Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், கப்ராலுக்கு... வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவியில் இருந்து விலகும் கப்ரால் : மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றார் ஜயந்த கெட்டகொட !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், கப்ராலுக்கு... வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பு !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது.

மத்திய வங்கியின் ஆளுநராக 2006 ஜூலை 01 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி இமாத் ஷா சுபைரிக்கு, 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் ஆளுநராக இருந்த போது, 2022 ஜனவரி 18ஆம் திகதி செலுத்த வேண்டிய முறிப் பத்திரங்கள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநராக இருந்த காலத்தில், மத்திய வங்கிக்குள் பதவிகளுக்கு தனது நெருங்கிய உறவினர்களை நியமித்ததன் மூலம் இரகசியத் தகவல்களை வெளியிட்டதன் மூலம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் இலங்கை அரசாங்கம் 10.04 பில்லியன் ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவரை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதவான், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கும் உத்தரவை பிறப்பித்திருந்தார்.

https://athavannews.com/2022/1277105

  • கருத்துக்கள உறவுகள்

அஜித் நிவாட் கப்ரால்

ஆளுநர்

governor_cabraal.png

அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக 2021 செத்தெம்பர் 15ஆம் திகதி தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்னர் 2021 ஓகத்து 12ஆம் திகதி தொடக்கம் அவர் நிதி, மூலதனச் சந்தைகள், அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவிருந்தார். இவர் 2019 நவெம்பர் தொடக்கம் 2020 திசெம்பர் வரை பொருளாதார விவகாரங்கள் மீது பிரதம அமைச்சரின் மூத்த ஆலோசகராகவும் இருந்தார்.

கப்ரால் 2006 யூலை தொடக்கம் 2015 சனவரி வரை இலங்கை மத்திய வங்கியின் 12 ஆவது ஆளுநராகவிருந்தார். இக்காலப்பகுதியின் போது இவர் பின்வரும் பதவிகளை வகித்தார்:

     - பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று ஆளுநர்
     - தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கிகளின் (SEACEN) ஆளுநர்கள் சபையின் தலைவர்
     - சார்க் நாடுகள் மத்திய வங்கி ஆளுநர்கள் மன்றத்தின் தலைவர்.

இவர் தொழில் ரீதியாக பட்டயக் கணக்காளரும் இலங்கையின் மிகவும் வயது குறைந்த பட்டயக் கணக்காளின் ஒருவராகவும் தகைமைபெற்றுள்ள அதேவேளை பட்டயக் கணக்காளர் பரீட்சைகளில் பல பரிசில்களையும் வென்றுள்ளார்.

ஆளுநராக அவர் பணியாற்றிய காலப்பகுதியின் போது அவர் மொத்த உள்நாட்டு உற்பத்தியினை ஐ.அ.டொலர் 24 பில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 79 பில்லியனாகவும்  பாதுகாப்பான, உறுதியான அத்துடன் துரிதமாக வளர்ச்சியடைகின்ற நடுத்தர வருமான வளர்ந்துவரும் சந்தைத் தேசமாக விளங்குவதற்கும் இலங்கைப் பொருளாதாரத்தினை மாற்றம்பெறச் செய்துள்ளார். இவர் பல பாரிய தேவைக்குமதிகமாக கோரிக்கைவிடுத்த நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கல்களுக்கும் தலைமைத்துவம் வழங்கியுள்ளார். ஆளுநர் கப்ராலின் வழிகாட்டலின் கீழ் குறைந்த மட்டத்தின் கீழ் பணவீக்கத்தினை உட்படுத்தி மோசமான உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் குழப்பம் நிறைந்த காலத்தில் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை எய்தி ஆற்றல்வாய்ந்த மற்றும் உறுதியான பேரண்டப் பொருளாதார அடிப்படையினை இலங்கை பேணக்கூடியதாகவிருந்தது.

கப்ரால், பொருளாதார விவகாரங்கள் மீதான சனாதிபதி ஆலோசகராகவும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டதுடன் அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தினை உருவாக்குவதில் நெருங்கிப் பணியாற்றினார். இவர் உபாய ரீதியான தொழில்முயற்சிகள் முகாமைத்துவ முகவராண்மை சபையில் பணியாற்றியதுடன் 2006 பெப்புருவரியில் தமிஈழ விடுதலைப் புலிகளுடனான ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அரசாங்கக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

அவரது அரச நியமனங்களுக்கு முன்னர் கப்ரால் தொழில் மறுசீரமைப்பு மற்றும் தொழில்களை நிதியில் ரீதியாதக மீட்டெடுத்தல், திட்டமிடல் மற்றும் நிறுவன ஆளுகை போன்றவற்றில் விசேடத்துவம்பெற்ற ஆலோசகர் ஒருவராகவும் தொழிற்பட்டார். இவர் இலங்கை பட்டாயக் கணக்காளர்கள் நிறுவனத்தினதும் தெற்காசிய கணக்காளர் சம்மேளனத்தினதும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கப்ரால் 2000ஆம் ஆண்டின் பல் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் ஏயிசன்ஹோவர் சகஉறுப்பினர் ஒருவராகவிருந்தார். 1997 தொடக்கம் 1999 வரை புனித பேதுரு கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவராகப் பணியாற்றிய அதேவேளை 2019இல் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் அவர் ஆற்றிய உன்னத சேவைகளுக்காக அவருக்கு “தேச கீர்த்தி லங்கா புத்ர” பட்டம் இராமான்ய மஹா நிக்கயா மூலம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஆளுநர் கப்ரால் “Towards a Sri Lankan Renaissance” (2002), "ලක් මවට මුතු පොටක්" (2004),  மற்றும் "The Great Bondscam Cover-up" (2019) ஆகிய புத்தகங்களின் நூலாசிரியர் ஆவார்.

இவர் பேரார்வமிக்க வாசகரும் சொல்வளமிக்க பேச்சாளருமாவதுடன் பல தனித்துவமிக்க சிந்தனைகளையும் அனுபவங்களையும் பெற்றவர் ஆவார்.

de.search.yahoo.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.