Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தின் யுத்தத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுப்பு.

Featured Replies

அரசாங்கத்தின் யுத்தத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுப்பு.

சிறீலங்கா அரசாங்கத்தின் யுதத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுத்துள்ளது. இன்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வினை மேற்குலக நாடுகளின் முக்கிய தூதுவர்கள் எவரும் கலந்து கொள்ளாதமை இதனை தெளிவு படுத்தியுள்தாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா நோர்வே போன்ற மேற்குலக நாடுகளின் முக்கிய தூதவர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

தூதரகத்தின் சார்பில் பாதுகாப்பு அதிகாரிகளே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு முரணான வகையில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின் வெற்றியை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யுத்த நிறுத்த மீறல்களை அனைத்துலக நாடுகள் அங்கீகரித்துள்ளது போன்ற தோற்ப்பாடு ஏற்பட்டு விடும் என்பதனாலேயே வெளிநாட்டு தூதுவர்கள் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளனர்.

இதேவேளை ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான அரசியல் கட்சிகளும் இந்த நிகழ்வினை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

-Pathivu--

Edited by யாழ்வினோ

நண்பர்களே.

அனைத்துலகத்தின் மாயைகளில் மயங்காமல் இருப்போம். உண்மையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல எனின், அரசின் போர்வெறியை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இந்த நாடகம் இன்னொரு இழுத்தடிப்புக்கான ஆரம்ப முயற்சி. :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உதயனிலிருந்து -

இந்நிகழ்வுக்கு மேற்குலகத் தூதுவர்கள் உட்படப் பெரும்பாலான இராஜதந்திரிகள் அழைக் கப்பட்டுள்ளனர். ஆனால், முக்கிய மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் பெரும்பாலும் இந்த நிகழ்வில் பங்குபற்ற மாட்டார்கள் என்று தெரிகின்றது. அவர்கள் தங்களுக்குப் பதிலாகத் தத்தமது தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்புப்பிரிவு இணைப்பாளர்களையே இந்நிகழ்வில் பங்குபற்ற அனுப்பிவைப் பர் என அறிய வந்தது.

மேற்குலகத் தூதுவர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றாமல் தவிர்ப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

""வெளிநாட்டுத் தூதுவர்கள் பங்குபற்றுவதற்கு இது இந்த நாட்டின் சுதந்திர தின நிகழ்வல்ல. உள்நாட்டு சிவில் யுத்தத்தில் அரசு பெற்ற வெற்றியை இராணுவ வெற்றியை கொண்டாடும் நிகழ்வு. ஆகவே தூதரகத்தின் இராணுவ அதிகாரி இதில் பங்குபற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் எனக் கொழும்பில் உள்ள மேற்குலக இராஜதந்திரிகள் கருதுகின்றனர்.

அதன் காரணமாகவே தூதரகத்தின் பாதுகாப்புத்துறை இணைப்பாளர்களை அனுப்பத் தீர்மானித்தோம்.'' என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார்.

""இலங்கையில் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் யுத்த நிறுத்தத்தைப் புறக்கணித்தே கிழக்கில் படை நடவடிக்கைகளை முன்னெடுத்து, பிரதேசங்களை மீட்டிருக்கின்றது இலங்கை அரசு. அத்தகைய மீட்புப் பற்றிய வெற்றி விழாவில் தூதர்கள் கலந்துகொண்டால், யுத்த நிறுத்தத்தை மீறும் நடவடிக்கைகளையும், இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வுகாண எடுக்கப்படும் முயற்சிகளையும் அந்நாடுகள் ஏற்று அங்கீகரிக்கின்றன என அது அர்த்தப்படுத்தப்படலாம். நாளைக்குப் புலிகளே அத்தகைய குற்றச்சாட்டுகளை மேற்குலக நாடுகளுக்கு எதிராக முன்வைத்தால், அது ஏற்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நாடு நடுநிலை தவறி, பக்கச்சார்பாக நடந்துகொண்டது என்றே அது கருதப்படும் நிலையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்கவே, மேற்படி நிகழ்வில் பங்குபற்றாமல் ஒதுங்கும் முடிவை மேற்குலகத் தூதர்கள் எடுத்தார்கள்.'' என்று அரசியல் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பங்குபற்ற இந்தியத் தூதருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் கொழும்பில் இல்லை. இந்தியாவிலேயே இருக்கிறார். அதனால் அவர் இந்த நிகழ்வில் பங்குபற்ற மாட்டார். இந்தியத் தூதரகத்தின் சார்பிலும் அதன் பாதுகாப்புப் பிரிவு இணைப்பாளரே பங்கு பற்றுவார் எனத் தெரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகலை வெற்றிவிழா குறித்து இணைத்தலைமை நாடுகள் அதிருப்தி

அரசாங்கத்தால் நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடத்தப்பட்ட தொப்பிக்கலை வெற்றிவிழா குறித்து இணைத்தலைமைகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. தொப்பிக்கலையை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறும் செயலென கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

தொப்பிக்கலை வெற்றிவிழாவில் கலந்துகொள்ளுமாறு இணைத்தலைமை நாடுகள் உள்ளிட்ட கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு அரசாங்கம் அழைப்பிதழ் அனுப்பியிருந்தது.

எனினும் அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, பிரித்தானியா ஆகிய இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

தொப்பிக்கலை வெற்றிவிழாவானது இராணுவ ரீதியான நிகழ்வு என கொழும்பிலுள்ள முக்கிய வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன. எனவே அந்நிகழ்வுக்கு தமது தூதுவர்களுக்கு பதிலாக தூதராங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களையும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் அனுப்பியதாக அவை கூறியுள்ளன.

இலங்கையில் முரண்பட்டுள்ள இருதரப்பும் மோதல்களை கைவிட்டு பேச்சு வார்த்தை மேசைக்கு திரும்பி இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வுகாணவேண்டும் என்பதே இணைத்தலைமை நாடுகளின் விருப்பமாகும். மாறாக இனப்பிரச்சினைக்கு இராணுவ வெற்றிகளின் மூலம் தீர்வுகாண முடியாது என இணைத்தலைமை நாடொன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், படை நடவடிக்கைகளும் இராணுவ ரீதியான வெற்றிகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவப்போவதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மேலும் பகைமையுணர்வை வளர்த்து மோதல்களை அதிகரிக்கவே செய்யும் என்றார்.

- வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகத் தூதர்கள் வரவில்லை

நேற்று கொழும்பில் நடந்த "கிழக்கு உதயம்' நிகழ்வில் மேற்குலக நாடுகளின் தூதர்கள் பங்குபெறவில்லை. மேற்குலக மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்களே இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எனினும் ஈரான், சவூதி அரேபியா, எகிப்து போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கொரியா ஆகியவற்றின் தூதர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆளுந்தரப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றின. இ.தொ.கõவின் புத்திரசிகாமணி எம்.பி., மலையக மக்கள் முன்னணியின் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் மற்றும் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

- உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.