Jump to content

மனமே! சிந்தனை செய்


Recommended Posts

மனமே! சிந்தனை செய்

1. திருவருட்பா பாடிய இராமலிங்கர் அருளாளரா?

2. அப்பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா?

3. சொன்னால் பாபமில்லையா?

4. படித்தால், பாடினால் ஆன்மலாபம் கிட்டுமா?

தெளிந்து செயலாற்று

Link to comment
Share on other sites

இராமலிங்கரின் மறுபக்கம் - அவருடைய பாடல்களில் இருந்தே ஆதாரம்.

1. பிள்ளை பெண்ணோயாற் பீடிக்கப்பட்டார்.

அதற்காகவே இரசஞ் சேர்ந்த மருந்தினைப் பரிகாரி கந்தப்பிள்ளையிடம் வாங்கி யுண்டு அதனாலே இராமலிங்க பிள்ளைக்குப் பற்களும் விழுந்தமை யார்க்குந் தெரிந்ததொன்றே. "என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்ப மென்வே யெனக்கவர் நோய் தன்னைக் கொடுத்தார் நானந்தோ தளர்ந்து நின்றேன்" [2-ம் திருமுறை அவலமதிக்கலைசல்-9]

2. பூப்புப் பெண்களைப் புணர்ந்தார்.

"போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம்பொறியேன் மோகமே யுடையேனென்னினு மெந்தாய் முனிந்திடல் காத்தருளெனையே"

"பூப்பினும் பலகான் மடந்தையர் தமைப்போய் புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார் பாப்பினுங் கொடியருறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன்"

[6-ம் திருமுறை - ஆத்தும விசாரத்தழுங்கல் 1-2]

Link to comment
Share on other sites

3. பகலிலே துறவி, இரவிலே காமுகர்.

(அ) "துனித்த வெம்மடவார் பகல் வந்த போது

துறவியிற் கடுகடுத் திருந்தேன்

தனித்திரவதிலே வந்தபோது ஓடித்தழுவினேன்

தடமுலை விழைந்தே"

(ஆ) தார்த்தட முலையார் பலரொடு நான்சார்

தளத்திலே வந்தபோதவரைப்

பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன்

தவசுப் பாதகப் பூனைபோ லிருந்தேன்

பேர்த்து நான் றனித்தபோது போய் வலிந்து

பேசினேன் வஞ்சரிற் பெரியேன்.

[6-ம் திருமுறை - அபயத்திறள் 17-18]

(இ) மின்னைப் போலிடை மெல்லிய லாரென்றே

விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்

பொன்னைப் போல் மிகப்போற்றி யிடை

நடுப்புழையிலே விரல் போதப் புகுத்தி யீத்

தன்னைப் போன் முடை நாற்றச் சலத்தையே

சந்தனச் சலந்தா னெனக் கொள்கின்றே,

னென்னைப் போல்வது நாய்க்குலந்

தன்னிலுமில்லை யல்ல தெவற்றினு மில்லையே.

[2-ம் திருமுறை - தனித்திரு விருத்தம் - 11]

4. பாதார கமனம்

ஒருபெண் பலாற்காரமாக வந்து பற்றியிணைத்துப் புணர்ந்து சென்றாளாம். அப்போது தம் மனம் வருத்தமுற்று என் செய்தோ மென்று இறங்கினாராம். அப்போது சிவபிரான் தோன்றி, பெருமடமுடைப் பிள்ளாய்! என்ன கெட்டுப் போயிற்று; ஒன்றுமில்லை என்று தேற்றினாராம்.

ஒரு மடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னருளம்

வருந்தியென் செய்தோ மென்றயர்ந்த போது,

பெரும்டஞ்சேர் பிள்ளாயென் கெட்ட தொன்றுமிலை நம்

பெருஞ் செயலென்றெனைத் தேற்றிப் பிடித்த பெருந்தகையே

திருமடந்தை மாரிருவரென்னெதிரே நடிக்கச்

செய்தருளிச் சிறுமையெலாந் தீர்த்த சிவமே.

[6-ம் திருமுறை அருள்விளக்கமாலை 47]

Link to comment
Share on other sites

5. அடியாரைக் கூடும் அதனை புணர்ச்சியெனக் கொளினும் இராமலிங்கர் கடவுளை அகப்புணர்ச்சி செய்ததன்றிப் புறப்புணர்ச்சியும் செய்தாராம்.

(அ) "வான்பதிக்குங் கிடைப்பரியார் சிற்சபையினடிக்கும்

மணவாள ரெனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்"

(ஆ) "புறப்புணர்ச்சி யென்கணவர் புரிந்த தருணந்தான்

புத்தமுத நானுண்டு பூரித்த தருணம்"

(இ) என்னையகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார்

புறப்புணர்ச்சித் தருணம்.

[6-வது திருமுறை அனுபவமாலை - 94-98]

6. வேதங்களையும் சிவாகமங்களையும் நிந்தனை செய்தார்.

(அ) சதுமறை யாகம சாத்திர மெல்லாஞ்

சந்தைப் படிப்பு நஞ் சொந்தப் படிப்போ

விதுநெறி சுத்தசன்மார்க்கத்திற் சாகா

வித்தையைக் கற்றனன்.

[6-வது திருமுறை ஆனந்த மேலீடு 4]

(ஆ) வேதாக மங்க ளென்று வீண்வாத மாடுகின்றீர்

வேதா கமத்தின் விளைவறீயீர்

சூதாகச் சொன்னவலா லுண்மை வெளிதோன்ற

வுரைத்த லிலை யென்னபயனோ விவை.

[6-ம் திருமுறை - சுத்த சிவ நிலை-30]

(இ) "இவல் வேதாகமங்கள் புராணங்களிதிகாச

முதலா விந்திர சாலங் கடையாவுரைப்பர்"

[6-வது திருமுறை அருள் விளக்கமாலை - 87]

