Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – சரத் வீரசேகரவின் மகனின் முகநூல் பதிவு குறித்து விசாரணை செய்யவேண்டும்- சமுடித்த

 

 

 
தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும்தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்டபாதுகாப்பு குறித்தும் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் தான் கவலை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
chamudithaaa-300x170.jpg chamuditha-attack-1-300x113.jpg
இதேவேளை அமைச்சர் சரத்வீரசேகரவின் மகனின் முகநூல் பதிவை பொலிஸார் அலட்சியம் செய்ய முடியாது என தெரிவித்துள்ள ஊடகவியலாளர் ஊடக அறிக்கைகள் முகநூல்பதிவுகளி;ற்காக பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இதன் காரணமாக சரத்வீரசேகரவின் மகனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனது வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்களி;ன் 22 வீடியோ பதிவுகளை பொலிஸாரிடம் வழங்கியுள்ளேன்,என தெரிவித்துள்ள ஊடகவியலாளர் விசாரணைகளின் நிலை குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.
பொலிஸார் குற்றவாளிகளை கைதுசெய்யாவிட்டால் இதுவும் இன்னுமொரு சம்பவமாக மாறிவிடும் என தெரிவித்துள்ள அவர் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொரளைதேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமைகுறித்து தெரிவித்துள்ள அவர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின்தலையீட்டினால் விசாரணைகளின் போக்கு முற்றாக மாறியது-கர்தினால் தலையிடாவிட்டால் சில அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டிருப்hர்கள் என தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தில்கைக்குண்டு மீட்கப்பட்டதினத்தின் முழுமையான சிசிடிவி பதிவுகளை ஆராயுமாறும் குறிப்பிட்ட காலத்தின் பதிவுகளை ஆராய்வதால் பயனில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக சமுடித்த தெரிவித்துள்ளார்.
சிலர் எங்கள் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை ஒரு நாடகம் என்கின்றனர் இதனால் கை அடையாளங்களை ஆராயுமாறு காவல்துறையினரை கோரியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
chamuditha-300x300.jpg
வீடமைப்பு திட்டத்திற்குள் வருவதற்கு குறிப்பிட்ட வாகனத்தை சந்தேகநபர்கள் பயன்படுத்தியுள்ளனரா என சிசிடிவிமூலம் பொலிஸார் ஆராயலாம், எங்கள் வீட்டின் மீது கற்கனை மலக்கழிவுகளை எறிந்தவர்களை மேலும் இருவர் உள்ளனர்- ஒருவர் எங்கள் வீட்டின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்தார் மற்றைய நபர் வானிற்குள் இருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட இருவர் கறுப்பு தலைக்கவசத்தை அணிந்திருந்தனர் மற்றைய நபர் சிவப்பு தலைக்கவசத்தை அணிந்திருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள் என என்னால் தெரிவிக்க முடியாது எனது ஊடக நடவடிக்கைகள் காரணமாக பலர் சீற்றமடைந்திருக்க கூடும்,என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/166373

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.