Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் பிரதிநிதிகளின் முறையற்ற நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவது எனது உரிமையும் சிவில் சமூகக்கடமையுமாகும் - அம்பிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published by T. Saranya on 2022-02-07 15:47:38

 
 

(நா.தனுஜா)

 

மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவில் என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மிகுந்த அதிருப்தியடைகின்றேன். 

இவ்வறிக்கையானது இணையவழி வன்முறைகள் உள்ளடங்கலாக இனவாத சிந்தனையுடைய நபர்கள் எனக்கெதிராக வன்முறைகளிலும் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுவதற்கு வழிவகுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் வலுக்குறைந்த சமூகங்களை மேலும் ஒடுக்குவதுடன் அவர்களை துன்பங்களுக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்திருக்கும் பட்சத்தில் அதனைக் கேள்விக்குட்படுத்துவதும் அதற்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதும் இந்த நாட்டின் பிரஜை என்றவகையில் எனது உரிமையும் சிவில் சமூகக்கடமையுமாகும். 

இந்த உரிமைக்கு மதிப்பளிக்கூடிய நாட்டை மாத்திரமே உண்மையில் சுதந்திரமானதும் ஜனநாயக ரீதியானதுமான நாடாக அடையாளப்படுத்தமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவின் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நிகழ்நிலையில் நடைபெற்றதுடன் அதில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அந்த அமர்வில் பங்கேற்றிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவியுமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், அண்மைய காலங்களில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவருவதாகச் சுட்டிக்காட்டினார். 

அதுமாத்திரமன்றி மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுது;தங்களைப் பிரயோகிப்பதற்கான ஆயுதமாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனால் வெளியிடபப்ட்ட கருத்துக்கள் உள்ளகப்பொறிமுறை மற்றும் உள்நாட்டுக்கட்டமைப்புக்களின் ஊடாக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வது குறித்து அரசாங்கம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு தொடர்பில் சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டு வெளிவிவகார அமைச்சு கடந்த வாரம் மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது. 

வெளிவிவகார அமைச்சின் இந்நடவடிக்கைக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கும் பின்னணியில் இதுகுறித்து தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் மேலும் கூறியிருப்பதாவது:

மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவில் என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து நான் மிகுந்த அதிருப்தியடைகின்றேன். 

அந்த அறிக்கை பல்வேறு தவறான விடயங்களை உள்ளடக்கியிருப்பதுடன் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை அமைதியுறச்செய்யும் நோக்கத்தைக் கொண்டதாகவும் அமைந்திருக்கின்றது

ஐரோப்பிய ஒன்றிய உபகுழுவில் நான் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசியிருந்ததுடன் அவற்றில் அநேகமான விடயங்கள் குறித்து முன்னரே ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியிருக்கின்றேன். அவற்றைப் பொதுவெளியில் பார்வையிடமுடியும். 

அதுமாத்திரமன்றி சிவில் சமூக அமைப்புக்களாலும் செயற்பாட்டாளர்களாகும் பல வருடங்களாகப் பேசப்பட்ட கரிசனைக்குரிய விடயங்களே இவையாகும். இவ்வாறானதொரு பின்னணியில் 'தவறான வகையில் வழிநடத்துவதாக' அரசாங்கம் எனது அறிக்கைக்கு முத்திரை குத்துகின்றது.

சர்வதே மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடுகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான கருவியாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பயன்படுத்துமாறு நான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் எதிர்மறையான விதத்தில் கருத்திலெடுத்திருப்பது கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. 

மனித உரிமைகள் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதிலேயே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் கிடைப்பனவு தங்கியிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்றவகையிலும் ஐ.நாவின் சில பிரகடனங்களில் கைச்சாத்திட்டிருக்கும் நாடு என்ற அடிப்படையிலும் இந்த மனித உரிமைசார் கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இவை இலங்கை மக்களுக்கான பாதுகாப்பை வழங்கும் கடப்பாடுகளாகும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் தொடர்பான மீளாய்வின் எந்தவொரு பெறுபேறும் அச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கான கடப்பாடுகளை நிறைவேற்றத்தவறியமையின் விளைவே என்பதை அரசாங்கம் புரிந்துகொள்வதற்குத் தவறியுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும். அதேவேளை எத்தகைய விளைவுகள் ஏற்படினும் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். 

இலங்கையில் நிறைபேறான சமாதானத்தை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஆயுதப்போராட்டத்திற்கான அடிப்படைக்காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு மறுப்பதன் ஊடாகப் புறக்கணிக்கப்படுகின்றது. அவ்வடிப்படைக்காரணங்கள் தொடர்பான கலந்துரையாடலை தமிழீழ விடுதலைப்புலிகளின் திட்டமிட்ட நடவடிக்கை என்று வெளிவிவகார அமைச்சு முத்திரை குத்துகின்றது.

அதேவேளை இதுவிடயத்தில் வெளிவிவகார அமைச்சினால் அதன் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் அபாயகரமானவையாகும். வெளிவிவகார அமைச்சின் அறிக்கையைத் தொடர்ந்து எனக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட செய்திகள் குறித்து நான் அவதானம் செலுத்தியுள்ளேன். 

இவ்வறிக்கையானது இணையவழி வன்முறைகள் உள்ளடங்கலாக இனவாத சிந்தனையுடைய நபர்கள் எனக்கெதிராக வன்முறைகளிலும் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுவதற்கு வழிவகுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

மேலும் குற்றச்செயல்களுக்கான தண்டனை வழங்கப்படாத கலாசாரம் இலங்கையில் தொடர்வது குறித்து சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் மாத்திரமன்றி உயர்நீதிமன்றம் மற்றும் இல்ஙகை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றினாலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து அரச அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு வன்முறை மற்றும் மீறல் சம்பவங்கள் பகிரங்கமாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போதுவரை அச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டார்களா என்பது சந்தேகத்திற்குரிய விடயமேயாகும்.

தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் வலுக்குறைந்த சமூகங்களை மேலும் ஒடுக்குவதுடன் அவர்களை துன்பங்களுக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்திருக்கும் பட்சத்தில் அதனைக் கேள்விக்குட்படுத்துவதும் அதற்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதும் இந்த நாட்டின் பிரஜை என்றவகையில் எனது உரிமையும் சிவில் சமூகக் கடமையுமாகும். 

இந்த உரிமைக்கு மதிப்பளிக்கூடிய நாட்டை மாத்திரமே உண்மையில் சுதந்திரமானதும் ஜனநாயக ரீதியானதுமான நாடாக அடையாளப்படுத்தமுடியும். அத்தோடு நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையில் நான் வகிக்கக்கூடிய பதவி வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறக்கட்டளையி;ன சார்பில் நான் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவில் சாட்சியமளிக்கவில்லை. மாறாக மனித உரிமைகள் சட்டத்தரணி என்ற அடிப்படையிலேயே உபகுழுவில் சாட்சியமளித்தேன் என்று அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மக்கள் பிரதிநிதிகளின் முறையற்ற நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவது எனது உரிமையும் சிவில் சமூகக்கடமையுமாகும் - அம்பிகா | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.