Link to comment
Share on other sites

7. பொய்ச் சத்தியம் செய்தார், வேளாளர்களைத் தூஷித்தார்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் கருங்குளியார்க்கும், அவரது பாடல்களுக்குத் திருவருட் பிரகாச வள்ளலார், திருவருட்பா வெனப் பெயர் வைத்தல் அனுவளவும் ஒவ்வாதெனப் பிரசங்கித்தகாலை அதற்குத்தக்கச் சமாதானஞ் சொல்லத் தெரியாது வயிறெரிந்து மனம் புகைந்து ஒரு பிராமணரையும் தம்முடன் சேர்த்துச் சிதம்பரத்தில் ஒரு பிரசங்கம் வைத்தார். அதில் "நாவலர்" என்ற சொல்லை எடுத்துக் கொண்டு, நா-அல்லாதவர்; நாவினாலே துன்பப் படுபவர் எனப் பலவாறு தூஷித்தார். அது கேட்ட ஒருவர் சபையிலெழுந்து, குழியாரே! நுமக்கும் அப்பட்டத்திற்கும் வெகு தூரமே திருவாவடுதுறை யாதீன மகாசந்நிதானம் வேறு யாருக்காவது அந்தப் பட்டத்தைக் கொடுத்ததுண்டா? நீவிர் பொறாமைப்பட்டு அநர்த்தங் கொள்ளல் நன்றன்று. உம்மைத்தானா சிவனார் வந்து மாலை யிட்டார். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் நாவலர் என்னும் பெயரிருத்தலால் அதற்கும் இப்படித்தான் அர்த்தம் பண்ணுவீரா? கணக்கராய உமக்கு நல் வேளாள குலத்தார்க்குரிய பிள்ளைப் பட்டத்தை யாவர் கொடுத்தார். அதற்கு மேல், சுவாமிகள் என்ற பட்டத்தைப் பொள்ளற் குடக்கு வள்ளலார் பட்டங் கட்டினாற் போல வைத்துக் கொண்டீரே" எனப் பலவாறு கண்டிக்க இராமலிங்கம் பிள்ளை யெழுந்து போய் விட்டார். மற்றை நாள் இராமலிங்கம் பிள்ளை நாவலர் என்ற சொல்லை எடுத்து இன்ன இன்ன வாறு தூஷித்தார் என்று பத்திரிகை வெளிப்படுத்தப்பட்டது. அப் பத்திரிகையைக் கொண்டு நீதித்தலத்தில் நாவலர் அவர்கள் இராமலிங்கம் பிள்ளை மீதும், பிராமணர் மீதும் வழக்குத் தொடுத்தனர். மஞ்சக் குப்பம் கோட்டில் இராமலிங்க பிள்ளை வந்து "நான் நாவலரை நிந்திக்கவில்லை, நாவலர் என்ற சொல்லுக்கும் அப்படி யர்த்தம் விரித்தது கிடையாது" என்று பொய்ச் சத்தியஞ் செய்தனர். இவ்வளவு சொன்னதே போதும் என்று நாவலர் அவர்கள் பிள்ளையை நீக்கிவிட்டார். இராமலிங்க பிள்ளைக்குத் துணையாக நின்று தூஷித்த பிராமணர்க்கு 50 ரூ. அபராதம் விதிக்கப்பட்டது யாவரே அறியாதார். அதனைச் சுக்கில வருஷம் அதாவது கி.பி.1871 வருஷத்துக் குறிப்பைப் பார்த்துணர்க. அப்போது பிள்ளை தம் வழக்குச் செலவிற்காகவும் பிராமணர்க்கு விதித்த அபராதத்திற்காகவும் பணம் வேண்டிச் சில சைவவேளாளர்களிடம் போய்க்கேட்டார். அதற்குமுன் இவரிடத்தில் அன்புடைய அவர்கள் இவர் கள்ளச்சத்தியம் நீதித்தலத்திற் செய்தாரென்று கண்டது தொடங்கி, ஐயா கணக்கரே உம்முடைய தயவு எங்கட்கு அவசியமில்லை என்று கூறவே பிள்ளை கோபித்து உங்கள் வேளாள குலமிப்படித்தான் அநியாயஞ் சொல்வோர் என்று, கையறம் பாடுகின்றேனென வேளாரைத் தூஷித்துப் பாட்டுப் பாடினார். அத்தூஷணைப் பாட்டுக்களையுந் திருவருட்பா என்று சேர்த்திருக்கின்றார். அவை வருமாறு:- "குண்டு நீர்க்கடல்சூ ழுலகத்துளோர் குற்றமாயிரங் கோடி செய்தாலு முன் கொண்டு பின் குலம் பேசுவரோ வெனைக்குறிக் கொள்வா யெண் குணந்திகழ் வள்ளலே" [6-வது திருமுறை அபயங் கூறல்]

"மழவுக்கு மொருபிடி சோறளிப்பதன்றி யிருபிடி யூண் வழங்கி லிங்கே யுழவுக்கு முதல் குறையுமென வளர்த் தங்கவற்றை யெலா மோகோ பேயின் விழவுக்கும் புலாலுண்ணும் விருந்துக்கு மருந்துக்கு மெலிந்து மாண்டா ரிழவுக்கு மிடர்க் கொடுங்கோ லிறைவருக்குங் கொடுத் திழப்ப ரென்னே யென்னே"

[6-ம் திருமுறை அபயங் கூறல்]

8. வியாகரணம் - தொல்காப்பியம் - பாணினீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கிற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே -

(திருவருட்பா - சமரச சன்மார்க்க சங்க வெளியீடு)

[6-ம் திருமுறை வசனபாகம் பக்கம் 573]

Link to comment
Share on other sites

9. சிவமாந்தன்மைப் பெருவாழ்வு பெற்ற 63 நாயன் மார்களும் கணபதி சுப்பிரமணிய சுவாமிகளும், உயிரற்ற பொருள்களாகிய தத்துவக்கூட்டங்கள் என்று நிந்தித்தார் - இதன் விபரம் அவர் ஸ்தாபித்த சுத்தசன்மார்க்கத்டில் விளங்கும் என்றார் -

(திருவருட்பா, சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு)

[6-ம் திருமுறை திருநெறிக்குறிப்புகள் பக்கம் - 65]

10. சாத்திரம் குப்பை என்றார்

சாதி சமயங்களிலே வீதி பலவகுத்த

சாத்திரக் குப்பைகளெல்லாம் பாத்திரமன்று.

[6-ம் திருமுறை அனுபவ மாலை 92]

(a) திருமூலர் திருமந்திரம் சாத்திரங்களிற் சிறந்தது.

(சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு)

[6-ம் திருமுறை - திருநெறிக் குறிப்புகள் பக்கம் - 68]

குறிப்பு:- அப்படியானால் குப்பைகளில் சிறந்தது திருமந்திரம் என்று தானே அர்த்தம்!

Link to comment
Share on other sites

11. சமயங்கள் பொய் என்றார்.

(a) எச்சமயங்களும் பொய்ச் சமயம்.

[6-ம் திருமுறை - வர்க்கமாலை என்னும் காலைப்பாட்டு]

குறிப்பு:- ஆரியசமாசம், பிரம்மசமாசம், அருள்நெறித் திருக்கூட்டம் சுத்த சன்மார்க்க சங்கம், தெய்வ நெறிக்கூட்டம் எல்லாம் பொய் என்று தானே பொருள்!

(B) வேதாந்த சித்தாந்தப் பெரியவர்கள் உளர்கிறார்களாம்.

சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும், லக்ஷ¢யம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி, குழுஉக் குறியாகக் குறித்திருகிறதே யன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமே யானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷ¢யம் வைக்க வேண்டாம்..........சமயந் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மையறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள் ஆனதினால் நீங்கள் அ·து ஒன்றையும் நம்ப வேண்டாம்.

(6-ம் திருமுறை வசன பாகம் 13 உபதேசம்)

[பக்கம் 573, 575 ச.சு, ச.ச. வெளியீடு]

12. அவருடைய சீடர்கள் தீயர் என்று அவரே சொன்னார்.

தீக்குணத்தார் யாவருமென் சீடரெனி லென்னுடைய

தீக்குணத்தினெல்லை யெவர் தேர்கிற்பார்.

(சிவநேச வெண்பா - 73)

Link to comment
Share on other sites

13. நான்முகன், நாரணர், புத்தர் முதலியோரை சிறுபிள்ளைக் கூட்டம் என்றார்.

நான்முகர் நல்லுருத்திரர் நள் நாரணரிந்திரர்க

நவிலருகர் புத்தர் முதன்மதத் தலைவரெல்லாம்

வான்முகத்திற்றோன்றி யருளொளி சிறிதே யடைந்து

வானகத்தும் வையகத்தும் மனம் போனபடியே

தேன்முகந்துண்ட வரெனவே விளையாடா நின்ற

சிறுபிள்ளைக் கூட்டம்

[6-ம் திருமுறை அருள் விளக்க மாலை 89]

Link to comment
Share on other sites

14. சிதம்பர தூஷணமுஞ் செய்தனர்.

