Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத் தீவிரக் கொள்கை நீடித்துத் தாக்குப் பிடிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-07-28

யுத்தத் தீவிரக் கொள்கை நீடித்துத் தாக்குப் பிடிக்குமா?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்த் தீவிரத்தை முன் னிலைப்படுத்துவதன் மூலம், தென்னிலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதச் சக்திகளைத் தமக்கு ஆத ரவாக வளைத்துப் போடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தந்திரோபாயம் நீண்ட காலத்துக்குப் பயன்தரப் போவ தில்லை என்பது போலவே தோற்றுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை வடக்குக் கிழக்கைத் தள மாகக் கொண்ட தமிழர் தாயகம் ஒட்டுமொத்தமாகப் புறக் கணித்த பின்னணியில், தமிழர் விரோத இனவாதம் அத்தேர் தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அவ ருக்கு வாய்ப்பளித்தது என்னவோ உண்மைதான்.

ஆனால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சிங்களப் பேரெ ழுச்சி என்ற இனவாத மாயைமூலம் தென்னிலங்கையைத் தொடர்ந்தும் வளைத்துப் போட்டு ஆட்சியை நடத்தலாம் என்ற அவரது திட்டம் பிசுபிசுத்துப் போகத் தொடங்கியிருப்ப தாகவே தோற்றுகின்றது.

ஒருபுறம் போர்வெறி முனைப்போடு யுத்தத்துக்குப் பெரும் தொகைப்பணத்தைக் கொட்டி நாட்டின் கஜானாவைக் காலி செய்கிறது "மஹிந்தர் அண்ட் பிறதர்ஸ் கம்பனி' !

மறுபுறம் பொறுப்பற்ற அரச நிர்வாகத்தினால் பொருளா தாரக் கொள்கைகள் சீரழிந்து நாட்டின் நிதி நிலைமை மிக மோசமடைந்திருக்கின்றது.

விலைவாசி உயர்வாலும், வருமான வீழ்ச்சியாலும், வறு மையாலும் வாடத் தொடங்கியிருக்கும் தென்னிலங்கை மக் களின் கவனத்தை போர்வெறித் தீவிர நாடகம் மூலம் தொடர்ந்து திசை திருப்பி, தக்கவைத்திருப்பது மஹிந்த சகோதரர்களுக்கு இனிமேலும் இயலாத காரியமாகி வருகின்றது என்றே தென் படுகின்றது.

வயிற்றுப் பசியின் ஆழமான உறுத்துதலை உணரத் தொடங்கியிருக்கும் தென்பகுதி மக்களின் மனக்கிளர்ச்சியைச் சமாளிக்க யுத்தவெறி நாடகம் இனிமேலும் போதுமானதாக இருக்கப் போவதில்லை.

இதையே தென்னிலங்கையில் பிரதான எதிர்க்கட்சி யான ஐ. தே. கட்சியும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக் கள் அணி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக் குப் பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்டு வந்தமை வெளிப் படுத்தி நிற்கின்றது.

யுத்தத்தை நிறுத்தி, அமைதி வழியில் சமாதானத் தீர்வு காணும்படி சர்வதேச நாடுகள் விடாது வலியுறுத்தி வருகின் றன. ஆனால் "செவிடன் காதில் ஊதிய சங்காக' "புறக் குடத்து நீர்' போன்று அந்த வற்புறுத்தல் செவிமடுக்கப்படாமல் வீணாகிப் போகின்றது.

தனது நிலைப்பாட்டை கோரிக்கையை உதாசீனம் செய்து, தொடர்ந்து யுத்த ஆக்கிரமிப்பிலும் போர் வெறியிலும் தீவிரமும் ஈடுபாடும் காட்டி வரும் மஹிந்தரின் அரசு குறித்து சர்வதேச சமூகம் ஏற்கனவே கடும் அதிருப்தியைக் கொண்டி ருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.

இத்தகைய அதிருப்தி நிலை உள்நாட்டிலும் மஹிந்தர் அரசுக்கு எதிராக இப்போது தீவிரமடைந்து வருகின்றது என்பதே புதிய விடயமாகும்.

