்கு 
மசிவதாய் இல்லை

ஏதோ புலி தான் 
மறுத்தினம் என்றால் 
இப்பவும் ஏன் தான் 
மறுக்கினம் கொடுக்க 

13 ம் பெட்டியோடு வந்த 
பெரியண்ணை தலையில்  
பிறத்தாலே நின்று 
துவக்கால அடிச்சும் 
சிங்களம் சொன்னது 

இந்தத் தீவில் 
எந்தத் தீர்வும் 
எப்பவும் இல்லை என்று 
அப்பவே சொன்னது 

விக்கிரமாதித்தன் 
கதையைப் போல
சற்றும் மனம் 
தளராத இந்தியா 
சந்திக்கும் பொழுதெல்லாம் 
13 ம் கதையை 
பல தடவை சொல்லும் 

இழுத்து வந்து வேதாளத்தை 
தலையில் சுமக்கும் 
கதையைப்போலே 

இதுக்கு மேலாய் 
கொடுப்போம் என்று 
இந்தியாவை மடக்கும் 
இலங்கை இராஜதந்திரம் 

இப்ப இன்னும் 
கடினம் கொஞ்சம் 
இந்தியா நினைச்சது போல் 
இந்து சமுத்திரம் இல்லை 

இனி வரும் காலம் 
சீனா காலமாம் 
இலங்கை இப்போ 
இவன் பக்கம் சாயல் 

இந்தியா நினைப்பது 
போல எதுகும் இல்லை 
எல்லா பக்கமும் 
றகன் வந்து குந்துது 

இத்தனை ஆண்டாய் 
கடத்திய இலங்கை 
அவிபிருத்தி ஒன்றே 
காணும் தமிழனுக்கு என்று 
ஆளுக்கு ஒரு 
அமைச்சு கொடுத்து 
அதிகாரப் பகிர்வை 
அடக்கியே வைத்தது 

ஆன இன்றும் கூட 
இதுகும் இல்லை 
அதுகும் இல்லை 
எதுகும் நடந்ததாய் 
இல்லை 

இன்னும் ஒரு முறை 
இந்தியா வரும் 
அப்பவும் அந்த 
13க் கதை வரும் 
இப்பவும் ஒன்றும் 
தெரியாது போல 
சீனா பார்வையோட 
சிங்கம் உறுமும்.

பா.உதயன் ✍️


“You have to learn the rules of the game. And then you have to play better than anyone else.”

― Albert Einstein

 

9-1536392463.jpg

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👌

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.