Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ், முஸ்லிம் தலைமைத்துவங்கள் ஒன்றுபடுவதே அவசரத் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் தலைமைத்துவங்கள் ஒன்றுபடுவதே அவசரத் தேவை

[31 - July - 2007]

வ.திருநாவுக்கரசு

* மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்றால் வாழ்க்கைச் செலவு உயர்வானது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமாக கூடுதலான `செல்போன்' பாவனை மற்றும் மோட்டார் வாகன இறக்குமதி போன்ற வளர்ச்சி நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஆளுநர் கப்றால் அரசாங்க கட்சியின் பேச்சாளர் போல் பிரசார வேட்கையுடன் கூடிய அறிக்கைகளை விடுத்து வருவது மிகுந்த கேலிக்கூத்தானதாகும்.

ஐ.தே.க. மற்றும் ஷ்ரீ.ல.சு.க. (மக்கள் பிரிவு) இணைந்து அமைத்த தேசிய காங்கிரஸ் தனது முதலாவது ஆர்ப்பாட்ட பேரணியையும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தையும் சென்றவாரம் நடத்தியுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள நாட்டைக் காப்பாற்ற மக்கள் அணிதிரள வேண்டுமென்பதே காங்கிரஸ் விடுத்த அறைகூவலாகும். மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகையான பணத்தை வாரி வழங்கி, குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதை பகிஷ்கரிக்கச் செய்ததன் மூலம் மோசடியான முறையில் வெற்றியீட்டிய படியால் பதவி வகிக்க லாயக்கற்றவர், நாடு ராஜபக்ஷ கம்பனியால் அழிக்கப்படுகிறது என்றவாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தேசிய காங்கிரஸின் கன்னிப்பிரசார முயற்சி பிரமாண்டமானதாய் அமையப்போகின்றது என உணர்ந்த அரசாங்கம் அதனை மழுங்கடிப்பதற்கு நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் மேற்கொண்டு அதில் வெற்றியீட்டியதாகவும் பறை சாற்றியது. யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதிலும் தான்தோன்றித்தனமாக அடிக்கடி விலைவாசிகளை உயர்த்துவதிலும் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பலத்த சவால் விடப்பட்டுள்ளது என்பதை காண முடிகிறது. குறிப்பாக ஷ்ரீ.ல.சு.க. (மக்கள் பிரிவு) அணியினர் குறிப்பிடத்தக்களவு பங்கு பற்றியதன் காரணமாக அரசாங்கம் சற்று அசந்து போயுள்ளதாக கருதப்படுகின்றது.

மக்களைப் பொறுத்தவரை இவை ஒன்றும் புதியன அல்ல. உதாரணமாக 1977 இல் ஐ.தே.க. வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. சர்வ கட்சி மாநாடு கூட்டி தமிழ் மக்கள் குறைகள் நீக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், 8 இறாத்தல் தானியம் வழங்கப்படும், `தர்மிஸ்ட்' சமுதாயம் அமைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் இழுத்தடிப்புகளும் இனக்கலவரங்களும் யுத்தமும் தான் மக்களுக்கு கிடைத்தன.

தேசிய காங்கிரஸின் விஞ்ஞாபனத்தில் பொதுப்படையாக சகலருக்கும் சமமான ஜனநாயக உரிமை வழங்கப்படும் பிளவுபடாத ஒரே இலங்கைக்குள் பரந்த அதிகாரப் பரவலாக்கல் அமுல்படுத்தப்படும் எனவும், பெரும்பான்மையான மக்களின் அனுமதியுடன் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டத்தை ஏதாவது ஒரு கட்சி அல்லது குழு நிராகரித்து தொடர்ச்சியாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாயிருந்தால் சர்வதேச சமூகம் மற்றும் சமாதானத்தை விரும்பும் சகலரினதும் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் முழுமையாக நீக்கும் பொருட்டு பாரிய வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படும். விசேடமாக முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி இவ்வேலைத் திட்டம் சர்வதேச யுத்த கால சட்டதிட்டங்களுக்கேற்ப வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் என்று வரையப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றினை முன்வைக்கும் நோக்கம் விஞ்ஞாபனத்தில் பிரதிபலிக்கப்படவில்லை.

