Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத்தை முறியடிக்க பயங்கரவாதத்தையே பயன்படுத்துவது முட்டாள்தனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை முறியடிக்க பயங்கரவாதத்தையே பயன்படுத்துவது முட்டாள்தனம்

[28 - July - 2007]

-எம்.ஏ.எம். நிலாம்-

* சு.க. மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீர கூறுகிறார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அன்று 90 சதவீதமானோர் மகிந்த ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை. நானும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் சந்திரிகா பண்டாரநாயக்காவை இணங்கவைக்க இரவு பகல் பாராது பாடுபட்டோம். மகிந்த பசுத்தோல் போர்த்திய புலியென்பதை காலம் கடந்தே நாம் புரிந்துகொள்ள நேரிட்டதென முன்னாள் அமைச்சரும் சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளருமான மங்கள சமரவீர நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு ஹைட் பார்க் திடலில் நடைபெற்ற "மக்கள் பேரலை" பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை முறியடிக்க பயங்கரவாதத்தையே ஆயுதமாகப் பாவிப்பது முட்டாள்தனமானதாகும். மகிந்த சிந்தனை என்பது மகிந்த ராஜபக்‌ஷவின் மூளையிலிருந்து வந்ததல்ல.

ஜனாதிபதிக்காக நாம் எமது காலத்தையும் நேரத்தையும் வீணாக்கியதோடு நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்திவிட்டோம். அதற்காக, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம் எனவும் மங்கள சமரவீர இங்கு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

இனநெருக்கடிக்கு அரசியல் ரீதியில் தான் தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து, வேறு வழியை நாடுவது புத்திசாலித்தனமாக முடியாது. இதனை நாம் பல தடவைகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்திய போதிலும் அவர் யுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தி அதன் மூலம் உழைப்பதில்தான் நாட்டம் செலுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்தார். பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தின் மூலம் ஒழிக்க முடியாது என அவர் எப்போதும் கூறிவருபவர். அதன் மகத்துவத்தை இப்போது நாம் உணர்கின்றோம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் செய்துகொண்ட உடன்படிக்கை நேர்மையுடன் முன்கொண்டு செல்லப்பட்டிருப்பின், காத்திரமானதும் சாதகமானதுமான விளைவுகளை நாடு கண்டிருக்க முடியும். மகிந்த ராஜபக்ஷ அரசிலுள்ளவர்களை மதிக்கவில்லை. தன்னை ஆட்சியில் அமர்த்தியவர்களை தூக்கியெறிந்துவிட்டு, சகோதரர்களுடன் சேர்ந்துகொண்டு சர்வாதிகாரிபோன்று செயற்பட்டுவருகின்றார்.

ரணிலுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர், ரணில் வெளிநாடு சென்றவேளையில் கரு தலைமையில் ஐக்கிய தேசியகட்சியிலிருந்து 17 எம்.பி.க்களை கள்ளத்தனமாக சுவீகாரம் செய்து நம்பிக்கைத்துரோகமிழைத்தார். நாட்டின் தலைவர் நடந்துகொள்ளும் உயர் தத்துவம், மாண்பு என்பவை மகிந்த ராஜபக்‌ஷவிடம் துளியளவும் கிடையாது.

அமரர் பண்டாரநாயக்காவால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் இன்று அங்கு காணப்படவில்லை. உண்மையான சுதந்திரக் கட்சிகொள்கைகளை பாதுகாப்பதற்காகவே நானும் ஸ்ரீபதியும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதனடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்படிக்கை செய்து கொண்டோம். ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறுவதுபோன்று இரகசிய நாடகமெதனையும் நாம் மேற்கொள்ளவில்லை. இதோ இன்று நாம் அச்சிட்டு உங்கள் கைகளில் தந்திருப்பதுதான், உண்மையான உடன்படிக்கை. ராஜபக்ஷ சகோதரர்கள் போன்று நாம் யாருடனும் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயிடம் நேர்மையான கொள்கை கிடையாது. ஒரு காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு இரகசிய பேச்சு நடத்தியவர் என்பதை நாடே அறியும். நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவில்லை. சுதந்திரக் கட்சியின் உண்மையான உரித்துடையவர்களாக நாம் தான் இருக்கின்றோம். ரணிலின் நேர்மையை இன்று புரிந்துகொண்டதாலேயே நாட்டின் விடியலுக்காக அவரை நாட்டின் தலைவராக கொண்டுவரும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். கட்சி அரசியலுக்கப்பால் நின்று நாட்டுக்காகப் பாடுபடும் ஒரு தலைவருக்கு வாய்ப்பளிக்க சந்தர்ப்பம் இன்று எமக்கு கிடைத்துள்ளது.

