Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் மக்கள் மீது கட்டுப்பாடு கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பில்லை .

Featured Replies

கிழக்கில் மக்கள் மீது கட்டுப்பாடு கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பில்லை சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

[Friday July 27 2007 09:29:58 PM GMT] [யாழ் வாணன்]

கிழக்கில் மக்கள் மீது கட்டுபாடுகள் விதிக்கப்படுவதாகவும் தகவல்களை வெளியிடவும் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள சகல பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த அமைப்பு கோரியுள்ளது.

இது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிழக்கு மகாணத்தில் சமீபத்தில் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்து சுதந்திர ஊடக இயக்கம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

மாவட்ட செயலாளரின் அனுமதியைப் பெறாமல் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பராக்கிரம பன்னிப்பிட்டிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை வாகரைக்கு அழைத்து தெரிவித்துள்ளார் என 26 ஆம் திகதி டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களில் அனுமதி பெறாமல் எதுவித திட்டங்களையும் ஆரம்பிக்க இடமளிக்க வேண்டாமெனவும் அவர் பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் சிவில் நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள், நிறுவனங்கள், உள்ளூர் பங்காளிகள் ஆகியோரது ஒத்துழைப்பு ஆதரவுடனேயே உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

2007 மார்ச் மாதம் வாகரையில் இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் நடவடிக்கை மேற்கொண்டதிலிருந்து சிவில் நிர்வாகம் கிழக்கில் மெதுவாக இராணுவ மயமாக்கப்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். வாகரை மீள் குடியேற்றம் முற்றும் முழுதாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொக்கட்டிச்சோலை, போரதீவு போன்ற பகுதிகளில் மீள் குடியேற்றம் முற்று முழுதாக விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவில் நிர்வாக அதிகாரிகள் அவ்வப்போது உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பது போன்ற வேலைகளிலேயே ஈடுபட்டனர்.

2006 ஆம் ஆண்டிலிருந்து உதவி தேவைப்படும் பிரதேசங்களில் நிவாரண வேலைகளை மேற்கொள்வதில் மனிதாபிமான ஏஜன்சிகள் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கே முகம் கொடுத்து வந்துள்ளன.

கிழக்கில் மக்கள் மீது இப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தகவல்களை வெளியிடவும் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அரச கட்டுப்பாட்டிலுள்ள சகல பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். இலங்கையில் நிலையான நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமென்ற ஆர்வமுள்ள மக்களும் சிவில் அமைப்புகளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட எம்முடன் இணையும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ்வின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.