Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகி புராணம் – யாழ்ப்பாணத்து காமசூத்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கால Sunny Leone, Mia Khalifa போன்ற Porn Star களைப்போல 19ம் நூற்றாண்டில் யாழ் வண்ணார் பண்ணையில் வசித்தவர் பிரசித்தமான கனகி என்னும் கணிகை. கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார்  புலவர் சுப்பையனார். புலவர் வெட்டை நோய் எனும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர் என அறிய முடிகின்றது.கனகியின் 
 வாடிக்கையாளர்களில் ஆறுமுகநாவலரும்  அடங்குவார் என்பது கனகிபுராண செய்யுள்களிலிருந்து ஊகிக்க முடிகின்றது.

அவருடைய ஆதி ஒலைப்பிரதிகள் தொலைந்திருக்கவேண்டும். 19 ம் நூற்றாண்டில் கனகி புராணம் வாய்மொழி இலக்கியமாகவே இருந்திருக்கின்றது. நான் சிறுவயதில் படித்த நளவெண்பா, திருக்குறளின் காமத்து பால் என்பவற்றை விட, கனகி புராணம் கிளர்ச்சியாக இருக்கின்றது, என்பது ஆச்சரியமாகவும் , பெருமையாகவும் உள்ளது. அண்மையில் ஒரு முகநூல் பதிவின் மூலம் தான் கனகி புராணம் அறிமுகம் ஆனது, இவ்வளவு காலமும் இதனை படிக்கவில்லை என்ற கவலைக்கு உள்ளானேன்.


#செய்யுள்01
"தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத்,
தளதளத் தொன்றோ டொன்றமையா(து)
அடர்த்திமையாத கறுத்த கணதனால்
அருந்தவத் தவருயிர் குடித்து,
வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து,
மதகரிக் கோட்டினுங்கதித்துப்,
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து,
பருமித்த துணைக் கன தனத்தாள்"

#பொழிப்புரை
பருத்து அடிவிரிந்து மேலோங்கி விம்மிச் செழித்து இரண்டும் தம்முள் ஒன்றோடொன்று மென்மேலும் நெருக்கி முனைந்து நிற்பது போல ஒத்திருந்து தம்முடைய கண்களாலே செய்தற்கரிய தவஞ்செய்த முனிவருடைய உயிரைப் பருகியது போலத் தோன்றி முத்துமாலை முதலா வடங்களுக்குள் அடங்காமல், இரட்டித்துப் போட்ட இறவுக்கையையும் கிழித்து, மதம் பொழியும் யானைக் கொம்பைக் காட்டிலும் குத்துவதுபோல நிமிர்ந்து, மேலாடைக்கு மேலும் புலப்படுகின்ற, தேமல் வரிசைகள் பரந்து புடைத்த இரண்டு பாரமான கொங்கைகளை யுடையவள் (கனகி).

#செய்யுள்02
கொஞ்சிக் கடிக்கத் தனங் கொடுத்துக்
கொடுத்த தனத்தைத் தான் வாங்கும்,
மஞ்சட் புரண்ட முகத்தாளே!
மாரன் கரும்பை வளைப்பவளே!
கிஞ்சிற் றனமும் குத்திரமுங்
கேடு நிறைந்த மனமுடையோன்
வஞ்சக் கொடியோன் பெரியதம்பி
வரத்தால் வந்த வைத்தியனே.

#பொழிப்புரை
முத்தமிட்டுக் கடிப்பதற்கு தன் தனத்தை(முலைகள்) ஆடவர்க்குக் கொடுத்து, அவர் கொடுத்த தனத்தைத் தான் வாங்குகின்ற, அரைத்த மஞ்சளிலே புரண்டாற் போல் மஞ்சள் ஒட்டிய முகமுடையவளே! மன்மதனுடைய கரும்பு வில்லை வளைக்கின்றவளே! உலோபத்தன்மையும் வஞ்சனையும் வேறு கெட்ட எண்ணங்களும் நிரம்பிய மனமுடையவன் வஞ்சகஞ் செய்கின்ற இரக்கமற்ற பாவி பெரியதம்பி என்பவன். இவன் தன் பெற்றோருக்கு வரத்தினால் பிறந்த வைத்தியத் தொழிலாளி.

http://www.noolaham.org/wiki/index.php/கனகி_புராணம்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.