Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களின் விசைப் படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். - தமிழக மீனவர் அமைப்பு நிர்வாகி குமரவேலு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் விசைப் படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். இலங்கை மீனவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவைத் துணைத் தலைவர் குமரவேலு தெரிவித்துள்ளார்,

இந்திய மீனவர்களை கண்டித்து இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் போராட்டம் குறித்து ராமேஸ்வரத்தில் உள்ள தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமரவேலு பிபிசி தமிழிடம் கூறுகையில், "கடலில் இலங்கை மீனவர்களை இந்திய மீனவர்கள் கொலை செய்ய வேண்டும் என்றோ இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் கொலை செய்ய வேண்டும் என்றோ யாருக்கும் நோக்கம் இருந்ததில்லை," என்று கூறினார்.

மேலும், ''இந்திய மீனவர்களின் விசைப் படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். இலங்கை மீனவ சங்க தலைவர்களை தமிழக மீனவ சங்க தலைவர்கள் தொடர்பு கொண்டு கேட்கும் போது, இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்," என்று குமரவேலு கூறினார்.

''தமிழக மீனவர்கள் விசைப்படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டு இருந்தால் நிச்சயம் அவர்களுடைய ஃபைபர் படகு கரை ஒதுங்கி இருக்க வேண்டும். அதேபோல் படலில் மூழ்கிய மீனவர்கள் உயிருடன் கரை திரும்பி இருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும்," என்று அவர் தெரிவித்தார். "இலங்கை மீனவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும். இந்திய மீனவர்களால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை," என்கிறார் குமரவேலு.

 
BBCCopyright: BBC
கோகிலாImage caption: கோகிலா

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களில் ஒருவரான செல்வத்தின் மனைவி கோகிலா பிபிசி தமிழிடம் கூறுகையில், ''தனது கணவரையும், உடன் சென்ற மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார். இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தங்களுக்கு சொந்தமான படகை விடுவிக்க உதவிடுமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ''அந்த படகைச் சார்ந்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் உள்ளனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அந்த படகுதான் தங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது'' என்றும் கோகிலா தெரிவித்தார்.

நீட்: ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மக்களவையில் முழக்கமிட்ட தமிழக எம்.பிக்கள் - தமிழில் செய்திகள் (bbc.com)

  • கருத்துக்கள உறவுகள்

திருடன் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.