பெரும்பான்மையான சிங்கள மக்கள் பேச்சுவார்த்தைக்காக நிற்க, மாற்றுக் கொள்கை நிலையத்தின் (இகஅ) பெப்ரவரி மாத கருத்துக் கணிப்பின் பிரகாரம் 54.6% சிங்கள மக்கள் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கு இராணுவ நடவடிக்கை விஸ்தரிக்கப்பட வேண்டுமென எண்ணினராயினும், பிந்திய கணிப்பின் படி 52.9% சிங்கள மக்கள் இராணுவத் தீர்வைக் காட்டிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதையே விரும்புகின்றனர். மேலும் 57.4% சிங்கள மக்கள் விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் நிமித்தம் தற்போதைய வாழ்க்கைச் செலவைத் தாம் தாங்கிக் கொள்ள முடியுமென்று மேற்படி கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இது ஒரு உறுதியான முடிவு என்பதற்கில்லை. ஏனென்றால், வாழ்க்கைச் செலவு உயர்ந்து செல்லும் அசுர வேகத்தினைப் பார்க்குமிடத்து மக்களின் தற்போதைய அபிப்பிராயம் விரைந்து மாற்றமடையக் கூடிய சாத்தியக் கூறு அதிகம் உண்டு எனலாம்.

மத்திய வங்கி ஆளுநரின் கேலிக்கூத்து

இதனிடையில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிர்வாட் கப்றஎல் வாழ்க்கைச் செலவு உயர்வானது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமாக கூடுதலான `செல்போன்' பாவனை மற்றும் மோட்டார் வாகன இறக்குமதி போன்ற வளர்ச்சி நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஆளுநர் கப்றால் அரசாங்க கட்சியின் பேச்சாளர் போல் பிரசார வேட்கையுடன் கூடிய அறிக்கைகளை விடுத்து வருவது மிகுந்த கேலிக்கூத்தானதாகும். உதாரணமாக இலங்கை ஒரு தோல்வி அடைந்த அரசு (ஊச்டிடூஞுஞீ குணாச்ணாஞு) என்று கூறுவதற்கான இலட்சணங்கள் இங்கே கிடையாது எனவும் 2007 பொருளாதார வளர்ச்சி 7.4%, 2008க்கான வளர்ச்சி 8% என்று எதிர்பார்க்கலாம் எனவும் அவர் முன்பு குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் தலைசிறந்த உலக பொருளாதார நிபுணர் எனக் கருதப்படுபவராகிய பேராசிரியர் நோபேட் வால்ட்டர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2007 இல் 5% எனவும், 2008 இல் 6% ஆக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வண.மாதுலுவாவே சோபித தேரர் கூறியவை

தோல்வி அடைந்த அரசுக்குரிய சில குணாம்சங்கள் தொடர்பாக நோம் சொம்ஸ்கி (?ணிச்ட் இடணிட்ண்டுதூ) என்பவர் வெளிப்படுத்தியிருந்த கருத்துக்களை சென்ற வாரம் சுட்டிக்காட்டியிருந்தேன். அவை இலங்கைக்கு வெகுவாகப் பொருந்துகின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பிரபல பௌத்த அடிகளாராகிய வண.மாதுலுவாவே சோபித தேரர் சென்ற வாரம் இலங்கை மன்றக் கல்லூரியில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஐ.தே.க. மற்றும் ஷ்ரீ.ல.சு.க. ஆகிய இரு பிரதான கட்சிகளும் பொறுப்பு என்பதையும் அவர் கூறத்தவறவில்லை. இனப்பிரச்சினை தொடர்பாக வண.சோபித தேரர் வரலாற்று பின்புலத்துடன் கூடிய சில நிதானமான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

அதேநேரத்தில் சில மேலாதிக்க வாதிகள் எண்ணுவது போலன்றி ஒரு நாட்டின் இறைமையும் அரசியல் அதிகாரமும் பல்லின நாடொன்றில் சமூகங்கள் மத்தியில் பகிரப்பட வேண்டியவையே ஒழிய அவை ஒருவரால் மற்றவருக்கு வழங்கும் விடயங்கள் அல்ல என்பதையும் எடுத்துரைப்பது அவசியமாகிறது. இதனையும் வண.சோபித தேரர் சரிவர புரிந்து கொண்டுள்ளார் என எண்ணுகிறோம்.