தில்லைத் தலத்தினும் பார்க்க உயர்ந்த தலங்கள் வேறின்மையால் கோயில் என்ப. அங்கே பிள்ளை தரிசிக்கப் போயகாலை இரகசியலிங்கத்தைக் காட்டுமாறு தீக்ஷ¢தர்களைக் கேட்க, அவர் உட்பிரவேசித்தல் கூடாது, இங்கு நின்று தரிசிக்க என்றனர். பிள்ளை பெருஞ்சினங் கொண்டு இதற்கு எதிராக ஒரு சிதம்பர தலமுண்டாக்கி, நடராசரையும் அங்கே வரவழைத்து நடனஞ் செய்விக்கின்றோம். சிற்றம் பலமுஞ் செய்கின்றாமென்று வடலூரில் உத்தரஞான சிதம்பரமென்று ஒரு கட்டிடங்கட்டி, நடராசர் எல்லாருங்காண இங்கே வந்து நடம் புரிவார் என்று கதையும் கட்டி யிறந்தார். அந்தக் கட்டிடத்தில் இடிவிழுந்து தகர்ந்தது யாவருமறிவர். சிதம்பர வெளியைப் பார்க்கினும் வடலூர் வெளி பெரிதென்றும், சிதம்பர சபை இடுக்கென்றும், நடஞ் செய்தற்கு ஒடுக்க மானதென்றும், தில்லையிலொரு அம்பலம் இருக்கிறதென்றும், வடலூராகிய பார்வதிபுரத்திலே சிற்றம்பலம், பேரம்பலம், பொன்னம்பல முதலிய எட்டு அம்பலங்களிருக்கின்றன வென்றும் சொல்லியழைத்து வாடியென்று அடிதாளத்திற் பாடியுள்ளார்.

வருவாரழைத்து வாடி-வடலூர் வடதிசைக்கே

வந்தாற் பெறலாம் நல்வரமே

இந்த வெளியில் நடமிடத்துணிந்தீரே- யங்கே

யிதைவிடப் பெருவெளி யிருக்கு தென்றாலிங்கே - வரு

இடுக்கிலாமலிருக்க விடமுண்டு நடஞ் செய்ய

விங்கம்பல மென்றங்கே யெட்டம் பல முண்டைய

ஒடுக்கிலிறுப்ப தென்னவள்வு கண்டு கொள்வீரென்னா

லுண்மையிது வஞ்சமல்ல வுன்மேலாணை யென்று சொன்னால் - வரு

[6-ம் திருமுறை - கீர்த்தனைகள்]

(B) வடலூரே 'சிற்சபை' என்று பாடினார்.

[6-ம் திருமுறை சிற்சபை விளக்கம் பத்துப் பாடல்கள்]

© அவ்வடலூர் அம்பலப்பாட்டே அருட்பாட்டு

அல்லாத பாட்டெல்லாம் மருட் பாட்டென்றார்

[6-ம் திருமுறை நாமாவளி- 101]

(d) வடலூர் உத்தரஞான சிதம்பரம் எனவே, தில்லைத்தலமாய் விளங்கும் சிதம்பரம் விசேட மில்லாத பூர்வசிதம்பரம் என்றும் அதனாற் பயனில்லை யென்றும் நிந்தித்தார்.

[6-ம் திருமுறை உத்தரஞான சிதம்பர மான்மியம்]

Link to comment
Share on other sites

15. ஜீரணமான ஆகாரம் மகாவிஷ்ணு என்றார்.

ஆகாரம் உண்டவுடனே ஜீரணமாய்ப் பால்வண்ணமாக ஆகாரப்பையில் வெண்மை நிறமாக இருப்பது திருப்பாற்கடல் என்றும், அதனடியில் உண்டாம்பசி - தீவிர சக்தியாகிய உஷ்ணம் - வடவாமுகாக்கினி என்றும் இரண்டிற்கும் மத்தியில் உண்டாகிய சீதளம் - விஷ்ணு பள்ளி கொண்டது என்று சொல்வது. திருப்பாற்கடலில் விஷ்ணு பள்ளி கொண்டது இது தான்.

(மதறாஸ் ச.சு.ச.ச. வெளியீடு 6-ம் திருமுறை)

[திருநெறிக் குறிப்புக்கள். 87]

16. தாயுமானவர் முதலானவர்களை இகழ்ந்தார்.

சமயமத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அநேக பெரியோர்களும் சுத்தப்பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்து விட்டதாக முறையிடுவது வாஸ்தவமா? அவாஸ்தவமா? என்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வசித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப் படிகளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர்கள் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர்; மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது, இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீளவருவார்கள், முன்னிருந்த அளவைக்காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.

[6-ம் திருமுறை திருநெறிக் குறிப்புக்கள் 102]

Link to comment
Share on other sites

17. இராமலிங்கர் பாடல் அருட்பா அல்ல - கோர்ட்டு தீர்ப்பு

இராமலிங்கர் பாடல்கள் திருவருட்பா ஆகாது என்று அப்பாடல்களிலிருந்தே தக்க சான்றுகள் எடுத்துக்காட்டி "மருட்பா மறுப்பு" என்ற பெயரால் பூ.பாலசுந்தர நாயக்கர் எழுதிய புத்தகத்தின் பேரில் இராமலிங்கம் பிள்ளையின் தமையன் மகனாகிய வடிலேலுப் பிள்ளை என்பவர் 1904-ம் வருஷத்திய 24533 வது காலண்டர் நம்பரில் சென்னை பிரசிடென்சி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நா. கதிரைவேற் பிள்ளை சு.பாலசுந்தர நாயக்கர் இருவர் பேரில் வழக்குத் தொடுத்தார். மாஜிஸ்ட்ரேட் இராமலிங்கம் பிள்ளை பாடல்களை அருட்பா என்று ஒப்புக் கொள்ள முடியாது என்று கூறி கதிரைவேற் பிள்ளை, பாலசுந்தர நாயக்கர் இருவரையும் விடுதலை செய்தார். இதன் பேரில் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

அதாவது -

High Court Calender 1905 வருஷத்திய No.143.

சென்னை பிளாக்டவுண் பிரசிடென்ஸி மாஜிஸ்ட்ரேட்டாருடைய 1904-ம் வருஷம் நவம்பர் மாதம் 21உ உத்தரவை கனம் பொருந்திய கோட்டாரவர்கள், அடியிற் கண்ட காரணங்களால் மேல் விசாரணை செய்து ரத்துச் செய்யும்படி மனுதார் கேட்டுக்கொள்கின்றனர்.

பிரதிவாதிகள் தாக்கல் செய்த ரிக்கார்டுகளை மாஜிஸ்ட்ரேட்டார் சாக்ஷ¢யத்துக்கு ஆதரவாகக் கொண்டது பிசகு;

இராமலிங்க சுவாமிகள் பாடல்களுக்கு முழுவதும் தவறான பொருள் கொண்டது பிசகு.

1905 நவம்பர் 21 உ ஹைகோர்ட்டு ஜஸ்டிஸ் மூர்துரை, ஜஸ்டிஸ் பென்ஷன்துரை அவர்களின் தீர்ப்பு

இந்தக் கேசை விசாரிக்கும்படி உத்தரவு செய்வதனால் யேதேனும் பொது நன்மை யுண்டாமென நாங்கள் நினைக்க வில்லை - அதனால் நாங்கள் இதில் பிரவேசிக்க மாட்டோம்.

குறிப்பு:- இந்த வழக்கு விபரங்கள் இராமலிங்கம் பிள்ளையின் பக்தர் டாக்டர் தஞ்சை சண்முகம் பிள்ளை அவர்கள் மாணவகர் தங்கவேலுப் பிள்ளை 20-9-1906ல் வெளியிட்ட "ஈழநாட்டு கதிரைவேற் பிள்ளையைப் பற்றி நடந்த விவகாரம்" என்ற புத்தகத்தின் சாரம்.

(a) அருட்பா ஆகாது என்பதற்கு வழக்கில் தாக்கல் செய்த ரிக்கார்டுகள்.

1. "இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாசதர்ப்பணம்" அல்லது "மருட்பா மறுப்பு" பாலசுந்தர நாயக்கர் எழுதி வெளியிட்டது.

2. 1872 பிரசோற்பத்தி வருஷம் தை மாதத்தில் வேதாரண்யம் உதய மூர்த்தி தேசிக சுவாமிகளால் வெளியிடப்பட்ட "முக்குணவயத்தின் முறை மறைந்தறைதல்" என்னும் பத்திரிகை-

3. இராமலிங்கம் பிள்ளை தமையன் சபாபதிப் பிள்ளையவர்களால் எழுதி வெளியிடப்பட்ட "இராமலிங்கம்பிள்ளை படிற்றொழுக்கம்"

"இராமலிங்கம் பிள்ளை அங்கதப்பாட்டு" என்ற நூல்கள்.