ஏற்கனவே தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்த நிராகரிப் புக்கு உள்ளான இந்த ஆட்சி, இப்போது தென்னிலங்கை யின் கடும் அதிருப்திக்கும் உள்ளாகத் தொடங்கியிருக்கிறது.

இப்படி உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அதிருப்திக்கு உள்ளாகி வரும் இந்த அரசு, அதன் விளைவுகளை விப ரீதங்களை புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் விட்டேத் தியாகச் செயற்படுவது ஆச்சரியத்துக்குரியதுதான்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு அவசியமானவை என்று கருதி, பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆயு தத் தளவாடங்களையும், வெடிபொருள்களையும் மஹிந்த ரின் அரசு கடனாக வாங்கிகுவித்து வருகின்றது. இந்தக் கடன் சுமை அடுத்து வரும் பல்லாண்டுகளுக்கு மீளவே முடியாத பொருளாதார இக்கட்டில் இலங்கைத் தீவை ஆழ்த்தப் போகின் றது எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றார்கள்.

அந்தக் கடன் சுமையின் தாக்கம் சராசரி இலங்கையனை நேரடியாக அழுத்தத் தொடங்கும்போது, அதற்கு எதிரான சமூக விளைவு தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்பதும் உறுதி.

யுத்த முனையில் கிடைக்கக் கூடிய வெற்றிகளை புலி களுக்குக் கிட்டக்கூடிய பின்னடைவுகளை முன்னிறுத்துவதன் மூலம் இத்தகைய சிக்கல்களையும், பிரச்சினைகளை யும் இலகுவாக முகம்கொடுத்துச் சமாளிக்கலாம் என்ற ஒரே நம்பிக்கையிலேயே காய்களை இவ்வாறு நகர்த்துகின்றது மஹிந்தரின் நிர்வாகம்.

சம்பூரில் தொடங்கி குடுமிமலை வரை தற்போது தனக் குக் கிடைத்துள்ளது எனத் தானே பீற்றிக் கொள்ளும் பெரு வெற்றிகளை தடல்புடல் கொண்டாட்டங்கள் மூலம் தென் னிலங்கையில் பறைசாற்றி வருகிறது அரசு. இத்தகைய விம ரிசையான எடுப்புகள் மூலம், இராணுவ வெற்றி குறித்துத் தென்னிலங்கையில் எழும் நம்பிக்கையைப் பயன்படுத்தி, மேலும் சுமார் முப்பதாயிரம் பேரைப் படைக்கு வெற்றிகரமா கத் திரட்டிவிட முடியும் என்று நம்புகிறது அரசு.

தென்னிலங்கையில் தனக்கு எதிராக எழுந்துவரும் அதிருப்தியை மூடி மறைத்து, மேலும் யுத்தத்தைத் தீவி ரப்படுத் தும் நோக்குடன் அரசுத் தலைமை எடுத்துவரும் இந் நடவ டிக்கை எதிர்பார்த்த பெறுபேறைத் தருமா என்பதே கேள்வி.

அரசின் இந்த யுத்தவெறிப் போக்குக்கு எதிராகத் தந்திரோபாயப் பின்நகர்வுகளுடன் கூடிய தற்காப்பு யுத்தம் ஒன் றையே இதுவரை மேற்கொண்டு வரும் புலிகள், பதில் தாக்கு தல் என்ற நிலையிலிருந்து மாறி, பாய்ந்து முன்னேறும் தாக் குதல் திட்டத்தை முன்னெடுக்கும் வரை மஹிந்த அரசின் இந்தத் திட்டம் சுமுகமாக முன்நகரக் கூடும் எனக் கருத லாம்.

ஆனால், வழமையாக எதிர்பாராத சமயத்தில் எதிர்பாரா வகையில், தமது இராணுவ நகர்வுகளை முன்னெடுத்து எதிர்த் தரப்புக்குப் பேரதிர்ச்சியைக் கொடுக்கும் புலிகள், இதிலும் அத்தகைய உத்தியை கையாளக்கூடும் யுத்த முனைப்புக் கொள்கையின் மோசமான விபரீதத்தைத் தென்னிலங்கை புரிந்துகொள்ள நேரும். அது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.