Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை

8 மணி நேரங்களுக்கு முன்னர்
தேவமணி
 
படக்குறிப்பு,

தேவமணி

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் காரைக்காலில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்தவர் தேவமணி. வயது 53. இவரது வீடு காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் அருகே உள்ளது.

வீட்டுக்கு அருகிலேயே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் பிரதான சாலையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகம் உள்ளது. நேற்றிரவு சுமார் 10 மணியளவில் கட்சி அலுவலகத்திலிருந்து, தேவமணி அவரது ஆதரவாளருடன் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தேவமணியின் இரு சக்கர வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர். தப்பி செல்ல முயன்ற தேவமணியை மர்ம நபர்கள் ஓட ஓட துரத்தி வெட்டியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து தேவமணியை மீட்டு அவரது நண்பர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பதற்றமான சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் லெனின் பாரதியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டபோது "நேற்று இரவு குமார் என்ற ஆதரவாளருடன் தேவமணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை மறித்த 6 நபர்கள் தேவமணியை வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பியோடிய தேவமணியை அவர்கள் துரத்திச் சென்று வெட்டியுள்ளனர். பிறகு அவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து ஆதரவாளர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காவல் துறை முதற்கட்ட விசாரணையில், தேவமணி மற்றும் மணிமாறன் இருவருக்கும் இடைய ஏற்கனவே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. அவர் ஆட்களை வைத்து தேவமணியை வெட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மணிமாறன் மற்றும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த சிசிடிவி கேமரா ஆதாரங்களை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்," என்று தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி

பட மூலாதாரம்,@THEPMKOFFICIAL, TWITTER

 
படக்குறிப்பு,

பாட்டாளி மக்கள் கட்சி

இந்த சம்பவத்தை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "தேவமணி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் நேற்றிரவு கூலிப்படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தேவமணியை படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது கூலிப்படையை ஏவி கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும். தேவமணியின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவரது குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொலையை அடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க சனிக்கிழமை பகலில் இருந்து காரைக்காலில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-59020815

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக ஆட்சியில் இல்லாத ஒரு குணாம்சம்.. அரசியல் பழிவாக்கல் கொலைகள் தி மு க ஆட்சியில் எப்போதும் அதிகம். கடந்த தி மு க கருணாநிதி ஆட்சியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் கூட இப்படி அநியாயமாகக் கொல்லப்பட்டிருந்தனர். 

இது தி மு க காடைகளின்.. அதன் பின்னணியில் இயங்கும் சனநாயக விரோத மனிதப் படுகொலைக் கூலிகள் வேலையாகத்தான் இருக்க முடியும். 

குறிப்பாக தற்போதைய தி மு க தலைவர் ஸ்ராலின் மிக மோசமான கூலிப்படைகளை வழிநடத்திய ஒருவர் ஆவார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.