Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கசகஸ்தானில் தொடரும் வன்முறையால் பலர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கசகஸ்தானில் தொடரும் வன்முறையால் பலர் உயிரிழப்பு!

அரசாங்க கட்டிடங்கள் மீதான தாக்குதல்களின்போது கசகஸ்தானில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஒரு டஜன் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

Image

இதில் ஒரு பொலிஸ் அதிகாரி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் ஒரே இரவில் கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் நடந்தன, மேலும் தாக்குதல் நடத்திய டஜன் கணக்கானவர்கள் பொலிஸாரினால் அடித்து கலைக்கப்பட்டனர்.

புதனன்று நகரத்தில் பரவலான அமைதியின்மைக்குப் பிறகு கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் அரங்கேறியுள்ளதுடன், நகர மேயரின் அலுவலக கட்டிடமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சால்டனாட் அசிர்பெக் அரச செய்தி நிறுவனமான கபார்-24 க்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 12 பேரைத் தவிர மேலும் 353 சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கசகஸ்தான் சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு கண்டிராத மோசமான வன்முறை சம்பவம் இதுவாகும்.

இதனிடையே ரஷ்யா தலைமையிலான இராணுவக் கூட்டணி, ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவின் வேண்டுகோளின் பேரில் கசகஸ்தானுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்புவதாக வியாழன் அதிகாலை தெரிவித்தது.

கசகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலையை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/120354

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்!

spacer.png

கஸகஸ்தானின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்ய தலைமையிலான படைகள் கஸகஸ்தானுக்கு வந்துள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையை ஒடுக்க அவர் கள பணியில் ஈடுபடுவார்கள்.

மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் நேற்று (வியாழக்கிழமை) இரவில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஐ.நா., அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வன்முறையை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, 3,000க்கும் மேற்பட்டவர்கள் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 748 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

 

https://athavannews.com/2022/1260570

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.