Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கிலிருந்து புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான இராணுவ பலம் கிடையாது: "லக்பிம"

Featured Replies

ஞாயிற்றுக்கிழமை 29 யூலை 2007 20:41 ஈழம் பி.கெளரி

கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான பலம் சிறிலங்கா இராணுவத்துக்கு கிடையாது என்றும் வெளியேறி வரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காக பேராறு காட்டுப்பகுதியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வீரர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"லக்பிம" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூரிய எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

குடும்பிமலை மீதான சிறிலங்கா அரசின் இராணுவ நடைவடிக்கையை அடுத்து வடபோர் முனையை நோக்கி போர் நகர்ந்துள்ளது. இது சிறிலங்கா வரலாற்றில் முதற்தடவை அல்ல. அங்கு போர் முனைகள் முன்னரும் இவ்வாறு இடம் மாறியுள்ளன.

1994 ஆம் ஆண்டு படையினர் கிழக்கை கைப்பற்றிய போது விடுதலைப் புலிகளின் படையணிகளும்இ அதன் சிறப்புப் படையணியான ஜெயந்தன் பிரிக்கேட்டும் மோதல்கள் இன்றி முல்லைத்தீவுக்கு நகர்ந்திருந்தன. இது வடபகுதியில் மேற்கொள்ளப்படும் எதிர்காலத் தாக்குதல்களுக்காக தமது படையினரை தக்கவைக்கும் தந்திரமாகும். இவை பின்னர் நிரூபிக்கப்பட்டும் இருந்தன.

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மோதல்கள் எவ்வாறு இருக்கும் என ஆராய்வதற்கு வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்படும் இரு வேறுபட்ட உத்திகளை புரிந்து கொள்வது அவசியம். முன்னர் படையினர் கிழக்கை கைப்பற்றிய போதும் வடக்கை கைப்பற்றுவதை தடுப்பதற்கு விடுதலைப் புலிகள் கடுமையான மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்.

மேஜர் ஜெனரல் லக்கி அல்கம தலைமையில் 1994 ஆம் ஆண்டு குடும்பிமலை கைப்பற்றப்பட்டதை குறிப்பிடலாம். அப்போது படையினர் விடுதலைப் புலிகளின் பெய்ரூட் தளத்தை நோக்கி முன்னேறிய போது விடுதலைப் புலிகள் குறைந்தளவு எதிர்ப்பை காட்டியதுடன் வன்னிக்கு நகர்ந்திருந்தனர்.

கிழக்கின் பூகோள அமைப்பு வேறுபட்டது. அங்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒடுங்கியவை. குடும்பிமலை காடுகளும் 30 கி.மீ அகலத்தை விட அதிகமானதல்ல. எனவே தான் அங்கு படையினர் இலகுவாக முன்னேறக்கூடியதாக உள்ளது. மேலும் இந்தப் பகுதிகளுக்கு வன்னியில் இருந்தான நேரடியான வளங்கள் வழிகளும் இல்லைஇ எனவே கடுமையான மோதல்களின் போது மேலதிக வீரர்களை நகர்த்துவதில் இது தடங்கல்களை ஏற்படுத்தும்.

கிழக்கில் நிலப்பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதோஇ மோதல்களின் மூலம் நிலங்களை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டமோ விடுதலைப் புலிகளிடம் கிடையாது. வாகரைஇ கதிரவெளி போன்ற பகுதிகளில் இருந்த படையினர் தமது முகாம்களை மூடி ஜெயசுக்குறு படை நடவடிக்கைக்காக வடபகுதிக்கு சென்றதனாலேயே விடுதலைப் புலிகள் கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நிறுவியிருந்தனர்.

வடபோர் முனை நோக்கி படையினர் நகர்ந்த போது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருந்தனர். இதற்கு ஜெயசுக்குறு நடவடிக்கை சிறந்த உதாரணம். மூன்று மாதத்தில் முடிவடையும் என படைத்தரப்பால் எதிர்பார்க்கப்பட்ட நடைவடிக்கை 18 மாதம் நீடித்ததுடன் நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட படை நடவடிக்கையாகவும் அது பதிவாகியுள்ளது. இந்த நடவடிக்கையில் 3இ000-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருந்தனர். வன்னியின் பூகோள அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு சாதகமானது.

ஓமந்தையில் இருந்து பளை வரையிலான 100 கி.மீ நீளமான பரந்த நிலப்பரப்பையும் மல்லாவியில் இருந்து முல்லைத்தீவு வரையிலான அகண்ட பிரதேசத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். வன்னியில் அவர்களின் நகர்வுத்திறன் அதிகமானது. 4இ000-க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்டிருப்பதுடன்இ நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வீரர்களை சில மணிநேரங்களுக்குள் களமுனைக்கு நகர்த்தும் திறன் அவர்களிடம் உண்டு.

கடந்த இரு வாரங்களாக பெருமளவான வீரர்களையும்இ ஆயுதத் தளபாடங்களையும் மன்னார் மற்றும் ஓமந்தை மேற்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் குவித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. பூநகரிப் பகுதியிலும் அவர்கள் தம்மை பலப்படுத்தி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் விடுதலைப் புலிகள் தம்மை கெரில்லா குழுக்களாக மாற்றி அமைத்துள்ளனர். எனினும் கெரில்லாப் போரானது மரபு வழியான படையமைப்பை பெறுவதற்கான ஆரம்பப் படிமுறையாகும். பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல் அச்சங்களும் அதிகரித்துள்ளன. வடக்கில் அவர்களின் மரபுவழி போரிடும் ஆற்றல் மாற்றமடையவில்லை. ஓமந்தைக்கு மேற்குப் பகுதி மற்றும் மன்னார் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்ப்பை காட்டியிருந்தனர்.

மேலும் மடுவிற்கு கிழக்காக உள்ள பெரியதம்பனைஇ போக்கர்வன்னிஇ காளிக்குளம் பகுதிகளில் உள்ள முன்னரங்குகளை பலப்படுத்தி உள்ளதுடன் அங்கு மேலதிக வீரர்களையும் விடுதலைப் புலிகள் நகர்த்தியுள்ளனர். மடுவை கைப்பற்றுவது அரசியல் முக்கியத்துவம் மிக்கதாக அரசினால் கருதப்பட்டது. எனினும் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுக்கு மத்தியில் விடுதலைப்புலிகளின் படைப்பிரிவு ஒன்று பேராறு காட்டுப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது படையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கண்காணிப்பு பணிக்கு சென்ற இராணுவத்தின் ஆழஊடுருவும் சிறப்பு படைப்பிரிவை சேர்ந்த இரு கொமோண்டோக்கள் பேராறின் அடர்ந்த காட்டுப்பகுதியில் காணாமல் போன போது இது தெரியவந்துள்ளது.

இந்த இரு கொமோண்டோக்களும் விடுதலைப்புலிகளின் நேரடியான பதுங்கித் தாக்குதலில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. நூற்றுக்கு மேற்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வீரர்கள் பேராறு காட்டுப்பகுதியில் தரையிறங்கியுள்ளதாகவும் அவர்கள் கிழக்கில் மேற்கொள்ளப்பட உள்ள தாக்குதல்களுக்கும் அங்குள்ள விடுதலைப்புலிகளுக்கும் உதவும் பொருட்டு அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறும் வழிகளை தடுக்க படையினர் முயன்று வருகின்ற போதும் பூகோள அமைப்புஇ இராணுவப் பலம் என்பன அதற்கு சாத்தியமாகப்போவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.