Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் மொழி இறுவட்டு

Featured Replies

காதல் மொழி

எனது (vnmusicdreams)நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக காதல் கடிதம்- எனும் இறுவட்டு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய ”காதல் கடிதம்” ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களில் நாங்கள் நிறைந்திருக்கின்றோம்.

நானும், இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்கிறீர்கள். அந்த வகையில் எங்களுடைய சிறகடிப்பு காதல் கடிதம் இசைத் தொகுப்போடு மட்டும் நின்றுவிடவில்லை.

இதோ இரண்டாவது படைபோடு நதியாக நாங்கள் உங்கள் முன் மீண்டும் ஓடிவருகின்றோம். எங்களை அணைப்பதும், உணர்வால் தீண்டுவதும் உங்கள் பொறுப்பு. காதல் மொழி இறுவட்டுக்காக ஒரு வருடத்திற்குமேலாக நாங்கள்உழைத்திருக்கிறோம்.

இதில் விசேஷமாக வி.ஸ்.உதயா அண்ணன் அவர்களின் அதிஉன்னதமான இசையமைப்புக்கு வெறும் வார்த்தைகளால் என்னால் நன்றி சொல்லிவிட முடியாது. எனது ஓவ்வொரு பாடலின் வரிகளுக்கும் என் இதயத்தை இசையால் நனைக்கும் அளவுக்கு மிகவும் அழகாக இசைகோர்த்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருந்த இரு ஒலிப்பதிவாளர்கள் கிருபாகரன் அண்ணா மற்றும் சாமிநாதன் இருவரையும் என் அன்பால் வணங்குகிறேன்.

இந்த இறுவட்டு உங்களை இசையால் ஆட்சி; செய்யப்போகின்றது என்பதை மட்டும் உறுதியோடு சொல்லிக்கொள்கிறேன். ஓவ்வொரு இசைக்கலைஞர்களையும் நன்றியோடு வாழ்த்துகின்றேன்

எங்கள் முதல் முயற்சிப் படியில் ஆணித்தரமாக நின்றுகொண்டு, இரண்டாவது படியில் எங்கள் காலத்தடத்தைப் இங்கே பதிவுசெய்யத்திருக்கிறோம். இந்த முறை புதிதாக நான்கு பாடகர்களை, காதல் மொழி இறுவட்டின் மூலம் அறிமுகம் செய்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். இலண்டன் மாநகரில் இருந்து எங்கள் மேல் நம்பிக்கை வைத்து சென்னைக்குச் சென்று தன் இனிய குரலை பதிவு செய்த Jackson Boscoவிற்கும் அவர் குடும்பத்திற்கும் எமது நன்றிகள். Jackson Bosco அவர்களின் திறமையை ஐ.பி.சி தமிழ் வானொலி நடாத்திய ஐரோப்பிய இன்னிசைக்குரல் 2003 இன் மூலம் அறிந்துகொண்டேன். ஐ.பி.சி தமிழ் வானொலிக்கு நன்றிகள். நாங்கள் விளம்பரப்படுத்தயிருந்த புதிய பாடகர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு அவர் குடும்பத்தினரும் என்னைத் தொடர்புகொண்டது எனக்குப் பெருமகிழ்வைத் தந்தது.

இதேபோன்று நான் வாழ்ந்து வருகின்ற நோர்வேயில் இருந்து rap இசையில் சிறந்து விளங்குகின்ற, எங்கள் தமிழ் இளைஞன் சுதாஸ் அவர்களையும் இந்த இறுவட்டில் அறிமுகப்படுத்தியிருக்கின்ற?ம். தனது ஒலிப்பதிவுகூடத்திலேயே அவர் பாடிய பாடலை பதிவுசெய்து தந்தமைக்காக எமது இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழகத்தில் இருந்து காற்றலைகளைக்கூட கட்டிப்போடக்கூடிய காந்தக்குரல் காஷ்மீரா எனும் புதிய பாடகியையும், பாவநாசம் சிவன் அவர்களுடைய பேத்தி மேற்கத்தையே குரல்வளத்தில் பாடக்கூடிய இனியகுரல் மேகா அவர்களையும் எமது நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஏற்கனவே உங்களுக்கு நன்கு அறிமுகமான மதுரக்குரலோன் மதுபாலகிருஷ்ணன், யாழ்தேவியை தன் இனிய குரலால் செலுத்தி உங்கள் இதயங்களில் நுழைந்த சாம்.பி.கீhத்தன் இந்த இறுவட்டில் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். பனங்காய்ப் பணியாரமே பாடல் மூலம் உங்களை நாவூற வாயூற வைத்த எங்கள் மதிப்பிற்குரிய கிருஷ்ணராஐ; அவர்களும் தனது உயிர்வழியும் குரலால், இம்முறை இரு பாடல்களில் உங்களை உருக வைக்கப்போகிறார். நீங்கள் கண்ணீரில் மூழ்கலாம் கைக்குட்டையை கையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த இறுவட்டில் உங்களுக்கெல்லாம் ஓர் இன்பச்செய்தியும் காத்திருக்கிறது. எத்தனையோ இனிய பாடல்களுக்கு மெட்டுப் போட்டு உங்களை பிரமிக்க வைத்த இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களை பாடகராகவும் முதன் முதலி;ல் அறிமுகப்படுத்தி வைப்பதில் நான்

இதயபூர்வமான மகிழ்ச்சியும் நிறைவும் அடைகிறேன். அவர் பாடலைக் கேளுங்கள் உங்களைத் தேடுங்கள், பிறகு கொஞ்சம் எழுந்து ஆடுங்கள்.

