Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலுவையாக இருந்து வருகின்ற தமிழரின் கவலைகள் புறக்கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலுவையாக இருந்து வருகின்ற தமிழரின் கவலைகள் புறக்கணிப்பு

புதுடி ல்லியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் பொருளாதார உதவி, அபிவிருத்திக்கான பங்குடைமை மற்றும் மீன்பிடி மோதல்கள்இடம்பிடித்திருந்தன

இலங்கைவெளிவிகார அமைச்சர்பேராசிரியர் ஜி . எல் .பீரிஸின்இந்திய விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களில்உள்ளடங்கியிருந்த பெரும்பாலான விடயங்கள் இரு தரப்பினராலும் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை,இலங்கைத் தமிழர்களின் நிலுவையாக இருந்துவரும் கவலைகள் என்ற ஒரு அம்சம் புதுடில்லி வெளியிட்ட அறிக்கையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதென்று இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது
gl-jai-300x174.jpg
“அபிவிருத்தி மற்றும் புனர் வாழ்வுக்கான இந்தியாவின்ஆதரவின் சாதகமான தாக்கத்தை நினைவுகூர்ந்த வெளிவிவகாரஅமைச்சர் [ஜெய்சங்கர்], ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கவுரவத்தை உறுதி செய்வதன் மூலம் இலங்கையின் நலன்கள் சிறப்பாகச் பேணப்படும் என்றும் அதிகாரப் பகிர்வு இந்த நடவடிக்கையின் ஒரு முக்கிய அம்சமாகுமென வும் வலியுறுத்தியுள்ளார்” என்று வெளிவிவகாரஅமைச்சு[இந்திய ] கூறியுள்ளது இலங்கைவெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தமிழர்கள், அவர்களின் உரிமைகள் அல்லது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரசியல் தீர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை யெனவும் இந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது
இதேவேளை இலங்கையர்கள் இந்தியாவை அதிகளவுக்கு உண்மையான, நம்பகர மான நண்பராக அங்கீகரிக்கின்றனர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியா என்பதை இலங்கை மக்கள் “அதிகளவுக்கு அங்கீகரித்து வருகின்றனர்” என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாட்டிற்குபொருளாதார நெருக்கடியின் மத்தியில் “முக்கியமான தருணத்தில்” 2.4 பில்லியன் டொ லர் உதவி வழங்கியதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
பீரிஸ் புது டி ல்லிக்கான தம து இரண்டு நாள் பயணத்தை செவ்வாயன்று நிறைவுசெய்து கொண்டார். அங்கு அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோரை சந்தித்தார். இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இந்தியா இலங்கைக்கு 400 மில்லியன் டொ லர் நாணய பரிமாற்றம், 500 மில்லியன் டொ லர் கடன் தொகை ஒத்திவைப்பு, எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டொ லர் கடன் மற்றும் தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள மற்றொரு 1 பில்லியன் டொ லர் உள்ளிட்ட அவசர நிதி உதவிகளை இந்தியா வழங்கியுள்ளநிலையில் அவரது பயணமும் இடம்பெற்றிருக்கிறது . .
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது, இலங்கைவெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அண்மையில் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தம் தொடர்பாகஅமைச்சர் பீரிஸ் , “இரு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான ஒருமைப்பாட்டைக் குறிப்பதுடன் கணிசமான நன்மைகளை விளைவிக்கும்;அத்துடன் இருசாராருக்கும் ஒரு வெற்றியான சூழ்நிலை.”என்று கூறியுள்ளார்
இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தனியான அறிக்கையில், இந்தியா மற்றும் இலங்கை இடையே வான் மற்றும் கடல் இணைப்பை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு முன்முயற்சிகள், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு, அண்டை நாடுகளின் “பகிரப்பட்ட கடல்சார் பகுதியை பல்வேறு சமகால அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருத்தல்” மற்றும்கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட “பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதற்கு” ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்என்று குறிப்பிடப்பட்டுள்ளது “இலங்கைக்குத் தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றுவெளிவிவகாரஅமைச்சர் தெரிவித்துள்ளார் ” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர்கள்பாக்கு நீரிணை மீன்பிடி மோதல் குறித்து கலந்துரையாடியுள்ளனர், மீனவர் பிரச்சினையை “மனிதாபிமான அணுகுமுறை மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது” என்ற நீண்டகால கருத்தொருமைப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் . மீன்வளம் தொடர்பான கூட்டு பணிக்குழுவில்ஆரம்பித்து இருதரப்பு பொறி முறைகள் முன்கூட்டியேசெயற்பட வேண்டும் என்று ம் அவர்கள் இணங்கிக்கொண்டுள்ளனர்என்று வெளிவிவகாரஅமைச்சு அறிக்கையில்கூறப்பட்டுள்ளது இலங்கை தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் பீரிஸ், தனது சந்திப்புகளில், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான சமீபத்திய மோதல்களைபற்றி குறிப்பிடும் வகையில்,அதனை ஒரு “பதற்றமானகட்டம் “எனவும் , “மீண்டும் மீண்டும் ” இடம்பெறும் விடயமெனவும் வகைப்படுத்தியதுடன் “வித்தியாசமான தோற்றப்பாடு ” என்ற அனுமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்
மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் நிலுவையாக இருந்துவரும் பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை “முன்கூட்டியே பூர்த்திசெய்வதென ” அமைச்சர்கள் இணங்கிக்கொண்டனர் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

https://thinakkural.lk/article/165560

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.