Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாவுடன் பேசப்போகும் விடயங்கள் என்ன ? செவ்வாய் கூடுகின்றது கூட்டமைப்பு – மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்ப முடியாது- மாவை சேனாதிராஜா

கோட்டாவுடன் பேசப்போகும் விடயங்கள் என்ன ? செவ்வாய் கூடுகின்றது கூட்டமைப்பு – மாவை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்போகும் விடயங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதின் நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே சந்திப்பினை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம், கடிதம் மூலம் சம்பந்தனுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள மாவை சோனதிராஜா, ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்திப்பதற்கு முன்னதாக இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்திக்கவுள்ளதாக கூறினார்.

இனப்பிரச்சினை குறித்து மௌனமாகவும் பயங்கரவாத தடைச் சடத்தை முழுமையாக நீக்கவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தயாராக இல்லாத ஜனாதிபதி, என்ன விடயங்கள் தொடர்பாக தம்முடன் பேசப்போகின்றார் என்ற கேள்வியெழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறிருந்தாலும் காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் குறித்து எடுத்துரைத்து தீர்வுகளை வழங்குமாறு தாம் வலியுறுத்தவுள்ளதாகவும் அதற்கான நிகழ்ச்சி நிரலை குறித்த சந்திப்பின்போது தயாரிப்போம் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
 
####################   ##################  #########
Open Houses In Long Island - Laffey Real Estate on Make a GIF
 
 கொழும்பில்... ஒரு வீடு,  வேணும் என்பதனையும் மறக்காமல் கேளுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு தமிழர்களுக்கு தேவையில்லை என கூறும் ஜனாதிபதி கூட்டமைப்புடன் பேசவேண்டிய தேவையில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்

அரசியல் தீர்வு தமிழர்களுக்கு தேவையில்லை, பொருளாதாரம் சார்ந்த தீர்வுதான் தேவையென்று ஜனாதிபதி கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் அரசியல் தீர்வு தொடர்பாக கூட்டமைப்புடன் அவர் பேசவேண்டிய தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.

இதற்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் அவரே அதனை இரத்து செய்து வேறு திகதியை வழங்குவதாக உறுதியளித்த போதும் எந்த அழைப்பும் ஜனாதிபதி அலுவலகத்தினால் விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதி விடுதலை, காணாமல் ஆக்கபட்டோர் விவகாரம் என 15 பிரச்சினைகளை முதலில் நிவர்த்தி செய்தபின்னர் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது நியாயம் எனவும் காணி அபகரிப்பு தொடர்பாக பேசவேண்டுமாகயிருந்தால் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரமல்லாமல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசவேண்டும் என்றும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.(15)

http://www.samakalam.com/அரசியல்-தீர்வு-தமிழர்களு/

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

 

####################   ##################  #########
Open Houses In Long Island - Laffey Real Estate on Make a GIF
 
 கொழும்பில்... ஒரு வீடு,  வேணும் என்பதனையும் மறக்காமல் கேளுங்கள்.

IMG-20220313-142223.jpg

தோழர் 2022 ஆம் ஆண்டோடு லென்ற் குரூசர் உற்பத்தி நிறுத்தப்பட்டு புது வகை பரோடா அறிமுகம் ஆகிறதாம்.👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20220313-142223.jpg

தோழர் 2022 ஆம் ஆண்டோடு லென்ற் குரூசர் உற்பத்தி நிறுத்தப்பட்டு புது வகை பரோடா அறிமுகம் ஆகிறதாம்.👌

தோழர்.... பெற்றோல் இல்லாமல், இதை வைச்சு... அவர்கள் என்ன செய்யிறது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கவே பேச்சுவார்த்தை - சம்பந்தன்

(ஆர்.ராம்)

கொள்கைப்பற்றுடைய எம்மை யாரும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்த முடியாது என்று வீரகேசரிக்கு தெரிவித்த சம்பந்தன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதை இலக்காக கொண்டே பேச்சுக்களை முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

13 ஐ தீர்வாக கோரவில்லை : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பொய்ப்பிரசாரம் -  சம்பந்தன் | Virakesari.lk

பேச்சுக்கான கதவுகள் திறக்கப்படுகின்றபோது அச்சந்தர்ப்பத்தினை கைவிட்டு விடமுடியாது என்று குறிப்பிட்ட அவர், புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை அழுத்தமாக வலியுறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 3.30 இற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருகை தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு அவசரப்பட்டு செல்லத் தேவையில்லையென்றும், தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள உள்ளுர்ரூபவ் சர்வதேச நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதுள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு கடிதமொன்றை சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் குறித்த விடயங்கள் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளார் என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு, ரெலோவின் கடிதம் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. அதனை படித்தேன். அவர் ஜனாதிபதியுடன் பேசுவது தவறு என்று கூறவில்லை. 

ஆனால் அந்த பேச்சுக்கான அழைப்பு பற்றி அவர்களது தரப்பிற்குள்ள சந்தேகங்கள் குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அந்த விடயங்கள் தொடர்பாக நான், செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடியுள்ளேன்.

மேலும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. ஆகவே அக்கடிதம் பற்றி வேறெந்த கருத்துக்களையும் கூறுவதற்கு நான் விரும்பவில்லை.

பேச்சுக்கான அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பினை விடுத்துள்ளார். இதில் பங்கேற்பதாகவே நாம் தீர்மானித்துள்ளோம். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் நடைபெறுகின்ற முதலாவது பேச்சுவார்த்தையாக இது அமையப்போகின்றது. இதில் என்னென்ன விடயங்கள் பேசப்படப்போகின்றன என்பது பற்றி ஜனாதிபதி தரப்பிலிருந்து எதுவும் கூறப்படவில்லை.

எவ்வாறானினும், எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்விதமான சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எமது முயற்சிகளை நம்பிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும்.

பங்கேற்பது தவறில்லை

எமது விடயங்களை நாம் இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம். இலங்கைக்கு வருகை தருகின்ற சர்வதேச தரப்பினருக்கும் எடுத்துரைத்துள்ளோம். அவ்வாறானதொரு சூழலில் நாம் ஜனாதிபதி கோட்டாபய விடுத்த அழைப்புக்கு அமைவாக பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் தவறில்லை.

எமது கொள்கையில் நாம் பற்றுறுதியாக இருந்துகொண்டிருக்கின்றோம். ஆகவே எம்மை யாரும் பயன்படுத்தி விடமுடியாது. அவ்வா பயன்படுத்துவதற்கும் இடமளிக்க முடியாது. ஆகவே அவ்விதமான கிலேச்சங்கள் அவசியமற்றவை.

பேசப்போகும் விடயங்கள்

இதேநேரம், ஜனாதிபதியுடனான பேச்சானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதையே இலக்காக கொண்டதாக அமையவுள்ளது. அதேநேரம், உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பானது, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை தருவதாகவும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்.

மேலும், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பொறுப்புக்கூறப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை ஆணித்தனமாக வலியுறுத்தவுள்ளதோடு, வடக்கு, கிழக்கில் பூர்வீக வாழிடங்களாக கொண்ட எமது மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றுக்கான நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளை கோரவுள்ளோம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/124055

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.