4. தேவாரம் முத்துசாமி முதலியார் வெளியிட்ட "சாதிப் புரட்டர் யாவர்" என்ற பத்திரிகை -

5. தத்துவபோதினி - தினவர்த்தமானி - முதலிய பத்திரிகைகள் - பேரம்பலப் பிரசங்கப் பத்திரிகை - அற்புதப்பத்திரிகை முதலாயின.

(B) "மருட்பா மறுப்பு" என்ற புத்தகத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து "இராமலிங்கர் பாடல் அருட்பா ஆகாது" என்று தீர்ப்புப் பெற்று நா.கதிரைவேற் பிள்ளை வெற்றி பெற்றதற்கு அவர் மாணாக்கர் திரு வி. கலியாண சுந்தர முதலியார் அவர்களே சாட்சி.

'அருட்பா வென்பது ஆறிரு முறையே என்று

அரச மன்ற மேறிப் பசுமரத்தாணிபோல நாட்டி'

'மன்னவர் நீதி மன்றினி லேறிப்

பன்னிரு முறையே உன்னருட் பாவென்

றாணி பசுமரத் தரைந்தா லென்னக்

காட்டிச் சாத்திரம் நாட்டினனெவனோ'

[பெரிய புராணம் - குறிப்புரை. by திரு.வி.க.1910-வது வருடப் பதிப்பு-உரிமையுரை]

குறிப்பு:- இப்புத்தகத்திலுள்ள விஷயங்கள் நீதிமன்றம் சென்று இராமலிங்கர் பாடல்கள் அருட்பா அல்ல என்று நிலைநாட்டி "இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு" என்னும் புத்தகத்திலிருந்தும் சங்கரன்கோவில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளை அவர்கள் எழுதிய "நாடும் நவினரும்" புத்தகத்திலிருந்தும் தொகுக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

18. தற்கொலை செய்து மாண்டார்.

செத்தாரை யெழுப்புவே மென்று கதை கட்டி நாளைக் கழித்துவர, ஆங்காங்குள்ளார் நித்தித்துப் பலவாறு கூறினார். அவ்வவமானம் பொறுக்க மாற்றாது தாமே தம்முயிரை மாய்க்கத் தொடங்கி சிவனை நோக்கி முறையிட்டார். அவை வருமாறு:-

'இத்தருணந் தவறுமெனி லென்னுயிர்போய்

விடுமிவ்வெளியேன் மேற் கருணை புரிந்

தெழுந்தருளல் வேண்டும்'

[6-வது திருமுறை திருவருட்பேறு 7]

'இப்பாரிலிது தருண மென்னை யடைந்தருளி

யெண்ணமெலா முடித்தருளி யேன்று கொளா யெனிலே

தப்பாமலுயிர் விடுவேன் சத்தியஞ் சத்தியம்.'

[6-வது திருமுறை பிரியேனென்றல் 1]

என்றிவ்வாறு கூறியுள்ளார். இறுதியில் இராமலிங்கம் பிள்ளை தம்முடைய புளுகுகளெல்லாம் நடக்காமையால் அநேகர் வைதனர். அவ்வவமானம் பொறுக்க முடியாமல் தாமே தம்முயிரை மாய்த்துக் கொண்டார்.

குறிப்பு:- தம்மைச் சிவமென்றும், சிவனது பெரிய பிள்ளை என்றும் சாகாவரம் பெற்றேன் என்றும், செத்தவரை எழுப்புவேன் என்றும் பிரசங்கம் செய்துவந்த இராமலிங்கர் வேறு எப்படி மரண மடைந்திருக்க முடியும்

Link to comment
Share on other sites

19. இராமலிங்கம்பிள்ளை ஜோதியில் கலக்கவில்லை.

இராமலிங்க வள்ளலார், மிக அண்மையில் மறைந்தவர். அவர் உடலைப் பஞ்சீகரணம் செய்து விட்டு ஜோதியில் கலந்து விட்டார் என்னும் கொள்கை அவருடைய அடியார்களுள் ஒரு சிலர்க்கிடையில் இருக்கிறது. மற்றொரு சிலர் அவர் பூதவுடலை ஜோதியில் கரைத்து விடவில்லை; மற்றவர்கள் போன்று உடலை உகுத்து விட்டுப் பரஞ்சோதியில் கலந்தார் என்று பகர்கின்றனர். இப்பொழுது வடலூரில் கட்டு விக்கப்பட்டிருக்கும் ஞான சபைக்கு அருகிலுள்ள மேடையினுள் அவர் உகுத்த பூதவுடலை இரகசியமாக அடக்கம் செய்து விட்டனர் என்று பலர் பகர்ந்து வருகின்றனர். இதன் மர்மம் எதுவாயினும் நமக்குக் கவலையில்லை. இராமலிங்க வள்ளலார் உலகு அறிய வெளிப்படையாக ஜோதியில் கலக்க வில்லை என்பது உண்மை.

(சுவாமி சித்பவானந்தா அவர்கள், தர்மசக்கரம், மாதசஞ்சிகை, சக்கரம் 8, ஆரம் 12 பக்கம் 465)

மனமே! சிந்தனை செய். தெளிந்து செயலாற்று.

Link to comment
Share on other sites

வேண்டுகோள்.

இதுகாறும் கூறியவாற்றால் இராமலிங்கம் பிள்ளை அருளாளர் அல்லர் என்றும் அவர் பாடிய பாட்டுகள் அருட்பாக்கள் ஆகா என்றும் ஆரம்ப முதலே மறுப்பு நூல்கள் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

தேவாரம் முதல் பெரிய புராணம் இறுதியாகவுள்ள பன்னிரு திருமுறைகளும் அருளாளர்களால் பாடப்பட்டவை என்றும், அவைகளே அருட்பாடல்கள் என்றும், அவைகளே திருமுறைகள் என்றும், இன்று வரை அறிவுடையவர்கள் போற்றி வருவன என்பதும் எல்லோரும் தெரிந்த விஷயம்.

தேவார திருவாசகங்களை விட்டு இராமலிங்கர் பாடல்களைப் போற்றுவது கனியிருப்பக் காய்கவர்ந்தது போலல்லவா!

சிந்தனை செய்து, தெளிந்து, நன்மையைக் கடைப்பிடித்து, ஆன்மலாபம் பெற வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