இந்தப் பாடல் எந்தவொரு ஏஐன்சிக்காரர்களையும் காயப்படுத்துவதற்காக அல்ல ஒரு சிலரால் காயப்பட்டு வெளிநாடு போகமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும? எமது தமிழ் உறவுகளுக்காக நகைச்சுவைப்பாடலாக மலர்கிறது.

எம் மக்களுக்கு நேர்ந்த பாரிய அனர்த்தம் சுனாமி. அது ஏற்படுத்திய பேரழிவுகள், நாம் முப்பது நிமிடங்களில் இழந்தது ஒன்றல்ல, இரண்டல்ல முப்பதுநாயிரத்திற்கு மேற்பட்ட இனிய தமிழ் உறவுகள். அந்த இனிய உறவுகளில் எத்தனை எத்தனையோ காதல் பறவைகள் தாங்கள் கால்நனைத்து விளையாடிய அலைகளோடு கரைந்து போயிருப்பார்கள். அவர்களுக்காக இங்கே சுனாமிப் பாடல் ஒன்றும் அர்ப்பணமாகிறது. இந்தச் சுனாமிப் பாடலில் தங்கள் இனிய குரல்களைப் பதிவுசெய்த காஞ்சனா, பிரியங்கா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இதில் விசேஷமாக எங்களுடைய பாடல்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்து என்னையும் உதயா அண்ணன் அவர்களையும் உலகறியச்செய்த ஊடகங்கள் முறையே நோர்வேயில் இருந்து தமிழ்முரசம் வானொலி, இலங்கையில் உள்ள சக்தி எப்.எம் வானொலி எங்கள் குடும்பவானொலி போலவே முழுமனதோடு எங்கள் பாடல்களை காற்றலைகளில் ஏத்தி பிரபல்யப் படுத்தினார்கள். இதே போலவே இலங்கையில் உள்ள சூரியன்.எப்.எம் வானொலி, தென்றல் வானொலி எனப் பட்டியல் நீள்கிறது. இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஐபிசி தமிழ் வானொhலி, அன்றைய சங்கமம் வானொலி, கனேடியத்தமிழ் வானொலி, கனேடிய பல்கலாச்சார வானொலி, கீதவானி வானொலி, ஒலிஎப்.எம் வானொலி என அனைத்து வானொலிகளுமே எங்கள் பாடல்களை இங்கு பிரபல்யப்படுத்தின. எமக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தனர். அதற்காக எனது நிறுவனமும், இசையமைப்பாளர் திரு. வி.எஸ்.உதயா அண்ணா அவர்களும் என்றுமே நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.

இதே போன்றுதான் தமிழ்ஒளி தொலைக்காட்சி, TVI தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்சி, இலங்கையில் உள்ள சக்திதொலைக்காட்சி, அவுஸ்ரேலியாவில் சிகரம் தொலைக்காட்சியென பாரிய ஒத்துழைப்பை வழங்கி எம்மைக் கௌவுரவப் படுத்தினார்கள். பத்திரிகை நண்பர்களைக் குறிப்பிட்டுகூற பக்கங்கள் போதாது ஆகவே உலகம் முழுவதும் விரவிக்கிடக்கின்ற அனைத்துலக தமிழ்ப் பத்திரிகைகளையும் , சஞ்சிகைகளையும், இணையத்தளமான தமிழ்நாதம், தமிழமுதம், அப்பால்தமிழ், தமிழ்ஓசை, யாழ், எனப் பல ஊடகங்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். அனைத்து ஊடகங்களையும் என்னால் இயன்றவரை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகோருகின்றேன். யாரையாவது தவறவிட்டிருந்தால் பெரிய மனதோடு மன்னித்துவிடுங்கள் இளம் கலைஞன் நான்.

புலம்பெயர் வாழ்வில் உங்களைப் போலவே எத்தனை இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் கலையாகப் படைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

அகரமுதல் எழுத்து உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொரு வீடுகளிலும் உங்கள் காதல் கதைகள், கனவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், சுகங்கள், துக்கங்கள், கண்ணீர் கலந்த கோபங்கள், தாபங்களை, போராடும் வாழ்வை சொல்லப்போகும் இனிய படைப்பாக காதல் மொழி அமையும்.

எங்கள் படைப்பின் மேல் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் கைகளில் எங்கள் இரண்டாவது இசைக் குழந்தையாக தவழவேண்டும் என்பது எமது விருப்பம்.