இதுவரை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அர்த்தமுள்ள திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை. மாறாக கிழக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் வடக்கும் கைப்பற்றப்படும் என தொடர்ந்து யுத்தத்தினை நடத்தும் சிந்தனையில் திளைத்திருக்கின்றது. இலட்சக்கணக்கான இடம்பெயர்ந்துள்ள மக்களை அநாதரவாக அல்லலுறும் நிலைக்குத் தள்ளியுள்ள அரசாங்கம் குறிப்பாக கிழக்கில் சம்பூர் மற்றும் மூதூர் போன்ற இடங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் மீளக்குடியமரும் உரிமையை மறுத்து நிற்கின்றது. வடக்கு கிழக்கு எங்குமே பேரினவாத அரசாங்கங்கள் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை தன்னிச்சையாக உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கும் திட்டம் அரங்கேற்றப்படுகிறது. குறிப்பாக கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கும் திட்டம் காணி அமைச்சரால் தீவிரமாகச் செயற்படுத்தவுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆண்டாண்டு காலமாக மேற்கொண்டு வரப்பட்டதாகிய இவ்வாறான கைங்கரியத்தினை யுத்த சூழலில் வெகு தீவிரமாக நிறைவேற்றுவதற்கே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது. இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது?

சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள்

இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன. இது அவசியமற்றது என நாம் கூறவில்லை. எவ்வாறாயினும் அதற்கப்பால் தமிழ், முஸ்லிம் தலைமைகள் மேலும் காலம் தாழ்த்தாமல் கலந்துரையாடி மாபெரும் மக்கள் போராட்டங்களை முடுக்கிவிட வேண்டும். இதற்கு தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் ஆதரவும்கிட்டும். சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் வெற்றிகரமாக ஈடுபடுவதற்குரிய வாய்ப்பு அரிதாகவே உள்ளது. இன்றைய நிலையில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் கண்டன அறிக்கைகளை விடுவதிலோ, கிழக்கு மாகாணத்தின் நிலைமையை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது எனக் கூறுவதிலோ அர்த்தம் எதுவுமில்லை. தமிழ், முஸ்லிம் தலைமைகள் சிங்கள பேரினவாத அடக்கு முறைக்கெதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற விடயத்தில் நிச்சயமாக நிபந்தனைகள் இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் நிதானமான நிலைப்பாட்டில் உள்ளது வரவேற்புக்குரியதாகும். அதாவது கிழக்கில் தமிழ், முஸ்லிம், ஐக்கியம் அவசியம் கடந்த கால கசப்புணர்வுகள் நீங்க வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் தாயகம் என இரு சமூகங்களும் சிந்தித்துச் செயற்பட வேண்டுமென மு.கா.தவிசாளரும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருமாகிய பஷீர் சேகுதாவூத் அண்மையில் கூறியது மதிக்கப்பட வேண்டியதாகும். ஆக, தமிழ், முஸ்லிம் தலைமைகள் இடையறாது கைகோர்த்து செயற்பட்டு மக்களைக் களத்தில் இறக்குவது அத்தியாவசியமும் இன்றியமையாததும் ஆகும். த.தே.கூ. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் மு.கா.தவிசாளர் கூறியதற்கு ஒத்த நிலைப்பாட்டினை அடிக்கடி எடுத்துக் கூறிவந்துள்ளார். எனவே, இரு சமூகங்களும் இரணைகள் போல் செயற்பட்டு வந்த காலகட்டங்களையும் மீட்டுப் பார்த்து அதேபாங்கில் மீண்டும் செயற்பட முன்வரவேண்டும். `ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' எனும் தாரக மந்திரத்தினை தமிழ், முஸ்லிம் தலைமைகள் சிரமேற்கொண்டு செயற்படுவதே விடியலை நோக்கிய பாதையாகும்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.