நமது நெல்லைமா நகரில் சமீபத்தில் நடந்த சன்மார்க்க சங்கத்தின் 15-வது ஆண்டு விழாவில் (14-4-1960ல்) நிறைவேற்றிய தீர்மானங்களைச் சைவப் பெருமக்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். அந்தத் தீர்மானம் சன்மார்க்க சங்கப் பத்திரிகை 'அருள்ஒளி' ஒளி 5. கதிர் 8ல் (1-4-1960 பிரசுரமாயிருக்கிறது.அவை வருமாறு:- 1. இராமலிங்க அடிகளாரின் திருவுருவத்தை, அஞ்சல் வில்லையில் பொறித்துப் பெருமைப் படுத்துமாறு திருநெல்வேலிச் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இந்திய அரசினரையும், சென்னை மாகாண அரசினரையும் மிக்க பணிவோடு வேண்டிக் கொள்கிறது. 2. (a) தமிழ் நாட்டுத் திருக்கோயில்களிலே(சைவ வைணவ இரு மதத்தினர் கோவில்களில் என்று கருதுகிறோம்) இறைவன் அடியார் திருவுருவங்களோடு, இராமலிங்க வள்ளலாரின் திருவுருவத்தை அமைக்குமாறும், (B) அடிகளாரின் திருவருட்பாக்களைத் திருக்கோவில்களில் ஓதப்பெறும் வழிபாட்டுப் பாடல்களோடு சேர்த்துப் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும், © மக்களை மனப் பண்பாடு அடையச் செய்யும் திருவருட்பாக்களைத் திருக்கோவில்களில் எல்லோரும் காணும் படியான இடங்களில் பொறிக்குமாறும் செய்ய, சென்னை அறநிலையப் பாதுகாப்புத்துரை அமைச்சர் அவர்களையும் ஆணையாளர் அவர்களையும் திருநெல்வேலிச் சமரச சன்மார்க்க சங்கம் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறது. இந்தத் தீர்மானங்கள் 28-4-1960 தினமணிப் பத்திரிகையிலும் 15-4-1960 மாலை முரசுப் பத்திரிகையிலும் வெளியாகி யிருக்கிறது. மேற்கண்ட தீர்மானங்களைச் சற்று ஆராய்வாம். முதற் பாகத்தில் கண்டபடி தபால் வில்லைகளில் இராமலிங்கர் உருவத்தைப் போடுவதில் நமக்கு அக்கறையில்லை. பிற்பகுதியைப் பற்றித்தான் ஒவ்வொரு சைவரும் சிந்திக்க வேண்டுகிறோம்இராமலிங்கர் இற்றைக்கு சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வாழ்ந்தவர். ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடினார். அவருடைய சீடர்களும் அபிமானிகளும் அவரைப் புகழ்ந்தனர். அதோடு நில்லாமல் அவர் பாடல்களை அருட்பா என்றும், தேவார திருவாசக முதலிய திருமுறைகளுக்குச் சமமானவை யென்றும், அவற்றைக் கோவில்களில் ஓதவேண்டும் என்றும் சொல்லத் தலைப்பட்டனர். உடனே சைவ உலகத்துக்கு வரும் கேட்டை உணர்ந்து அநேக சைவ நூல்களை வெளியிட்டும், சைவநூல்கள் எழுதியும், சைவப் பிரசங்கங்கள் செய்தும், பல நன்மாணாக்கர்களுக்கு உபதேசித்தும் சைவத்தை அரண் செய்தும் பணியாற்றிய சைவ சித்தாந்த சீலராகிய யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் இராமலிங்கர் பாடல்கள் அருட்பா ஆகா எனவும் அவைகளைக் கோவில்களில் ஓதுதல் சிவாபரா தமாகும் விளக்கினார்கள். அது சம்பந்தமான விவகாரங்கள் நியாயஸ்தலத்துக்கும் கொண்டு போகப் பட்டன. இறுதியில் அவை அருட்பாவல்ல என்றும் கோவில்களில் ஓதத்தக்கவையல்லவென்றும், தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்குப் பின் சிலர் அவர் சைவ சித்தாந்தியல்ல வென்றும் எல்லாச் சமயங்களும் ஒன்று தான் என்ற கொள்கையை யுடையவரென்றும், அவர் பாடல்களில் பல ஆபாசக்கருத்துக்கள் அடங்கியுள்ளன வென்றும், அருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் அவருக்குப் பொருந்தாது என்றும், அவர் பாடல்களுக்கு அருட்பா என்ற பெயர் பொருந்தாதென்றும் சாங்கோபாங்கமாக எழுத 1, இராமலிங்கருடைய உறவினர் வழக்குத் தொடர, அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இவையாவும் பழங்கதை. அதற்குப்பின் ஒருவரும் இராமலிங்கருடைய உருவத்தைக் கோவிலில் வைப்பதற்கோ, அவர் பாடல்களை ஓதுவார்களைக் கொண்டு ஓதுவிக்கவோ முயற்சிக்கவில்லை. இப்போது நெல்லை சன் மார்க்க சங்கம் இத்திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறது. இராமலிங்கருக்கு இல்லாத பெருமையை கோவில்களின் வைப்பது மூலம் இச்சங்கம் அவருக்கு தேடிக் கொடுக்க முயல்கின்றது போலும். இச்சங்கம் இதற்கு முன் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் சுவாமி நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் இராமலிங்கர் உருவத்தை வைக்க முயற்சி செய்து அப்போதுள்ள தர்மகர்த்தர்களின் பலத்த ஆ§க்ஷபனையினால் மேற்படி முயற்சி பலிக்காமற் போயிற்று. இப்போது மறுபடியும் முயற்சிக்கிறது. இராமலிங்கர் சைவ சமயி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

"சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும், லக்ஷ¢யம் வைக்க வேண்டாம். (அவற்றில் தெய்வத்தைப் பற்றி) குழு உக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றி லக்ஷ¢யம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளில் - அவ்வச்சமய மதங்களிலும் -அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லாது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக்கொள்ளுகிறதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக் கெல்லாம் சாக்ஷ¢, நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷ¢யம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வள வென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலர்க்கும் தெரியும். அந்த லக்ஷ¢யம் இப்போது எப்படிப் போய்விட்டது? பார்த்தீர்களா! அப்படி லக்ஷ¢யம் வைத்ததற்குச் சாக்ஷ¢வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற பாடலையும், மற்றவர்கள் பாடலையும், சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷ¢ சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டுவீட்டீர்களானால், என்னைப்போல பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இது வரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை"

- (திருவருட்பா 6-ம் திருமுறை - வசனபாகம் 13-வது அஅத்தியாயம்) மதறாஸ் சமரஸ சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு.

Link to comment
Share on other sites

மேற்படி இராமலிங்கருடைய வாக்கு மூலம் "உபதேசம்" என்னும் தலைப்பின் கீழ் பத்தாவது பாராவாகப் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. இவ்வுபதேசப்பகுதி ஸ்ரீமுக வருஷம் ஐப்பசி மாதம் 7-ம் தேதி புதவாரம் பகல் 8 மணிக்கு மேட்டுக் குப்பம் என்னும் சித்திவிலாகத் திருமாளிகையில் முதன் முதல் கொடி கட்டினவுடன் நடந்த விவகாரத்தின் குறிப்பு" என்று பதிப்பாளர் குறிப்பொன்று அப்புத்தகம் 569-ஆம் பக்கத்தில் காணப்படுகிறது. இராமலிங்கர் சரித்திரம் எழுதிய தொழுவூர் வேலாயுத முதலியார், இராமலிங்கர் அதே வருஷம் தை மாசம் 19-ம் தேதி மறைந்தார் என்று எழுதியிருக்கிறார். ஆகவே, தான் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் தனக்கு அறிவு வந்ததாகவும் அதற்கு முன்னெல்லாம் தனக்கிருந்த அறிவு அற்ப அறிவு என்றும் பாடியவரே சொல்லியிருக்க அவ்வற்ப அறிவுடன் பாடிய பாக்களை அருட்பாக்கள் என்று அவருடைய சிஷ்யர்கள் சொல்லுவது பொருத்தமற்றதல்லவா?

இராமலிங்க பக்தர்கள் வடலூர் திருச்செந்தூர் இந்த இடங்களில் உள்ளபடி இராமலிங்கருக்குத் தனிக்கோவில் கட்டி வழிபாடு செய்வதே பொருத்தமாகும். அப்படியல்லாமல் சைவ வைணவக் கோவில்களில் அவர் உருவச்சிலை வைப்பதற்கும், அவர் பாடல்களை ஓதுவதற்கும் முயற்சி செய்வது மிகவும், பொருத்த மற்றதும் வருந்தத்தக்கதுமாகும்.

