Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தனது எரிசக்தி தொடர்பான இறைமையை இழக்கப்போகின்றது – முன்னிலை சோசலிஸ கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை தனது எரிசக்தி தொடர்பான இறைமையை இழக்கப்போகின்றது – முன்னிலை சோசலிஸ கட்சி

 

 

 
———-
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் என்ன இடம்பெறுவது என்ன?
———–
Trincomalee-oil-tank-300x187.jpg
trincomalee-oil-tank22-300x169.jpg
Oil Tank Farm
இலங்கை எரிசக்தி தொடர்பான தனது சொத்துக்களை தொடர்ந்தும் தனியார்களிற்கு விற்பனை செய்து வருவதால் இலங்கை எரிசக்தி தொடர்பான தனது இறைமையை இழக்கும் என முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலையின் 99 எண்ணெய் குதங்கள் தொடர்பாக அடுத்த மாதம் இந்தியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்,என தெரிவித்துள்ள முன்னிலைசோசலிஸ கட்சியின் புபுது ஜயகொட இந்தியாவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை எண்ணெய்குதங்களிற்கு அருகில் நின்று படமெடுத்தார் இந்த படத்தை பார்த்தவேளை இது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஒருவர் எடுத்த படமில்லை இது அதிகாரத்தை வெளிப்படுத்தும்படம் என நாங்கள் தெரிவித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
என உதயகம்மன்பில அதனை நிராகரித்து வெளிவிவகார செயலாளர் அந்த இடத்தை சுற்றிபார்வையிட்டார் அவ்வளவுதான் என உதயகம்மன்பில தெரிவித்தார் என புபுது குறிப்பிட்டுள்ளார்.
puputhu.jpg
ஐஓசியிடமிருந்து சில குதங்களை நாங்கள் மீளபெறுவோம் என கம்மன்பில தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்திய தூதரகம் இதனை நிராகரித்தது,இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை என அது தெரிவித்திருந்தது என புபுது குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக யார் பொய்சொல்கின்றார் யார் உண்மை சொல்கின்றார் என்பது தெரியவந்துள்ளது,இந்தியாவுடன் 16 மாதங்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரே தெரிவிக்கின்றார்,பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் கட்டிய 99 குதங்கள் உள்ளன,இதில் 15 குதங்கள் 2003 இல் ஐஓசிக்கு வழங்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
84 குதங்கள் எஞ்சியுள்ளன இவற்றில் 16 குதங்களை சிறிய திருத்தத்துடன்பயன்படுத்தலாம்20 குதங்களை பயன்படுத்த முடியாது,2017 இல் நல்லாட்சி அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்ய முயன்றது,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முற்போக்கு சக்திகள் இந்த முயற்சியை முறியடித்தன தற்போது ராஜபக்ச அரசாங்கம் திருகோணமலை பெட்ரோலியம் டேர்மினஸ் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது,திருகோணமலை எண்ணெய் குதங்களைதிருத்துவதே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐஓசிக்கு 49 வீத பங்குகளே உள்ளன என அரசாங்கம் தெரிவித்தாலும் முழுக்கட்டுப்பாடும் அதனிடத்திலேயே இருக்கும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் அமைச்சரவை இலங்கையின் 1961 ம் ஆண்டு இலங்கை பெட்ரோலியகூட்டுத்தாபன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது, என தெரிவித்துள்ள அவா இந்த சட்டத்திற்கு( 1961) முன்னர் இலங்கையின் மீது பல நாடுகள் ஏகபோக உரிமையை கொண்டிருந்தன இதன் பின்னரே அந்த நிலைமை மாறியது எனவும் தெரிவித்துள்ளார்.
trinco-oil-fram-300x182.jpg
தனியார் மயப்படுத்தலை மேற்கொள்வதற்கு இந்த சட்டத்தினை மாற்றவேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு இருந்தது,இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் முடிவிற்கு வரும் என அமைச்சரே தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ள அவர் சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயற்கை மரணத்தை தழுவிக்கொண்டிருக்கும் நிலையில் சீனாவும் அமெரிக்காவும் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை எண்ணெயைகொள்வனவு செய்வதற்காக தனியார் நிறுவனங்களை நம்பியிருக்கவேண்டியிருக்கும் , பெட்ரோலியம் உட்கட்டமைப்பை 33 வருடங்களிற்கு ஐஓசிக்கு வழங்கிய உடன்படிக்கையை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவிடம் கையளிக்கப்பட்ட பின்னர் இறக்குமதி சுத்திகரிப்பு சேமிப்பு விநியோகம் ஆகியன தனியார்மயப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் விலைகளை கட்டுப்படுத்துவார்கள் அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியாத நிலையேற்படும் மேலும் இந்த வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் இலாபத்திற்காக முதலீடு செய்யவில்லை,பூகோள அரசியல் நோக்கங்களிற்காகவே முதலீடு செய்கின்றன திருகோணமலைஎண்ணெய் குதங்களை உதாரணத்திற்கு எடுப்போம், பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் தங்கள் படையினருக்கு விநியோகத்திற்காக அவற்றை உருவாக்கினார்கள்- இந்த குதங்களின் கொள்ளவு எங்களின் தேவைகளை விட அதிகம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம்வாய்ந்த பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக இந்தியா இதில் முதலீடு செய்கின்றது.எந்த கடல்சார் சக்திக்கும் திருகோணமலை எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம் எனவும் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/158197

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.