இந்த இறுவட்டுக் குழந்தையை நீங்கள் தூக்கி வைத்துக் கொஞ்சலாம், கெஞ்சலாம், அழகுபார்கலாம், அணைக்கலாம். உங்கள் தலைமாட்டில் வைத்துக்கொண்டு நித்திரைகூட செய்யலாம், கிள்ளிக்கூட விளையாடலாம், ஆக்கபூர்வமாக உங்கள் வார்த்தைகளால் வசப்படுத்தலாம். இசையால் வசமாக இதயங்கள் ஏது. ஒரே ஒரு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து இந்த இறுவட்டைப் பிரதியெடுத்தோ அல்லது இணையத்தளங்களில் ஏற்றியோ எங்கள் மனதைப் புண்படுத்தாதீர்கள். எங்களது அடுத்த முயற்சிக்கு உங்கள் பேராதரவு என்றுமே தேவை. ஒரு வீட்டுக்கு ஒரு இறுவட்டு என வாங்கிக் கேளுங்கள். இது தமிழகத்தை தந்தையாக நேசிக்கும் எங்கள் இசையமைப்பாளரினதும், தமிழீழத்தை தாயாக சுவாசிக்கும் எனதும் கலைப்படைப்பு. முத்தமிழ் உலகிற்குமான இசைமொழிதான் இந்தக் காதல் மொழி!. எங்கே உங்கள் காதுகளைத் திறந்து வையுங்கள் காற்றினிலே வரும் எம் கீதமே.

என் மனைவி, எமது குடும்பத்தினர், இனிய உறவுகள்,

எம்மேல் பாசங்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்,

சென்னையில் வாழ்கின்ற உதயா அண்ணா குடும்பத்தினர்,

நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

உங்கள் குரலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்:rolleyes:

இதயமுடன்

பாடலாசிரியர், தயாரிப்பாளர்

எஸ்.வசீகரன்

இசைவார்ப்புடன்

இசையமைப்பாளர்

வி.எஸ்.உதயா

14.05.2006

www.vnmusicdreams.com

vaseeharan.blogspot.com

kadhalkaditham.blogspot.com

www.myspace.com/vaseeharan

Edited by வலைஞன்

  • 3 weeks later...

வணக்கம்!

உங்கள் பதிவை இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. நீங்கள் தந்த தகவல்களிற்கு மிக்க நன்றி!

நீங்கள் இசைவானில் இன்னும், இன்னும் சிறகடித்து உயரப்பறக்க யாழ் கள உறவுகள் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துகள்!

யாழில் உங்கள் பாடல்களை இணைத்து அவற்றை நாம் கேட்டு மகிழ்வதற்கு சந்தர்ப்பம் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி!

நீங்கள் யாழ் களத்தில் அங்கத்தவராக இருப்பது நாம் பெருமைப் படக்கூடிய ஒரு விடயம்.

உங்கள் பாடலை வீட்டிலும், உறவினர்களிற்கும் போட்டுக்காட்டினேன். அவர்கள் அந்தப் பாடல்களை மிகவும் விரும்பி இரசித்தார்கள். நீங்கள் ஒரு ஈழத்தமிழர் என அறிந்தபோது ஆச்சரியம் அடைந்தார்கள்.

உங்கள் படைப்புக்களை ஒன்லைனில் வாங்குவதற்கு வசதி இருந்தால் அறியத்தரவும்.

நன்றி!

  • தொடங்கியவர்

அன்புள்ள கலைஞன்,

உங்கள் நல்ல கருத்துகளுக்கு என்னுடைய பணிவான நன்றிகள். நானும் உங்கள் அனைவரையும் இந்த யாழ்களம் இணையத்தளம் ஊடாக சந்திப்பதில பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு தலைவணங்குகின்றேன். இங்கு எத்தனையோ நண்பர்களுடன் உண்மையோடும், இதயசுத்தியோடும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்கின்றோம். என் கனவெல்லாம் இத்தனை உறவுகளும் என்று தங்கள் சொந்த முகத்தோடு நட்புப் பாரட்டுவார்களோ.. கிட்டத்தட்ட 3700ம் மேற்பட்ட உறவுகள்...கேட்கவே வியப்பாக இருக்கிறது.

என்னுடைய மின்னஞ்சலுக்கு உங்கள் நியப்பெயரையும் முகவரியையும் அனுப்பி வையுங்கள். நாளையோ நாளை மறுநாளோ உங்களுக்கு இரு இறுவட்டினையும் அனுப்பி வைக்கின்றேன்.

ஒரு இறுவட்டு அஞ்சல் அனுப்பும் தொகையும் சேர்த்து 10 டொலர்கள் வரும். மேலதிக விபரங்கள் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாம்.

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=8

என்றும்

அன்புடன்

தமிழ்வானம்

வசீகரன்.சி :rolleyes:

vnmusicdreams@gmail.com

தமிழ்வானம்/ வசீகரன் வணக்கம்!

நீங்கள் தந்த தகவல்களிற்கு மிக்க நன்றி!

அன்புடன்,

கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.