Link to comment
Share on other sites

குருலிங்க சங்கம பக்தி முதிர்ந்து சிவனடியார்களைச் சிவமெனவே வழிபட்டுச் செயற்கருஞ் செய்கை செய்த தீரர்களான அறுபத்துமூன்று நாயன்மார்கள், பல அற்புதச் செயல்கள் புரிந்து சைவசமய ஸ்தாபனம் செய்த ஆசார்ய மூர்த்திகளாகிய எங்கள் ஸ்ரீ ஞான சம்பந்தமூர்த்தி, ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக சுவாமிகள் இதுபோல் வைணவ மதத்தில் உள்ள ஆசாரியர்கள் முதலியவர்களின் நிலை எங்கே, இராமலிங்கரின் நிலை எங்கே? எலும்பைப் பெண்ணாக்கியும், கல்லைத் தோணியாக மிதக்கச் செய்தும், முதலைவாய்ப் பிள்ளையை வரவழைத்தும் ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தும் இன்னும் பல அற்புதங்கள் செய்த திருமுறைகள் எங்கே? இராமலிங்கர் வெள்ளைப் பாடல்கள் எங்கே? மலைக்கும், மடுவுக்கும், கடலுக்கும் குட்டத்துக்கும், சூரியனுக்கும் மின்மினிக்கும் உள்ள தாரதம்மியமாகும். இராமலிங்கரை மேற் கூறிய நாயன்மார்களுக்கும், ஆசாரிய மூர்த்திகளுக்கும் சமமாக எண்ணிக் கோவில்களில் நுழைக்கவும், அவர் பாடல்களை அருள்வாக்காகிய தெய்வத் திருமுறைகளுடன் சமமாக எண்ணி ஓதுவிக்கவும் முயல்வது சிவத்துரோகமும் சிவாபராதமும் ஆகுமென்பதில் சந்தேகமில்லை. நிற்க.

சிவாலயங்கள் யாவும் சிவாகம விதிப்படியும் வைணவ ஆலயங்கள் பாஞ்சாத்திர ஆகம விதிப்படியும் கட்டப்பட்டு அந்தந்த ஆகம முறைப்படி நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாகமங்களுக்கு முரணாக எந்தக் காரியங்களும் செய்தல் குற்றமாகும். அப்படிச் செய்தால் நாட்டின் நலனும் மக்கள் நலனும் அழியும்.

"ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்றுதைத் தாந்திருக் கோயில்க ளெல்லாஞ்

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே"

என்பது திருமூலர் திருவாக்கு. இங்கே சாற்றிய பூசைகள் என்பது சிவாகமங்களில் விதிக்கப்பட்ட முறைகள் என்று பொருள்.

சிவாலயங்களில் சிவபெருமானையும் அவரின் வேறல்லாத உமாதேவி, விநாயகக்கடவுள், முருகக்கடவுள், வீரபத்திரக்கடவுள், பைரவக்கடவுள் இவர்களையும் சிவபெருமானின் மற்ற வடிவங்களான கலியாண சுந்தர வடிவம், நடராச வடிவம், தெக்ஷ¢ணாமூர்த்தி வடிவம், பிக்ஷ¡டன வடிவம், நடராச வடிவம், தெக்ஷ¢ணாமூர்த்தி வடிவம், பிக்ஷ¡டண வடிவம், திரிபுரசம்ஹார வடிவம், காலசம்ஹார வடிவம் முதலிய வடிவங்களையும் சிவபிரான் திருவடியிற் கலந்த சிவப்கதர்களையுமே பிரதிட்டை செய்து வழிபடவேண்டியது சிவாகமவிதி. சிவபக்தர்கள் யார் என்பதைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் கூறுகிறது.

Link to comment
Share on other sites

மேலும் ஒவ்வொரு கூட்டத்தாரும் தாம் பெரியவர் என்று கருதுகிறவர்களின் உருவச்சிலைகளை கோவில்களில் வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் கோவில் ஒரு பொருட்காட்சி சாலையாக மாறிவிடுமல்லவா?

இராமலிங்க பக்தர்கள் முயற்சிப்பது போல்,

ஸ்ரீ விவேகானந்தரின் சீடர்களும்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களும்

ஸ்ரீ ராதா சுவாமியின் சீடர்களும்

ஸ்ரீ ரமணரிஷியின் சீடர்களும்

ஸ்ரீ சாய்பாபாவின் சீடர்களும்

ஸ்ரீ சின்மயானந்தரின் சீடர்களும்

ஸ்ரீ ராஜாராம் மோகன் ராயின் (பிரம்மசமாஜம்) சீடர்களும்

ஸ்ரீ தயானந்த சரஸ்வதியின் (ஆரியசமாஜம்) சீடர்களும்

ஸ்ரீ அபேதானந்தரின் சீடர்களும்

ஸ்ரீ சிவானந்த சரஸ்வதியின் சீடர்களும்

ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிகளின் சீடர்களும்

ஸ்ரீ அனிபெஸண்ட் அம்மையார் (Theosophical Society) சீடர்களும்.

இன்னும் பல கூட்டத்தார்களும் தாங்கள் தெய்வமாக வழிபடுகிற மகா புருஷர்களின் உருவச்சிலைகளை கோவிலில், வைக்க வேண்டுமென்று கருதக்கூடுமல்லவா? சைவ வைணவக் கோவில்களில் அவ்வுருவங்களை வைக்கலாமா? அந்தக் கூட்டத்தார்கள் தங்கள் தலைவர்களுக்குத் தனிமடங்களோ, கோவில்களோ கட்டி வழிபடுவதுதானே நியாயம்.

Link to comment
Share on other sites

மேலும் சைவ சித்தாந்த சமயத்தின் நெறிநின்றும் பல சித்தாந்த நூல்களையும் அருள்மொழிகளையும் சைவ உலகத்துக்கு உபகரித்தும் சிவசாயுச்யத்தை யடைந்தவர்களுமாகிய பல சிவஞானிகள் சமயாசாரியர்கள் காலத்துக்கு முன்னும் பின்னும் தோன்றியிருக்கிறார்கள். உதாரணமாக,

ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியசுவாமிகள் - கந்தபுராணம் பாடியவர்

ஸ்ரீ பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம் பாடியவர்

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் - தணிகைப்புராணம் முதலிய புராணங்கள் பாடியவர்

ஸ்ரீ அரதத்த சிவாசாரியார் - இருப்பு முக்காலியிலிருந்து சிவபரத்துவம் நிருபணம் செய்தவர்

ஸ்ரீ திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ சேந்தனார் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ கருவூர்த் தேவர் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ கண்டராதித்தர் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ வேணாட்டடிகள் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ திருவாலியமுதனார் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ புருடோத்தம நம்பி - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ சேதி ராயர் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ பட்டினத்தடிகள் - அநேகபிரபந்தங்கள் செய்தவர்

ஸ்ரீ நக்கீர தேவர் - திருமுருகாற்றுப்படை அருளிசெய்தவர்

ஸ்ரீ கபிலதேவ நாயனார் - 11ம் திருமுறைப் பிரபந்தம்

ஸ்ரீ தாயுமான சுவாமிகள் - ஆயிரக்கணக்கான சித்தாந்த சைவ சமயப் பாடல்கள் பாடியவர்

ஸ்ரீ மத் சிவஞான சுவாமிகள் - சிவஞான பாஷ்யம், காஞ்சிப் புராணம் முதலிய பல நூல்ல்கள் அருளிச் செய்தவர்.

ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் - சிதம்பர மும்மணிக்கோவை, திருவாரூர்நான் மணிமாலை முதலிய பல நூல்கள் செய்தவர்.

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் என்ற முருகதாஸ் சுவாமிகள் - சைவ சமய சரபம் முதலிய சைவ சமயச் சார்புடைய பல நூல்கள் செய்தவர்.

இன்னோரன்ன சைவ சமயப் பெரியார்களின் திருவுருவங்களையே கோவில்களில் மரபுக்கு மாறாக வைப்பதற்கு இன்னும் சைவ உலகம் முற்படவில்லை.