இன்னும் 7 மாதங்களில் நாம் எமது நாட்டின் 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கின்றோம். அதுவரையில் நாடு பாதுகாக்கப்படுமா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. 1947 இல் நாம் சுதந்திரம் பெற்றபோது, இங்கிலாந்தின் பத்திரிகையான "ரைம்ஸ்" எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் "இன்று சுதந்திரம் பெற்ற இலங்கை (Ceylon) விரைவில் ஆசியாவின் சுவிற்சர்லாந்தாக மிளிரும் என்று புகழ்ந்துரைத்திருந்தது. ஆனால், 60 வருடங்களில் நாம் காண்பது இலங்கை ஆசியாவின் குப்பை மேடாக மாறும் நிலையைத்தான்.

எமது நாட்டின் வரலாற்றில் மக்கள் ஒருபோதம் வறுமையால், பட்டினியால் ஒருவரும் சாகவில்லை. ஆனால், இந்த அராஜக ஆட்சியில் அதுவும் நடக்கக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது. தோல்விகண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெறும் அவலத்தை ராஜபக்‌ஷ சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர். 25 வருடங்களாக தொடரும் இனப்பிரச்சினை தீர்வு காணப்படாத நிலையிலேயே உள்ளது. புரையோடிப்போன புண்ணாகியுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷவின் சுயரூபத்தை மக்கள் அறிந்துகொள்ளவில்லை. ஏன் ஆரம்பத்தில் எம்மால் கூட அறிந்துகொள்ள முடியாது போயிற்று. வெளியில் அணைத்து, தடவிவிட்டு, சிரித்துப் பேச்சு. ஆனால், தனியே காணப்படும்போது தமிழ் மக்களை "தெமலா"வென்றும், முஸ்லிம்களை "தம்பிலா" வென்றும் சுட்டெரிக்கும் வார்த்தைகளே வெளியிடப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளையிட்டு தெற்கில் பிறந்த நாமும் வெட்கப்படுகின்றோம். ஒரு சமூகத்தை, இனத்தை இழிவாகப் பார்க்கும் ஒருவர், இந்த நாட்டுக்குத் தலைவராகக் கொண்டுவர பாடுபட்டதையிட்டு நாம் வேதனைப்படுகின்றோம்.

ஒற்றையாட்சி என்று கூறியவாறு யுத்தம் செய்து கொண்டிருந்தால் நாடு பிளவுபட்டுவிடும். ஒற்றையாட்சியா, ஐக்கிய இலங்கையா என்பதல்ல பிரச்சினை. இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சரிசமமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்று நோக்கப்படக்கூடாது. அனைவரும் இலங்கையர் என்ற நிலையில் சிந்தித்தால் மட்டுமே, எமது நாட்டுக்கு விடிவு உண்டு. அந்தப் பாதையில் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முன்வந்ததை எவரும் தவறாகக் கருத முடியாது. இதனை ஜே.வி.பி.யினருக்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன். நல்லநோக்குடன் எம்மோடு இணையுங்கள். நாட்டை மீட்பதில் அனைவரும் ஒன்றுபடுவோம். அரசாங்கத்தின் பக்கமிருக்கும் அதிருப்தியாளர்கள் நிறையப்பேர் விரைவில் எம்மோடு இணையவிருக்கின்றனர். அடுத்த வரவு செலவுத் திட்டம் வரும்போது பல மாறுதல்களைக்காண முடியும். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை நாம் உருவாக்கிக் காட்டுவோம்.".

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.