Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ்: "ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது" - உலக சுகாதார அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: "ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது" - உலக சுகாதார அமைப்பு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஊசியைத் தயார் செய்யும் செவிலியர்

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

ஊசியைத் தயார் செய்யும் செவிலியர்

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் உலகம் முழுக்க பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுக்க 77 நாடுகளில் பெரிதும் மாற்றமடைந்த ஒமிக்ரான் திரிபு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திரிபு உலகின் மற்ற பல நாடுகளிலும் பரவி இருக்கலாம், ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்ளப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ்.

"கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிடுவதை நாம் இப்போது அறிந்து கொண்டோம். ஒமிக்ரான் திரிபு குறைந்த அளவுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தினாலும், நோயாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து, தயாராக இல்லாத சுகாதார அமைப்புகளை மீண்டும் நிறைத்துவிடும்" என்று அவர் கூறினார்.

ஒமிக்ரான் திரிபு முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது, அப்போதிலிருந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசாவே கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, தற்போது லேசான அறிகுறிகளோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஒமிக்ரான் தோன்றியதிலிருந்து தென்னாப்பிரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் பாதிக்கும் வகையில் பல நாடுகள் பயணத் தடைகளை அறிமுகப்படுத்தின, அந்நடவடிக்கைகள் ஒமிக்ரான் திரிபு உலகம் முழுவதும் பரவுவதைத் தடுக்கவில்லை.

செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட, உலக நாடுகள் மத்தியில் உள்ள நியாயமற்ற தடுப்பூசி விநியோகம் தொடர்பான கவலைகளையும் வெளிப்படுத்தினார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். மறுபக்கம் சில நாடுகள் ஒமிக்ரான் திரிபை சமாளிக்க பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றன.

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக, ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகும் குறைவாகவே நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் எனப்படும் கொரோனாவை செயலிழக்க வைக்கும் நோய் எதிர்ப்பான்கள் உற்பத்தியாவதாகக் கூறுகின்றன சமீபத்திய ஆய்வுகள். இந்த பற்றாக்குறை மூன்றாவது டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் மூலம் ஈடுசெய்யலாம் என அவ்வாய்வுகள் கூறுகின்றன.

பூஸ்டர் டோஸ்கள் கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கலாம் என டெட்ரோஸ் கூறினார். ஆனால் பூஸ்டர் செலுத்த யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதே கேள்வி எனக் கூறினார். (பரிந்துரைக்கப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கையைக் கடந்தபின்னும், மேலதிகாலமாக வழங்கப்படும் 'ஊக்குவிப்பு' டோஸ், ஆங்கிலத்தில் 'பூஸ்டர் டோஸ்' என்று அழைக்கப்படுகிறது.)

"யாருக்கு முதலில் செலுத்த வேண்டும் என்கிற வரிசை முக்கியமானது. கடுமையான நோய்த் தொற்று ஏற்பட அல்லது இறப்பு அபாயம் குறைவாக உள்ளோருக்கு பூஸ்டர்கள் செலுத்துவது, தடுப்பூசி விநியோகப் பிரச்னை காரணமாக தங்களின் முதல் டோஸ் தடுப்பூசிக்காக அதிக அபாயத்தோடு காத்திருப்போரை மேற்கொண்டு அபாயத்தில் ஆழ்த்தும்" என்று கூறினார் டெட்ரோஸ்.

உலக நாடுகளுக்கு தடுப்பூசிப் பகிர்வு திட்டமான கோவேக்ஸ் மூலம் தடுப்பூசி விநியோகங்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளன. ஆனால், இந்த ஆண்டின் மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது (இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை இடைநிறுத்தியது) போல, பல மில்லியன் டோஸ் தடுப்பூசி பற்றாக்குறை மீண்டும் ஏற்படலாம் என உலக சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இன்னமும் ஏழை நாடுகளில், சில பாதிக்கப்படக்கூடிய மக்கள் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படாமல் இருக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/global-59662849

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

women

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்றும் அடுத்த வருட தொடக்கத்தில் பிரான்ஸில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் எனவும் அந்நாட்டின் பிரதமர் ஷான் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பாவை பொறுத்தவரை பிரிட்டனில் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அங்கு வெள்ளியன்று 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றின் ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரட்டனிலிருந்து வருவோருக்கு பிரான்ஸ் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் நவம்பர் மாதம் முதல் பார்கள், உணவகங்கள் மாலை நேரங்களில் செயல்படுவதில்லை.

ஐரோப்பாவில் இதுவரை 89 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு 1.5 மில்லியன் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

பிரிட்டனில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு ஒமிக்ரான் திரிபே காரணம் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பாவில் தொற்று அதிகரித்து வருவதால் இத்தாலி, கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் என வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தடுப்பு மருந்து செலுத்தியவர்களுக்கும் பொருந்தும்.

அதேபோன்று தடுப்பு மருந்து எடுத்து கொள்ள தயங்கும் மக்களை தடுப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும் என நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

 

france

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரான்ஸை பொறுத்தவரை, தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள தயங்கும் மனப்பான்மையை எதிர்கொள்ள அடுத்த வருடம் முதல் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருப்பதாகப் பிரதமர் காஸ்டெக்ஸ் தெரிவித்தார்.

மேலும் "தடுப்பு மருந்து எடுத்து கொள்ள தயங்கும் சிலரால் மொத்த நாடும் ஆபத்தில் தள்ளப்படுவது சரியில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸை போல நெதர்லாந்திலும் அடுத்த வருடத் தொடக்கத்தில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் கடுமையான பொது முடக்கம் அமல் செய்யப்பட வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நெதர்லாந்தில் வெள்ளியன்று 15 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்த பெருந்தொற்று காலத்தில் இதுவரை இல்லாத ஒரு எண்ணிக்கை அது.

அங்கு கோவிட் நோயாளிகள் அதிகம் வருவதால் வழக்கமான மற்றும் அவசரக் கால அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியின் சுகாதாரத் துறை அமைச்சர் கார்ல் லச்சர்பாக், "இதுவரை இல்லாத ஒரு புதிய சவாலுக்கு நாம் தயாராக வேண்டும்" என தெரிவித்தார்.

ஜெர்மனியின் சுகாதார முகமை, ஃபிரான்ஸ், நார்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளன.

ஜெர்மனியில் சனிக்கிழமையன்று 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளியன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது.

பிரான்ஸ் பிரிட்டனிலிருந்து வர்த்தகம் தொடர்பாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு தடை விதித்துள்ளது.

தொற்று எண்ணிக்கையை அதிகரிப்பதை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த பயணக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு முதல் டோஸ் தடுப்பு மருந்துக்கும் இரண்டாம் டோஸ் தடுப்புக்கும் உள்ள இடைவெளியை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று உணவகங்கள் மற்றும் நீண்ட தூர பயணத்திற்காக பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் முழுவதுமாக தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-59709896

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.