Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 

சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். 

விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களும் இன்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/தமது-வீடுகளுக்கு-செல்லும்-47-இந்திய-மீனவர்கள்/175-291411

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான சாப்பாடு இல்லை: இலங்கையிலிருந்து திரும்பிய மீனவர்கள்!

 

spacer.png

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

கடந்த 2021 டிசம்பர் 18ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். இவர்களில் 56 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலினும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 47 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு கொழும்புவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை வரவேற்ற தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் தனித்தனி வேன்களில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த டிசம்பர் மாதம் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் படகுகளை முட்டி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து சிறையில் அடைத்தது இலங்கை கடற்படை.

சிறைச்சாலையில் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் அவர்கள் சரியான சாப்பாடு கூட போடவில்லை. உயிர் வாழவேண்டும் என்பதால் போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, மிகச் சிரமப்பட்டு இன்று தமிழகம் வந்திருக்கிறோம்.

நாங்கள் கஷ்டப்பட்டு வந்து விட்டோம். அதுபோன்று மேலும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் மீட்டுக் கொண்டுவர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கெனவே 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/politics/2022/02/18/29/47-tamilnadu-fisher-return-from-srilanka-jail

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

அவயளுக்கு கெஸ்ற் ஹவுஸ் மாதிரி ஆகிப்போச்சுது .. "சத்தியம் சர்க்கரை பொங்கல் " அடுத்த வாரம் திரும்ப வருவினம் 👌

 

18 hours ago, கிருபன் said:

சிறைச்சாலையில் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் அவர்கள் சரியான சாப்பாடு கூட போடவில்லை. உயிர் வாழவேண்டும் என்பதால் போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, மிகச் சிரமப்பட்டு இன்று தமிழகம் வந்திருக்கிறோம்.

13789922905-a334f42c6b-o.jpg

அடுத்த முறை புல் மீல்ஸ் போட சொல்லி கடிதம் எழுதுவம் என்ன.? 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.