Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாணசபை தேர்தல் நீக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என எமக்கு தெரியாது - தினேஷ் குணவர்த்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published by T. Saranya on 2022-02-01 10:16:03

 
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாணசபை முறை நீக்கப்பட்டுள்ளதா இல்லையா என எமக்கு தெரியாது. என்றாலும் மாகாணசபை தேர்தல் இடம்பெறாததால் மக்கள் பிரதிநிகள் இல்லாமல் பாரியளவில்  நிதி மாகாணசபை மட்டத்தில் பரிமாறப்படுகின்றமை நல்லதில்லை. அதனால் அந்த நிதியை விரைவாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவதே உகந்தது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பில் மாகாணசபை தேர்தல் முறை நீக்கப்படுவது தொடர்பாக  தெரிவிக்கப்படும்  செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாணசபை தேர்தல் இடம்பெறாததால், பாரியளவிலான பணம் மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே மாகாண மட்டத்தில் பரிமாறப்பட்டு வருகின்றது. 

மக்களின் பணம் இவ்வாறு பரிமாறப்படுவது நல்லதில்லை. அதனால் இந்த பணத்தை மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த பணத்தொகையை விரைவாக பெற்றுக்கொடுப்பதே மிகவும் உகந்தது. மாகாணசபை தேர்தலை பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொண்ட பின்பே நடத்த முடியுமாகின்றது.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்டவரைபை தயாரிக்கும் குழுவின் அறிக்கை ஆரம்பாக கையளிக்கவேண்டும். அறிக்கை கையளிக்கப்பட்டால் அதனை கலந்துரையாடலுக்கு விடுவதாக கொள்கை விளக்க உரையின்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

அதனால் புதிய அரசியலமைப்பின் சட்டவரைப்பு கிடைத்த பின்னர். அதுதொடர்பில் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மேலும், புதிய அரசிலமைப்பில் மாகாணசபை தேர்தல் முறையோ அல்லது வேறு எந்த விடயங்களானாலும் நீக்கப்பட்டுள்ளதா இல்லையா அல்லது அதுதொடர்பில் சட்ட வரைபில் இருக்கின்றதா இல்லையா என்பது தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. 

புதிய அரசியலமைப்பு தயாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் குழு அதன் அறிக்கையை கையளித்த பின்னரே அதுதொடர்பில் தெரிந்துகொள்ளலாம். என்றாலும் மாகாணசபை தேர்தல் இடம் பெறாததால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மக்களின் நிதி பாரியளவில் மாகாண மட்டத்தில் பரிமாறப்படுவது நல்லதில்லை. அதனை விரைவாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிறுவனங்களுக்கு கையளிப்பதே மிகவும் உகந்தது என்றார்.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாணசபை தேர்தல் நீக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என எமக்கு தெரியாது - தினேஷ் குணவர்த்தன | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.