Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

December 26, 2021

spacer.png

சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆம் ஆண்டுகள் பூா்த்தியடைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சுனாமி பேரலையில்  உயிரிழந்தவர்களின்  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 17வது ஆண்டு நிறைவையொட்டி இந்த நினைவேந்தல்    யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால்  அனுஷ்டிக்கப்பட்டது

அத்துடன் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியிலும் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

மேலும் மன்னார் பேசாலை வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மன்னார் மாவட்ட கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனரும், மன்னார் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.ரி.லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் நினைவேந்தல் இடம் பெற்றது.

உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசிய கலைஞர் எஸ்.ஏ.உதயன் சுடர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மீனவர்கள்,வர்த்தகர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2021/171029

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்........!  💐

நன்றி கிருபன்......!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாசிக்குடா ஆழிப்பேரலை நினைவுத்தூபியில் இடம்பெற்ற நினைவேந்தல்!

December 26, 2021
 

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த எமது உறவுகளின் 17 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இன்று 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை காலை உணர்வோடு இடம்பெற்றது. 

  • FB_IMG_1640506823232.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506819511.jpg?resize=640%2C85
  • FB_IMG_1640506812306.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506807845.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506800762.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506792623.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506789798.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506785634.jpg?resize=640%2C85
  • FB_IMG_1640506780321.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506777362.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506771118.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506768250.jpg?resize=640%2C48
  • FB_IMG_1640506761350.jpg?resize=640%2C48
  •  


 

http://www.errimalai.com/?p=70228

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி பேரலை இடரில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி!

சுனாமி பேரலை இடரில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை ,சாய்ந்தமருது ,பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, மாளிகைக்காடு ,காரைதீவு ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால் கடைப்பிடிக்கப்பட்டது.

இதன் படி கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு நினைவாலம் ,காரைதீவு சுனாமி நினைவாலயம் , கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

மேலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக இங்கு அமைக்கப்பட்ட பல தூபிகளில் மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரிப் நிர்வாக சபை இணைந்து ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டுஇவிஷேட துஆ பிராத்தனையும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதி அதிகமான உயிரிழப்புக்களையும் இ சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.received_2321546574653142-1-300x225.jpeg

received_430771348715138-300x225.jpeg?6b8

 

https://www.meenagam.com/சுனாமி-பேரலை-இடரில்-உயிர/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.