Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை  (25) காலை முதல்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்..

Screenshot_20220325-123738_Video_Player.

இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப் படகில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன்களைப் பெற்று கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

வழக்கம் போல கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்பலகையும் அதில் இருந்த மீனவர்கள் 12 பேரையும், அதேபோல மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, காரை நகர் மற்றும் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இருவேறு மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, ஊர்காவல்துறை மற்றும் கிளிநொச்சி ஆகிய வெவ்வேறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Screenshot_20220325-123744_Video_Player.

 இந்நிலையில் குறித்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்..

இந்த உத்தரவைத் தொடர்ந்து 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்,

 இந்நிலையில், இலங்கை கடற்படையின்  மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் மீனவர்களின் கைது நடவடிக்கை காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்று சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 16 மீனவர்களையும், 2 விசைப் படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 மேலும் மீனவர்களின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு எடுத்துக் கூறும் விதமாக நாளை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Screenshot_20220325-123749_Video_Player.

 இந்த வேலைநிறுத்தம் காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மீன்பிடி தொழிலில் நேரடியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும், சார்ந்த தொழிலாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.

 எப்போதும் பரபரப்பாக காணப்படும் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம், மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பம் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.