Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழிலுள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலுள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு!

spacer.png

யாழிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக கற்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

“பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

அதனால் யாழிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்ப்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.

அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://athavannews.com/2022/1261631

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாக உத்தரவு

January 12, 2022
 

 

பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்ததனால் அப்பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை நாளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை
நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறுகாவல்துறையினருக்கு பணித்துள்ளார்.

நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவனையில் (Ruhbins hospital)
சத்திரசிகிச்சை செய்து கொண்ட கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்யாது நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன், தனியார் மருத்துவமனையில் பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோரை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்

 

https://globaltamilnews.net/2022/171728

 

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி, நெல்லியடியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்,கர்ப்பப்பையை அகற்றுவதற்காகச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையின் போது, தவறுதலாக வயிற்றுக்குள் 50 செ.மீ நீளமான துணியையும் வைத்து தையல் போடப்பட்டதால், கிருமித் தொற்றுக்குள்ளாகி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை யாக்கரு பகுதியைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டுள்ளது. அதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு, அந்தப் பெண் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்ணுக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. எனவே அவரது கர்ப்பப்பையை உடனடியாக அகற்றுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதனால் நெல்லியடியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரால் , குறித்த பெண்ணின் கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆயினும் இதன்போது குறித்த சத்திரசிகிச்சை நிபுணரும், அவரது குழுவினரும் தவறுதலாக பெண்ணின் வயிற்றுக்குள் , அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய 50 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் கொண்ட துணியையும் அவரது உடலுக்குள் வைத்து தைத்துவிட்டனர். இதனையறியாத குறித்த பெண் அறுவைச் சிகிச்சை முடிந்த பின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், அந்தப் பெண்ணுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்போது, பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.அவரது உயிரிழப்புக்கு அந்தத் துணியால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அலட்சியமான அறுவைச் சிகிச்சை கிருமித்தொற்றுள்ளாகி பெண் சாவு! - உதயன் | UTHAYAN (newuthayan.com)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.