Link to comment
Share on other sites

இங்ஙனமிருக்க சைவ சமயத்தையே சாராத, வேதாகம நிந்தனை செய்த, உருவவழி பாட்டை நிந்தனை செய்து ஒளி வழிபாட்டைப் போதித்த இராமலிங்கருடைய உருவத்தை வேதாகம விதிப்படி கட்டப்பட்ட சைவக் கோவில்களில் வைப்பதும், சைவ சித்தாந்தக் கொள்கைக்கு மாறான அவர் பாடல்களை ஓதுவதும், அதுவும் ஓதுவார்களைக் கொண்டே ஓதுவதும் எப்படிப் பொருந்தும்? அதிபாதகம்! அதிபாதகம்!!

களைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதவசியம். அற்றேல் அவற்றை கோடரி கொண்டு வெட்டவேண்டிய நிலைமை ஏற்படும்.

இதுகாறும் விளக்கிய வாற்றால் இராமலிங்கர் சித்தாந்த சைவரல்லர் என்பதும் அவர்பாடல்கள் அருட்பாடல்கள் அல்ல என்பதும், அவருடைய உருவச்சிலையைக் கோவில்களில் வைப்பதும், அவர் பாடல்களை ஓதுவிப்பதும், சாஸ்திர விரோதம் என்பதும், சைவமக்கள் அதற்கு இடங்கொடுத்தல் சைவ சமயத்துக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் என்பதையும் சாஸ்த்ரோக்தமாக கோவில்களில் வழிபாடு செய்து வரும் சைவ மக்களின் மனதையும் புண்படுத்தும் செயல் என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம். அவர் சித்தாந்த சைவரல்லர் என்பதையும் அவர்களின் நூல்களில் உள்ள பிற விஷயங்களையும் விளக்குவதற்கு இந்த பிரசுரத்தில் இடம் போதாததால் விடுத்தாம். சந்தர்ப்பமும் அவசியமும் ஏற்பட்டால் இராமலிங்கர் பாடல்களைப் பற்றித் தனியான ஆராய்ச்சி வெளியிடப்படும்.

வேறு எந்த சமய ஆசாரியர்களுக்கும், சமய நூல் ஆசிரியர்களுக்கும் இல்லாத மறுப்பும் எதிர்ப்பும் இராமலிங்கர் விஷயத்தில் அவர் தோன்றிய நாள் முதல் இன்று வரை இருந்து வருவதே இராமலிங்கரும் அவர் பாடல்களும் சைவர்களுக்கு உடன் பாடல்ல என்பதற்கு சான்றாகுமல்லவா?

எந்தத் தனி மனிதருக்கும் கூட்டத்தாருக்கும் தம்முடைய அறிவுக்கு உண்மையென்று தோன்றுகிறதைக் கடைப்பிடிக்கவும் தாம் நம்புகிற தெய்வத்தை வழிபடவும், தாங்கள் பெரியவர்கள், அல்லது மகான்கள் என்று கருதுகிறவர்களைப் போற்றவும், பாராட்டவும் உரிமையுண்டு. ஆனால் பிற சமயங்களில் தலையிடுவதும், மற்றச் சமயக்கோவில்களிலும் வழிபாடுகளிலும் கொள்கைகளிலும் தம்முடைய விபரீதக் கருத்துக்களை நுழைக்கவும் செயலாற்றவும் முயற்சிப்பதும் வரம்பு மீறிய செயலாகும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

சைவர்களே! உஷார்!!

ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.

Link to comment
Share on other sites

இராமலிங்கம் பிள்ளையையும் அவர் பாட்டுக்களையும் கண்டித்து அவர் காலந்தொடங்கி இதுகாறும் வெளியிடப்பட்ட நூல்களும் பத்திரிகைகளும் வருமாறு.

  1. போலி யருட்பா மறுப்பு
  2. குதர்க்காரணிய நாச மகா பரசு கண்டனம்
  3. திராவிடப் பிரகாசிகை
  4. முக்குணவயத்தின் முறை மறந்தறைதல்
  5. போலி யருட்பா வழுத்திரட்டு
  6. இராமலிங்க பிள்ளை அங்கதப் பாட்டு
  7. திருவருணெறித் தமிழ்வேதப் பிரபாவம்
  8. போலியருட்பாக் கண்டனப் பிரசங்கம்
  9. பசுகரண விபரீதாத்த நிக்கரகமும் போலியருட்பாக் கண்டனப் பரிகார மறுப்பும்
  10. இராமலிங்கர் படிற்றொழுக்கம்
  11. போலிவாதிகளுக்குப் புத்தி புகட்டல்
  12. போலி யருட்பாக் கண்டன மகாவித்வ ஜனசபை
  13. மருட்பா விவாத மத்தியக்ஷப் பத்திரிகை
  14. சிவநிந்தை, குருநிந்தை, திருவருட்பா நிந்தையினார்க்குச் செவியறிவுறுத்தல்
  15. குதர்க்கிகளின் பொய்கோள் விலக்கு
  16. இராமலிங்கர் பாடல் ஆபாசதர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு
  17. தமிழ்ப் பேரகராதி
  18. மருட்பா மறுப்பு அரங்கேற்றம்
  19. மனமே சிந்தனை செய்; தெளிந்து செயலாற்று
  20. கருங்குழிப் பிள்ளை பாடல் ஆராய்ச்சி
Link to comment
Share on other sites

இராமலிங்கம் பிள்ளை அருளாளர் அல்ல என்றும் அவர் பாடல்கள் அருட்பாடல்கள் அல்ல என்றும் ஆரம்பத்திலிருந்தே எழுதியும் பேசியும் வந்த பெரியார்கள்.

  • ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள்
  • திருவாவடுதுறை மகாசந்நிதானம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள்
  • வேதாரணிய ஆதீனம் சற்குருநாத சுவாமிகளான உதயமூர்த்தி தேசிக சுவாமிகள்
  • மகாவித்வான் மதுரை இராமசுவாமிப் பிள்ளை அவர்கள்
  • மகாவித்வான் கொ. சாமிநாத தேசிகர் அவர்கள்
  • மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்
  • திருவண்ணாமலை ஆதீனம் ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள்
  • தருமபுர ஆதீனம் சண்முகத் தம்பிரான் சுவாமிகள்
  • திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் சபாபதி நாவலர் அவர்கள்
  • ஸ்ரீ நா. கதிரைவேலுப் பிள்ளை அவர்கள்
  • ஸ்ரீ பாலசுந்தர நாயக்கர்
  • ஸ்ரீ மாமண்டூர் தியாகேச முதலியார் அவர்கள்
  • தூத்துக்குடி சிவஞான பிரகாச சபையின் அங்கத்தினரும் சித்தாந்தப் பிரசாரணருமாகிய ஸ்ரீமந் இரா. ம நயினார் செட்டியார் அவர்கள்
  • இராமலிங்க பிள்ளை தமையன் சபாபதிப் பிள்ளை
  • சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை
  • சித்தாந்த சைவ செந்நெறிக் கழகம், நெல்லை

Link to comment
Share on other sites

இராமலிங்கர் திருவருட்பா சாத்திரக் குப்பை தானே?

இராமலிங்கர் சமயங்களைக் கண்டித்துப் பாடினார். பொய்ச் சமயங்களைக் கண்டிப்பது பொருந்தும். ஆனால் இது பொய்ச் சமயம் இது மெய்ச்சமயம் என்ற வியவஸ்தையின்றி எல்லாச் சமயங்களையுமே அவர் நித்தித்தார்.

'எச்சமயங்கலும் பொய்ச்சமய மென்றீ ரிச்சமயமிங்கு வாரீர்

மெய்ச்சமய்ந் தந்தீர் வாரீர்'

[இரமலிங்கர் - திருவருட்பா - 6ம் திருமுறை

வர்க்கமாலை யென்னுங் காலைப்பாட்டு -68]

என்ற அவர் பாட்டுக் காண்க. உலகில் எச்சமயங்களு மிருக்கக் கூடா தென்பதுகான் அவரது விருப்பம். ஆனால் ஆரிய சமாசம், பிரம சமாசம், ஸாயிசமாசம், பிரமஞான சபை, அருள் நெறித் திருக்கூட்டம் முதலியனபோல் அவராலும் ஒரு சங்கம் சிருட்டிக்கப்பட்டது. அதுதான் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்பது. அச் சமாசம், சபை, கூட்டம் என்ற சொற்கள் சமயம் என்ற பொருளிற்றா னிருக்கின்றன. ஆகலின் அவையும் வெவ்வேறு சமயங்களே. அதுபோல் அச்சன்மார்க்க சங்கமும் ஒரு சமய்ந்தான். அதை அப்பாட்டில் 'மெய்ச்சமயம்' என அவர் சொல்லிப் புகழ்ந்து கொண்டார். சமயம் என்ற சொல்லில் வெறுப்புக் கொண்ட அவர் தம் சங்கத்தைச் சமய மெனச் சொல்ல வைத்தது அவரது ஊழியோ மென்க. அவர் நிந்தித்த சமயங்களுட் சைவமும் ஒன்றென்பது முன்னர்க் காட்டப்பட்டது. அவரோ, பிறரோ செய்கிற எத்தகைய நிந்தையாலும் எச்சமயத்தையும் அழிக்க முடியாது. அவரெல்லாம் சமரசம் சங்கம் முதலிய பெயர்களைக் கற்பிக்கலாம். புராதன சமயங்களோடு அவையுஞ் சேர்ந்து சமயங்களின் தொகை பெருகும். அதனால் மக்களுக்குள் பிளவுகளும் அதிகமாம்.

இராமலிங்கர் சாத்திரங்களைக் குப்பைக ளென்றனர்.

'சாத்திரம் பல பேசுஞ் சழக்கர்காள்

கோத்திரமுங் குலமுங்கொண் டென் செய்வீர்

பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்

மாத்திரைக்கு ளருளுமாற் பேறரே'

[அப்பரடிகள் 5-ம் திருமுறை, திருமாற்பேறு]

என்றது திருமுறை. சாத்திரத்திற் கோத்திரம் வேண்டும், குலம் வேண்டும், பாத்திரஞ் சிவமென்று பணியுங் கொள்கை வேண்டும் என்பன சொல்லப்பட்டன. சிவபெருமானொருவரே சர்வான்மசேவியரா யுள்ளா ரென்ற பதிவிரதா தர்மபுத்தி யோடு அவரைப் பணியும் பாக்கியம் பரவகாரிகளுக்கிராது. பூர்வ புண்ணிய பயனாகப் பொருள் வளம், கல்விப் பெருக்கம், தேக சுகம் முதலியவற்றைப் பெற்றவருள் சிலர்பலர் அவை பற்றித் தம்மை வியந்து புத்திகெட்டுச் சிவசேவையை மறந்து திரிவர். அப்படியே கோத்திர குலநலன்களைப் பெற்றவருள்ளும் அவை பற்றித் தம்மை வியந்தும், புத்திகெட்டும் பாத்திரஞ் சிவமென்று பணியாமல் திரிவாரு முளர். அவரைச் 'சழக்கர்காள்' என விளித்துக் கோத்திர குலநலன்கள் உள்ளனவேயாயினும் உடலோடு ஒட்டியனவே, உடல்போனால் அவையும் போம், அவை உயிரோடு செல்லா, சிவபெருமானைப் பணிவதே தலையாய கடன், அதனை யாற்றுங்கள், அப்புண்ணியமே உங்களுயிரோடு சென்று அதற்குப் பேரின்பத்தை நல்கும் எனக் கருணை மேலிட்டு அவருக்கு உபதேசிக்கிறார். அத்திருமுறை ஆசிரியர். அது சாத்திர நிந்தை யாகாது, சாத்திரோக்தமான ஆசரணை யில்லாதவரே சழக்க ரெனப்பட்டார். இராமலிங்கரால் அப்பாடலின் உட்கிடையைக் காண முடியவில்லை. அதனால் சாத்திரங்களையே குப்பை யென அவர் பழித்தார். ஆனால் பிறிதோரிடத்தில்

'திருமந்திரமும், திருவாசகமும்: சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம், இது மொத்தம் எண்ணாயிரம் - தோத்திரங்களிற் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.'

திருவருட்பா [சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு. 6வது திருமுறை - சமரச சுத்த சன்மார்க்கத் திருநெறிக் குறிப்புக்கள் - பக்கம் 68]

என்ற அவர் வாக்கியங் காணப்படுகிறது. குப்பைகளிற் சிறந்தது திருமந்திரம் என்பது அவர் கருத்தா? அன்றாயின் காரணங் கூறுக. இன்னும் அவர் பாடற்றிரட்டுச் சாஸ்திரமா? அசாஸ்திரமா? சாஸ்திரமாயின் அவர் பார்வையிற் குப்பையே. அம்முறையில் நானும் அப்படிக் கொண்டு ஒதுக்கவேண்டியவனே. அசாஸ்திரமாயின், அசாஸ்திரமெல்லாங் குப்பைதான். இன்னும் அவர் போற்றுஞ் சமரசவேத மென்ப தொன்று. அது குப்பையா? அன்றா? அன்றென்றால் ஆதாரம் வேண்டும். சைவசமய ஆலய கிரியைகளுக்குச் சிவாகமங்கள் விதிநூலா யிருந்துவரும் மரபைக் குலைக்கவே அவர் சாத்திர நிந்தையி லிறங்கினார்.

Link to comment
Share on other sites

திருவாய்மொழியும் வடலூர் இராமலிங்கர் பாடலும் கொண்டு அர்ச்சனை செய்வது சைவாலயங்களிலா? வைஷ்ணவ ஆலயங்களிலா?

இராமலிங்க ராக்கிய பாடல்களின் திரட்டை அவருள்படச் சிலர் திருவருட்பா வென்பர். அதை யெங்கு ஓத வேண்டும்? வடலூரிலா? அவ் விராமலிங்கரின் உருவம் வைக்கப்பட்டுள்ள பிற விடங்களிலா? ஆமெனின் அது சரி. சைவாலயங்களிலும் அதை யோதலாமெனின் அது தவறே. ஏன்?

1982ல் சென்னை "உமாபதி" அச்சு நிலையத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடாக வந்த திருவருட்பாப் புத்தகத்தில் பாகம் 2 பக்கம் 573-574-575.

'சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும்....லக்ஷ¢யம் வைக்க வேண்டாம். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷ¢யம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளிக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த இலக்ஷ¢யம் இப்போது எப்படிப் போய்விட்டது? பார்த்தீர்களா? அப்படி லக்ஷ¢யம் வைத்ததற்குச் சாக்ஷ¢ வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற பாடலையும், மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாக்ஷ¢ சொல்லிவிடும். ஏன் அவ்வளவு அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றல், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமே லேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த இலாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷ¢யமே என்னை இந்த நிலையில் தூக்கிவிட்ட தென்றாலோ அந்த லக்ஷ¢யம் தூக்கி விடவில்லை' என்று அவ் விராமலிங்கரே சொல்லி விட்டார். ஏறாத எந்த நிலையில் அவர் ஏறியிருந்தாலும் இருக்கட்டும். அதற்கு முன்னரே அவர்(வடலூர் இராமலிங்கர்) சைவ சமயத்தை விட்டு விலகிப் போனவர். அது மாத்திரமா? தாம் மதம் மாறியது போல எல்லாருமே சைவ சமயத்தை விட்டு மாறுக என்பதும் அவருபதேசம். அம்மட்டோ? தம்முடைய திருவருட்பாப் பாடல்களும் சிலவோ பலவோ தமக்கிருந்த அற்ப அறிவாற் பாடப்பட்டன என்பதையும் அவர் விளம்பினார். அப்படியிருந்தலால் அவரியற்றிய பாடல்களின் திரட்டுச் சைவ சமயப் பார்வையில் திருவருட்பாவாதல் யாங்ஙனம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.